Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பில்... ஊடகவியலாளர் சிவராமின், 17ஆவது நினைவு தினம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மட்டக்களப்பில்... ஊடகவியலாளர் சிவராமின், 17ஆவது நினைவு தினம்!

மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரெட்ணம்- சிவராமின்(தராக்கி)17ஆவது  நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை)காலை 9.30 மணியளவில்  மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும்,கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இன்று மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இருநிமிட மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டு,விளக்கேற்றி,மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன் அவரின் திருவுருவப்படத்திற்கு சிரேஸ்ட ஊடகவியலாளர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவன ஈர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரான்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)இரா.சாணாக்கியன்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இந்திரகுமார் -பிரசன்னா,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன்,முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,மதப்பெரியார்கள், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள்,தமிழ்தேசிய பற்றாளர்கள் தமிழ் உணர்வாளர்கள்,மதப்பெரியார்கள், இளைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

9b5edb6e50a70a7b669c62dc784411ce_XL-1-600x400.jpg

download-14-600x400.jpg

WhatsApp-Image-2022-04-28-at-21.41.04-1-600x338.jpeg

https://athavannews.com/2022/1279148

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

படுகொலை செய்யப்பட்ட... ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழில்!

படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 17ஆம் ஆண்டு நினைவு தினமும் , ரஜீவர்மனின் 15ஆம் ஆண்டு நினைவு தினமும் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் இடம்பெற்றன.

ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு , படுகொலை செய்யப்பட்ட பின்னர்  நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

IMG_6177-600x338.jpg

https://athavannews.com/2022/1279160

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.