Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருளுக்குள் மூழ்கிய தேசம்-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருளுக்குள் மூழ்கிய தேசம்-பா.உதயன் 


இலங்கையின் தலைவர்கள் உண்மையான புத்தமத தலைவர்களாக இருந்திருந்தால் நாம் ஆயுதம் ஏந்தி போராடி இருக்க மாட்டோம் என்று தமிழர் விடிவுக்காய் போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் கூறி இருந்தார். One time the LTTE leader said to the media if the leader of the country is a real buddist he would not take arm struggle against government. அதேபோல் இந்த நாட்டின் பௌத்த பிக்குகளும் தலைவர்களும் உண்மையும் நீதியும் நேர்மையும்  கொண்டவர்களாக இருந்து அனைத்து இன மக்களும் பெரும் பான்மை சிங்கள மக்கள் போலவே சமத்துவத்துடனும் சம உரிமையுடனும் வாழ வழி சமைத்திருந்தால் இன்று இந்த நாடு இவ்வளவு பெரிய பாரிய பிரச்சினையை எதிர் நோக்கி இருக்காது. சோசலிசம் கொம்யூனிசம் என்று சொல்லிக்கொண்டிருந்த ஒரு ஒரு சில சோஷலிச வாதிகளை தவிர அனைத்து போலி சோஷலிசவாதிகளும் கூட இதற்கு துணையாக இன்று இந்த நாடு  இருளை நோக்கி சென்றடைவதற்கு காரணமாக இருந்தவர்கள் இவர்கள்  எல்லோரும் தான். 

பௌத்த பேரினவாதம் என்கிற பெரும் பூதத்தை வளர்த்ததோடு மாத்திரம் இன்றி நாடு சுதந்திர பெற்ற காலத்தில் இருந்து சரியான சமூக அரசியல் பொருளா தாரத்தை கட்டி வளர்க்காமல் இலஞ்சம் ஊழல் என்ற நாட்டு மக்கள் பணத்தை சுரண்டி கல்வி அறிவோ அனுபவமோ இல்லாததவர் கைகளில் நாட்டை ஆளும் பொறுப்பை ஒப்படைத்ததனால் அதன் பலனை மக்கள் இன்று அறுபடை செய்து கொண்டிருக்கிறார்கள். 

சிறந்த பொருளாதாரக் கட்டமைப்பும் அரசியல் ஸ்திரத்ததன்மையும் இல்லாமல் எந்த அவிவிருத்தியும் வெளிநாட்டு முதலீடும் சாத்தியமாகாது என்பதை அரசும் அங்கு முதலீடு செய்யவிருக்கும் நாடுகளும் புலம்பெயர் தமிழர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். அபிவிரித்தி என்று சொல்லி அந்த அரசின் மாயைக்கும் இருந்தவர்களுக் இன்றைய இலங்கை நிலைமை நல்ல உதாரணமாகும். தனியவே தங்கள் சுய லாபம் மட்டும் கருத்தில் கொண்டு இதற்காகவே இலங்கைக்கு பெரும் வட்டியுடன் கடனும் வழங்கி இலங்கையை மேலும் மேலும் கடனாளியாக்கி இருக்கின்றன கடன் வழங்கும் நாடுகள்.

அன்று பண்டா-செல்வ ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தி தந்தை செல்வா கேட்ட சமஸ்ட்டியை கொடுத்திருந்தால் பௌத்த பிக்குமாரும் சிங்களத் தலைவர்களுக்கு இதற்கு எதிராக ஊர்வலம் போகாமல் இருந்திருந்தால் இவ்வளவும் மனிதப் போரழிவுகளும் பொருளாதார அழிவும் இல்லாமல் இன்று இலங்கை இன்னும் ஒரு சிங்கப்பூராய் இருந்திருக்கும். இன்று இலங்கையின் சொத்துக்களையும் சீனாவுக்கும் இந்தியாவுக்கு தாரை வார்க்காமல் நாம் எமது காலில் நின்றிருப்போம். கை நீட்டி கடனுக்காய் பிச்சை எடுக்கும் நிலையும் இல்லாமல் இனம் மதம் மொழி கடந்து எல்லோரும் இன் நாட்டு சமத்துவ குடி மக்களாக வாழ்த்திரிப்போம். 

இந்த நாட்டை உண்மையாகா நேசிக்கும் தலைவர்களாக இவர்கள் இருந்திருந்தால் இன்று இருளும் துன்பமும் துயரமுமாக இலங்கை இருந்திருக்காது. இன்னும் உணருவர்களா இந்த நாட்டின் பௌத்த மத குருமாரும் அரசியல் தலைவர்களும். எங்கு நிற்கிறது சிங்கள தலைவர்களினது இராஜதந்திரம். மாற்றங்கள் மட்டுமே மாறாது என்பதை வரலாறு பல தடவை நிரூபித்திருக்கிறது. யுத்த வெற்றியை கொண்டாடியவர்கள் எல்லாம் இன்று வெறுமனே தோல்வியில் சென்று கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்கிறீர்கள்.

பா.உதயன் ✍️
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.