Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை நெருக்கடி: எந்த தேர்தலையும் நடத்தும் சூழல் தற்போது இல்லை - அரசாங்கம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: எந்த தேர்தலையும் நடத்தும் சூழல் தற்போது இல்லை - அரசாங்கம் அறிவிப்பு

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இலங்கை பொருளாதார நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இலங்கையில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் - கோப்புப்படம்

(இன்றைய (மே 4) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

நாட்டில் எந்தவொரு தேர்தலையும் நடத்தக்கூடிய சூழல் தற்போது இல்லை என, இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர், "நாட்டில் தற்போது தேர்தலை நடத்தக்கூடிய சூழல் இல்லை. காரணம் முன்னொருபோதும் இல்லாதவாறு பாரிய பொருளாதார நெருக்கடிகளை நாம் தற்போது எதிர்கொண்டுள்ளோம்.

இவற்றிலிருந்து மீள்வதற்கான வழி தொடர்பிலேயே அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

அத்தோடு மக்கள் தற்போது தேர்தலைக் கோரவில்லை. அவர்கள் தமது வாழ்வாதார பிரச்னைகளுக்கான தீர்வினையும், அத்தியாவசிய பொருட்களையுமே கோருகின்றனர்.

எதிர்தரப்பிலும் பெரும்பாலானோர் இது தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான தருணமல்ல என்று தெரிவித்துள்ளனர்" என்றார்.

'மஹிந்தவை பிரதமராக பரிந்துரைப்போம்'

 

மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA FB

பிரதமர் ஒருவரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பெயர் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என, பசில் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் யாரை அடுத்த பிரதமர் பதவிக்கு பரிந்துரைப்பது என்ற கேள்வியை கட்சி உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதில் தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஷ, "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேறு எவரதும் பெயர்கள் பரிந்துரைக்கப்படாது. மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரையே பரிந்துரைக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் என்ற வாக்குறுதியை கொடுத்தே மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டார். எனவே, மக்கள் ஆணைக்கு மாறாக செயற்பட முடியாது" என்றார்.

பஷில் ராஜபக்ஷவின் கருத்துடன் ஒரு சிலர் உடன்பட்டுள்ள போதிலும் பிறிதொரு தரப்பினர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

 

இலங்கை பொருளாதார நெருக்கடி

 

படக்குறிப்பு,

இலங்கை மக்கள் போராட்டம் - கோப்புப்படம்

குறைந்த வருமானம் பெறும் 33 லட்சம் குடும்பங்களுக்கு மூன்று மாத காலத்துக்கு விசேட நிவாரணமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், மூத்த பிரஜைகள், விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணமொன்றைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் அதற்காக 13,364 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செயற்திட்டத்தின் கீழ் அசாங்கத்திடமிருந்து கொடுப்பனவை பெற்றுவரும் மூத்த பிரஜைகளுக்கு 3,000 ரூபா மேலதிக கொடுப்பனவும், மூத்த குடிமக்களுக்கு 2,500 ரூபாய் மேலதிக கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக மேலும் 2,500 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-61316503

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.