Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் பசியோடு இருக்கிறோம்-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 நாங்கள் பசியோடு இருக்கிறோம்-

என்று தணியும் இந்த இன்னல் வாழ்வு 
சொல்ல முடியாத துன்ப வாழ்வு.

இலங்கைத் தீவின் 22 மில்லியன் மக்களின் வாழ்வு பெரும் பொருளாதார அரசியல் பிரச்சினைக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. இலங்கையின் சுதந்திரம் அடைந்த காலத்தின் பின் இதுவே முதற் தடவையாக இப்படியோர் பாரிய பிரச்சினையை இலங்கை மக்கள் எதிர் நோக்குகின்றனர். எரிக்க எண்ணெய் இல்லாமல் உண்ண உணவில்லாமல் வாழ வழி இல்லாமல் அன்று சொல்ல முடியாத துன்பத்தில் சோமாலியா இருந்தது போல் இன்று இலங்கை இருக்கிறது. நாங்கள் பசியோடு இருக்கிறோம் என்கிறார்கள் இலங்கை மக்கள். எல்லோரும் அதிகார ஆசை மதவாத அரசியல் இனவாத பேச்சு இப்படி எத்தினையாய் மதம் என்றும் இனம் என்றும் வெறுப்போடும் மனிதம் தொலைந்து சரியான கொள்கை இல்லாதவர்களின் திமிரான போக்கால் இன்று குனிந்து எங்கும் கடன் வேண்டும் நிலையாகி இந்து சமுத்திர முத்தென்று இருந்தின்று இலங்கை நிலைமாறிப் போச்சு. 

தமிழ் பயங்கரவாதிகளிடம் இருந்தும் பிரிவினை வாதிகளிடம் இருந்தும் இலங்கை மக்களையும் நாட்டையும் விடுதலை அடைய வைத்தோம் என்று கூறி வெற்றி விழா கொண்டாடிய  இனவாத தலைவர்களால் இன்று அவர்கள் விடுதலை செய்த நாட்டில் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாதவர்களாக முடங்கிப் போய் இருக்கிறார்கள். எல்லாத் தாக்கற்திற்கும் மறு தாக்கம் இருப்பது போல் எதை விதைத்தார்களோ அதையே அறுபடை செய்து கொண்டிருக்கி றார்கள்.

"முடவன் மிக வேகமாக ஓடுவதை ஒரு குருடன் பார்த்ததாக காது கேளாதவன் கூறுகிறான்" - என்று பழைய யூத பழமொழி கூறுவது போல் தம்மை தெரிவு செய்து அனுப்பிய மக்களின் அடிப்படை தேவைகளை மறந்து இன்றும் மூழ்கிக்கொண்டிருக்கும் அரசோடு ஒட்டிக் கொண்டு தோல்வி அடைந்த ஒரு அரசுக்கு ஆதரவாக இருந்து கொண்டு அது சரியான பாதையில் பயணிப்பதாக பொய் கூறிக்கொண்டு  இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருப்பது வெட்கக்கேடே. நாங்கள் தான் அனுப்பி வைத்தோம் நமக்காக பேசுங்கள் என்று நம்ம பிரதிநிதிகளை ஆனால் அவர்கள் இன்று பணத்திற்காகவும் பதவிக்காகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

வெறும் இனவாதமும் வெறுப்புமாக முழு இலங்கையையும் சீரழித்து இன்று நாடு பெரும் அரசியல் பொருளாதாரா சிக்கலுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிரு க்கிறது. இவர்களோடு முண்டு கொடுத்து நின்ற எல்லா கட்சிகளும் இடது சாரிகள் என்று தம்மை தாமே அழைத்தவர்களும் இந்த மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். சிஸ்ரம் சரி இல்லை என்று சொல்கின்றனர் மக்கள் சிஸ்ரம் சரி இல்லாமல் ஆட்சி நடாத்துபவர்களால் சரியான ஆட்சியை நடத்த முடியுமா. மாறுவார்களோ மாற்றுவார்களோ இது பெரும் கேள்விக்குறியே. விடாப் பிடியாகவும் கொடாப் பிடியாகவும் தமது பதவியை விடாமல் தக்க வைக்க விரும்புவோரால் இலங்கை தாளுமா நிமிருமா இருந்து தான் பார்ப்போம். மக்கள் போராட்டம் இன்றுடன் 30 நாளைக் கடந்தும் இன்னும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டோ அல்லது மக்கள் போராட்டம் ரீதியாகவே அரச தலைவரையும் பிரதம மந்திரியையும் பதவி விலக்குவது குறித்து இன்னும் ஒரு தீர்வு எட்டப் படவில்லை. இவர்களை பதவி நீக்கியதன் பின் எப்படி மாற்றம் ஏற்படப் போகிறது என்பது எல்லாம் ஒரு இடியப்ப  சிக்கல் போல் தான் நிலைமை காணப்படுகின்றது.

தனித்தே தான் சிங்கள மக்களின் பெரும் பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட திமிரினாலும் தமிழரை தான் வெற்றி கொண்ட நவீன துட்டகைமுனுவாக தன்னை இனம் காட்டிக்கொண்டதனால் அரசு தலைவர் அன்று அனுபவவும் அறிவும் படிப்பும் கொண்ட பொருளாதார ஆலோசகர்கள் சொன்ன அறிவுரைகள் எதையும் கேட்கவில்லை. அனைத்து மக்களும் சமத்துவதோடு வாழவும் சரியான பொருளாத கொள்கைகளை வகுக்கவும் இல்லை. ஈழத் தமிழர் பிரச்சினைக்கு கூட இன்று வரை ஒரு தீர்வு எட்டப்பட வில்லை. இன்று மக்களால் நிராகரிக்கப் பட்ட நிலையில் இந்த அரசு சட்டபூர்வமான ஆளும் தன்மையை legitimacy இழந்துள்ளது. இனி இவர்களால் தொடர்ந்து ஆட்சி நடத்துவது கஸ்ரமே. எந்த அரசும் எப்போது தமது மக்களின் ஆதரவை இழக்கிறது அப்போதே அது தோல்வியடைந்த( Fail state) அரசாக மாறி விடுகிறது.

புதிய மொந்தையில் பழைய 'கள்'..! ‘Old wine in a new bottle’ போலவே ஆளையும் மாற்றி அமைச்சரவையும் மாற்றினால் அவர்களில் காசுமரம் தானாய் முளைக்குமோ தேனும் பாலும் இனி தெருவெல்லாம் ஓடுமோ தலையணை மாற்றினால் தலையிடி தீருமோ அலாவுதீனும் அற்புத விளக்கும் இனி மந்திரத்தால் மாங்கனி பறிக்குமோ இல்லை ஜனநாயகமும் மக்கள் குரலும் வெல்லுமா இலங்கையில் இனி வரும் காலங்களின் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.

பா.உதயன் ✍️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.