Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹொட்டல் ரூமில் இலங்கை தமிழ் பெண்ணின் சடலம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமதி. வசந்தி தங்கராஜா (வயது 38) என்பவர் அவர் தங்கியிருந்த ஹொட்டல் ரூமில் நேற்று வியாழக்கிழமை பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாக பிரேதபரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது..... இதன் நிமித்தம் இவரது கணவன் தங்கராஜாவை பொலிசார் தடுத்து வைத்துள்ளனர்.

Lankan woman found dead in hotel room

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னையில் இலங்கை தமிழ்ப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை

[Friday August 10 2007 07:15:42 PM GMT] [virakesari.lk]

சென்னையில் இலங்கை தமிழ்ப் பெண் ஒருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாகராஜ் வசந்தி (வயது 32) என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார். சென்னை, பாண்டி பஜாரில் உள்ள லொட்ஜ் ஒன்றில் இச்சம்பவம் புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

கணவரே குறித்த பெண்ணை கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இலங்கையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). இவரது மனைவி வசந்தி (வயது 32). இவர்களுக்கு சபீதா (வயது 17) என்ற மகளும், மனோ (வயது 7) என்ற மகனும் உள்ளனர். இலங்கை அகதிகளான இவர்கள் கடந்த ஒரு வருடமாக ஜெர்மனியில் தங்கி வசித்து வருகின்றனர். ஜெர்மனி குடியுரிமையும் பெற்றுள்ளனர்.

நாகராஜ் தனது குடும்பத்தினருடன் சென்னையை சுற்றி பார்க்க ஆசைப்பட்டார். அதன்படி, கடந்த வாரம் தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் அவர் சென்னை வந்தார். பின்னர் பாண்டி பஜாரில் உள்ள ஒரு லொட்ஜில் அறை எடுத்து அவர்கள் தங்கினர்.

புதன்கிழமை இரவு சென்னையை சுற்றி பார்த்து விட்டு லொஜ்ஜிற்கு சென்றனர். பின்னர் அனைவரும் படுத்துத் தூங்கினர். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை வசந்தி மட்டும் படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் நீண்ட நேரமாக தூங்கிக் கொண்டிருந்தார். அவர் எழுந்திருக்கவில்லை. வசந்திக்கு உயிர் இருக்கிறதா? என்று அவரது மூக்கின் மேல் விரலை வைத்து பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நாகராஜ் பாண்டி பஜார் பொலிஸுக்கு தகவல் கொடுத்தார். பொலிஸாரிடம் வசந்தி மாரடைப்பில் இறந்திருக்கலாம் என்று நாகராஜ் தெரிவித்தார். இருந்தாலும் இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தும்படி துணை கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார். உதவி கமிஷனர் சலேத் ராஜ், இன்ஸ்பெக்டர் தென்னரசு ஆகியோர் வசந்தியின் சடலத்தினை கைப்பற்றி பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வியாழக்கிழமை மாலை வசந்தியின் சடலம் டாக்டர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் வசந்தி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. எனவே பொலிஸார் உஷாரானார்கள். உடனடியாக நாகராஜை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் நள்ளிரவில் வசந்தியுடன் ஏற்பட்ட தகராறில் கழுத்தை நெரித்து கொன்றதாகவும் பின்னர் காலையில் அவர் மாரடைப்பில் இறந்ததாக நாடகமாடியதாகவும் தெரிவித்தார். இதன்பேரில் நாகராஜை பொலிஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.