Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடபோர் முனையில் கடற்புலிகளை முறியடிக்க சர்வதேச உதவியை நாடும் அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடபோர் முனையில் கடற்புலிகளை முறியடிக்க சர்வதேச உதவியை நாடும் அரசு

தெற்கில் திடீர் அரசியல் மாற்றங்களேற்படலாமென்ற நிலை தோன்றியுள்ளது. அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் அரசிலிருந்து விலகிவிட எத்தனித்து வருவதால் எவ்வேளையிலும் அரசு பெரும்பான்மை பலத்தையிழந்து ஆட்சி கவிழலாமென்றதொரு நிலைமையேற்பட்டுள்ளது. இதனை ஆட்சியாளர்களும் எதிர்பார்த்திருப்பதால் அடுத்த தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியாளர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

அரசிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறுவதாக அறிவித்ததையடுத்து பாராளுமன்றம் எவ்வேளையிலும் கலைக்கப்படலாமென்றதொரு நிலைமை உருவானது. இ.தொ.கா. திடீர் பல்டி அடித்து, மீண்டும் அரசுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்ததன் மூலம் அரசு கவிழுமென்ற நிலைமை உடனடியாக இல்லாது போய்விட்டது.

மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காது சுயாதீனமாகச் செயற்படப் போவதாக இ.தொ.கா. அறிவித்துள்ளதன் மூலம், அவர்கள் எவ்வேளையிலும் காலை வாரலாமென்பதை ஆட்சியாளர்கள உணர்ந்துள்ளதால், அரசை ஸ்திரப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளில் ஜனாதிபதி இறங்கும் அதேநேரம் இன்னொரு தேர்தலை எதிர்கொள்ளவும் தயாராவார்.

தெற்கில் அரசுக்கெதிரான உணர்வலை கூடி வருகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் கொந்தளித்துப் போயிருக்கின்றனர். அன்றாட உணவுக்கே பலர் அல்லல்படுகையில் குடும்பிமலை (தொப்பிகல) வெற்றி அவர்களது பசியை போக்கிவிடாது. அடுத்த தேர்தலை எதிர்கொள்வதாயின் மேலுமொரு பெரும் வெற்றி தேவையென அரசு எண்ணுகிறது.

வடக்கே பெரும் போரை நடத்த வேண்டியிருப்பதால் யுத்தச் செலவு மேலும் மேலும் அதிகரிக்கப் போகிறது. இதனால், மக்களின் பொருளாதாரச் சுமையை இந்த அரசால் உடனடியாகக் குறைக்க முடியாது போய்விடும். இந்த நிலைமையைச் சமாளித்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டுமாயின் போர் முனையில் பாரிய வெற்றிகளைப் பெற வேண்டிய அவசர, அவசிய நிலையேற்பட்டுள்ளது.

குடும்பிமலை வெற்றியானது சாதாரணதொரு விடயம். அந்த வெற்றியை மிகவும் பெரிதுபடுத்துவதன் மூலம் இந்த அரசின் புகழை உயர்த்த முனைவதுடன் மக்களின் கவனத்தை, பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து போர்முனை நோக்கித் திருப்பிவிடலாமென அரசு கருதுகிறது. கிழக்கை புலிகளிடமிருந்து மீட்டுவிட்டதாக அரசும் படைத்தரப்பும் கூறினாலும் அங்கு நிலைமை வேறு விதமாகவேயுள்ளது.

குடும்பிமலையை பிடித்ததன் மூலம் கிழக்கை தாங்கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகவும் தற்போது கிழக்கில் புலிகளில்லையெனவும் பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குடும்பிமலையிலிருந்து புலிகள் பின்வாங்கிவிட்டாலும் புலிகள் கிழக்கிலிருந்து பின்வாங்கவில்லை. இதனை, அரச படைகளுடன் இணைந்து செயற்படும் கருணா குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.

மரபு வழிச் சமரிலிருந்து புலிகள் இங்கு கெரில்லாச் சமருக்கு மாற்றம் பெற்றுள்ளனரே தவிர வேறெதுவும் நடக்கவில்லை. படையினரின் கவனம் வடக்கில் திரும்பும் போது கிழக்கில் கெரில்லா தாக்குதல்கள் தீவிரமடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இது அங்கு நிலைமைகளை மோசமடையச் செய்யலாம். இதனாலேயே கிழக்கில் புலிகளின் நடவடிக்கைகளை எப்படியாவது கட்டுப்படுத்திவிட வேண்டுமென அரசு தீவிரம் காட்டுகிறது.

அரசியல் நெருக்கடியைச் சமாளிக்கவும் மற்றொரு தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையேற்பட்டால் அதற்காக சில இராணுவ வெற்றிகளைப் பெற்றுவிடவும் அரசு அவசரம் காட்டும் அதேநேரம், வடக்கில் பாரிய தோல்விகளைச் சந்தித்துவிடக் கூடாதென்பதிலும் அக்கறையாகவுள்ளது.

புலிகளும் இதனை நன்குணர்வர். அதனால், வடக்கில் இடம்பெறப்போகும் போருக்காக அவர்களும் நன்கு தயாராகி வருகின்றனர். யாழ். குடாவிலிருந்து முன்னர் பின்நகர்ந்தது போன்றோ, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறையிலிருந்து பின்நகர்ந்தது போன்றோ வன்னியில் ஒரு அடிகூட பின்னகர முடியாது. அவ்வாறானதொரு நிலைமை வடக்கை பறித்துவிடுமென்பதை அவர்கள் நன்குணர்வர்.

வடபகுதிப் போர் இலங்கைப் படையினருக்கு மிகப்பெரும் சவாலாயிருக்கும்- இங்கு புலிகளின் ஆட்பலமும் ஆயுத பலமும் குவிக்கப்பட்டிருப்பதுடன் கடற்புலிகள் இங்கு நன்கு பலமுடனிருப்பதால் அரச படைகள் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அடுத்து வரப்போகும் போருக்காக வன்னியிலும் மணலாறிலும் இராணுவக் கட்டளைத் தளபதிகள் அவசர அவசரமாக மாற்றப்பட்டுள்ளனர்.

வடபகுதிச் சமரில் கடற்புலிகளை இலக்கு வைப்பதில் அரசும் படைத்தரப்பும் தீவிரம் காட்டுகின்றன. கடற்படையை பெரிதும் பலப்படுத்தி வரும் அரசு இந்தியாவின் ஆதரவுடன் கடற்புலிகளின் நடவடிக்கைகளை முடக்குவதிலும் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கேற்ப இந்தியாவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடற்புலிகளுக்கெதிராக தீவிரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளது.

புலிகளுக்கான ஆயுதக் கப்பல்கள் வடக்கே வருவதைத் தடுக்கும் தீவிர முயற்சிகளில் இலங்கை - இந்திய கடற்படைகள் தீவிரம் காட்டுகின்றன. வடபகுதிக் கடற்பரப்பை கடற்புலிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடச் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் அரசு தீவிரம் காட்டுகிறது.

ஆசியானில் இலங்கையும் இணைந்துள்ளது. இலங்கையின் கடற்பரப்பை கடற்புலிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஆசியான் நாடுகள் உதவ வேண்டுமென அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பினூடாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களுக்கு கடற்புலிகள் மிகப்பெரும் அச்சுறுத்தலாயிருப்பரென இலங்கை எச்சரிப்பதுடன் இந்தக் கடற்பிராந்தியத்தில் வல்லரசுகளின் கடற்படைகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க, சீன, அவுஸ்திரேலிய அரசுகள் இந்தக் கடற்பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென ஆசியான் மாநாட்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கோரிக்கை விடுத்ததன் மூலம் சர்வதேசத்தின் உதவியுடன் கடற்புலிகளை சமாளித்து விட்டால் வடபகுதி போர்முனையில் சுலபமாக வெற்றிபெற்று விடலாமென அரசு கருதுகிறது.

இவ்வாறு சர்வதேச கடற்படைகளின் உதவியைப் பெற இலங்கை முற்படுவது இந்தியாவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் தானே வல்லரசென இந்தியா மார்தட்டி வருகையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அந்நிய கடற்படைகள் ஆதிக்கம் செலுத்த முற்படுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது.

இலங்கை அரசின் இந்தக் கோரிக்கை இந்தியாவை சினமடையச் செய்தாலும், கடற்புலிகளின் அச்சுறுத்தலிலிருந்து இலங்கையை விடுவித்தால் வல்லரசுகளின் கடற்படைகளை இந்தக் கடற்பிராந்தியத்தினுள் நுழையவிடாது தடுத்துவிடலாமென இந்தியா கருதுகிறது. இதனால், கடற்புலிகளுக்கெதிராகவும் விடுதலைப்புலிகளுக்கெதிராகவ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.