Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த மீதான மக்களின் வெறுப்பின் அளவை தேசிய காங்கிரசின் பேரணி எடுத்துக்காட்டியுள்ளது: "தி எக்கொனமிஸ்ற்" சஞ்சிகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மீதான மக்களின் வெறுப்பின் அளவை தேசிய காங்கிரசின் பேரணி எடுத்துக்காட்டியுள்ளது: "தி எக்கொனமிஸ்ற்" சஞ்சிகை

கொழும்பில் ஜூலை 26 ஆம் நாள் நடைபெற்ற தேசிய காங்கிரசின் முதலாவது பொதுப் பேரணியில் அது ஏறத்தாழ 50,000 மக்களை கவர்ந்திருந்தது. இது மகிந்த அரசு மீதான நம்பிக்கையீனத்தின் அளவை வெளிக்காட்டியிருந்தது என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் "தி எக்கொனமிஸ்ற்" சஞ்சிகை தனது பத்தியில் தெரிவித்துள்ளது.

அதன் முழு விபரம் வருமாறு:

சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசு மற்றுமொரு பின்னடைவை சந்தித்துள்ளது. அரசில் இணைந்திருந்த சிறுபான்மைக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. அது உறுதியானால், அண்மைய மாதங்களில் நாடாளுமன்றத்தில் அரசிற்கு ஏற்பட்டு வரும் நெருக்கடிகளை அது மேலும் அதிகரிக்கும் அறிகுறியாகும். இது அரசிற்கான ஆதரவுகளிலும் எதிரொலிக்கலாம், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு ஆதரவளிப்பதனையும் அது பாதிக்கும்.

இப்படியான நிகழ்வுகள் சிறிலங்காவிற்கு வழமையானது, தற்போதைய அரசியல் நகர்வுகள் அரசின் உறுதித்தன்மையில் உடனடியான அல்லது இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை மூலமான தீர்வில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இதுவே அரசியலில் ஏற்பட்டுள்ள தற்போதைய மாற்றம், இருந்தாலும் தொழிலாளர் காங்கிரசின் வெளியேற்றம் உறுதியானதா அல்லது தற்காலிகமானதா என்பது தொடர்பாக உடனடியாக தெளிவற்ற நிலையே உள்ளது. இது ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணி கூட்டணிக்கு ஒரு அதிர்ச்சியைத் தரும் தற்காலிக் நடைவடிக்கை போன்றதே. இந்த பிளவை விரைவாக சீர்செய்வதற்கான பேச்சுக்கள் அரசிற்கும் தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் நடைபெற்று வருகின்றன. இருந்த போதும் அரசில் இருந்து பிரிந்து சென்றுள்ள புதிய எதிர்க்கட்சியுடனும் பேச்சுக்களை நடத்த தொழிலாளர் காங்கிரஸ் எண்ணியுள்ளது.

தொழிலாளர் காங்கிரசின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் நான்கு பிரதி அமைச்சர்களின் விலகல்கள் கேள்விக்குறியானது. அதாவது இவர்கள் அரசின் நாடாளுமன்றத்தில் இருந்து நிரந்தரமாக விலகப்போகின்றார்களா என்பது தெளிவற்றது.

இருந்த போதும் 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தேவையான மிகவும் குறைந்த உறுப்பினர்களை திரட்டுவதற்குரிய பணியை ஆளும் அரச கூட்டணியின் செயற்குழு ஆரம்பிக்கலாம். அரசு தனக்கு தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகளவான சிறிய அரசியல் கட்சிகளில் இருந்து பெற முடியும்.

ஆனால் அதற்கான ஆதரவை அரசின் போக்குடன் எப்போதும் ஒத்துப்போகாத ஜே.வி.பியிடம் இருந்து பெறலாம். தமிழ் இன எதிர்ப்பின் கடும்போக்கான இந்த கட்சி அரசின் மிகச்சிறந்த தற்காலிக கூட்டணியாக இருக்கலாம்.

தொழிலாளர் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேறியதற்கான வெளிப்படையான காரணம் அரச தலைவரின் ஆதரவாளர்களுக்கு இடையில் வாக்குவாதங்களை தோற்றுவித்துள்ளது. காங்கிரசின் நடவடிக்கை மகிந்த அரசின் ஆட்சி முறைகளில் இரு முக்கிய அம்சங்கள் தொடர்பாக கவனத்தை தோற்றுவித்துள்ளது.

முதலாவது மகிந்த குடும்பத்தின் அரசியல் தலையீடுகளின் வளர்ச்சி, அதாவது அவரது மூன்று சகோதரர்கள் அமைச்சர்களாக அல்லது அரசின் ஆலோசகர்களாக உள்ளனர். இரண்டாவது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அதன் உறுப்பினர்களை அரசில் உள்வாங்கியது அல்லது அவர்களுடன் ஒத்துப்போனது.

கடந்த ஜனவரியில் ஐக்கிய தேசியக் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசு உள்வாங்கியிருந்தது. பெருமளவான சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவல் ஏற்கனவே சிங்கள மக்களின் நலன்கொண்ட அரசிற்கு மேலும் பலம் சேர்ப்பதாகும் (சிறிலங்காவில் சிங்கள மக்களே பெரும்பான்மை இனத்தவர்). இது தமிழ் மக்கள் சார்புக் கட்சியான தொழிலாளர் காங்கிரசுக்கு அச்சத்தை உண்டுபண்ணியிருக்கலாம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சிறுபான்மை இந்திய வம்சாவளித் தமிழ் மக்களையும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தையும் பிரதிநிதுத்துவப்படுத்தும் கட்சியாகும். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியானது கடும்போக்குள்ள சிங்கள கட்சிகளை போலல்லாது மிதவாத கட்சியாக இருந்த போதும் வளர்ந்து வரும் சிங்கள இனவாதத்திற்கு மத்தியில் போராட வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற கவலை காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தொழிலாளர் காங்கிரஸ் என்ன காரணத்திற்காக அரசில் இருந்து பிரிந்தாலும், சிறிலங்காவின் மொத்த அரசியலிலும் அது குழப்பத்தையும், ஸ்திரமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவானது. தற்போது பதவியை கைப்பற்றுவதற்காக விரைவாக பரவிவரும் சாதகமற்ற அரசியல் மாற்றங்களில் இது பெரும் பகுதி.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரச பக்கம் தாவியவர்களில் பெரும்பாலானோர் தமது நலன்கள் மற்றும் அமைச்சரவை பதவிகள் ஆகியவற்றை எதிர்பார்த்தே தாவியிருந்தனர். அதனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் 54 உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவை உருவாகியுள்ளது. அது உலகிலேயே மிகப்பெரிய அமைச்சரவை என்று நம்பப்படுகின்றது.

அதில் உள்ள ஓவ்வொரு அமைச்சர்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மிகவும் சிறியவை. தனது அரசாங்கத்தை செயற்திறனாக்கும் மகிந்தவின் உத்திகள் அரசியலில் சிறிய நன்மையையே ஏற்படுத்தும்.

மற்றுமொரு குழப்பமான விடயம் என்னவெனில் அரசு எதிர்க்கட்சிக்கு செய்த அதே செயலை எதிர்க்கட்சி அரசுக்கு செய்ய முனைந்து வருகின்றது. சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்த அரசியல் கட்சியான சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. அரசுக்கு சவாலாக தேசிய காங்கிரஸ் என்னும் ஒரு பரந்துபட்ட அரசியல் கட்சிகளின் முன்னணியை உருவாக்க அது முயன்றுள்ளது.

அரச தரப்பில் இருந்து 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய காங்கிரசுக்கு தாவ தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால் அரசு பக்கம் தாவிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் மூலம் அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் உண்டு என்பதை காட்டியுள்ளது. புதிய கூட்டணிக்குள்ளும் அதே நிலைமைகள் உள்ளன.

எது எப்படி இருப்பினும், தேசிய காங்கிரஸ் ஆரம்பத்திலேயே வாக்காளர்களிடம் உள்ள தனது ஆளமையை நிரூபித்துள்ளது. கொழும்பில் ஜூலை 26 ஆம் நாள் நடைபெற்ற அதன் முதலாவது பொது பேரணியில் அது ஏறத்தாழ 50,000 மக்களை கவர்ந்திருந்தது. இது மகிந்தவில் மீதான நம்பிக்கையீனத்தின் அளவை வெளிக்காட்டியிருந்தது.

வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளே மக்களின் கோபத்திற்கான பிரதான காரணி எனினும் பாதுகாப்பும் மற்றுமொரு காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.