Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேசத்தின் பிரதிபலிப்பு தெற்கை உசுப்பேற்றுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-08-10

சர்வதேசத்தின் பிரதிபலிப்பு தெற்கை உசுப்பேற்றுகிறது

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தை, இங்குள்ள பௌத்த - சிங்கள பேரினவாதிகளின் கைகளில் சிக்கியுள்ள அரசுத் தலைமை எவ்வாறு கையாளுகின்றது என்பது இப்போதுதான் சர்வதேச சமூகத்துக்கு உண்மையாக - உறைப்பாக - புரியத் தொடங்கியிருக்கின்றது.

மேலாண்மைத் திமிரோடு சிறுபான்மையினரான தமிழர் மீது பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரச ஒடுக்கு முறையை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டிருப்பதால் அதனிடமிருந்து 'சூடான' பிரதிபலிப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

அதனால் தென்னிலங்கை பௌத்த - சிங்களப் பேரினவாத சக்திகள் சர்வதேச சமூகத்துக்கு எதிராகத் துள்ளிக் குதிக்கவும் ஆரம்பித்து விட்டன.

தமிழர் தரப்பின் விடுதலைப் போராட்ட சக்தியான தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாகச் சித்திரித்து, அந்தப் பட்டியலில் சேர்த்து, அதைத் தடைசெய்யும் நடவடிக்கையை இதே சர்வதேச சமூகம் மேற்கொண்டபோது, துள்ளிக்குதித்து, குதூகலத்தோடு ஆரவாரமாக வரவேற்ற தென்னிலங்கை, அரசின் அதே விவகாரத்தை - அரசபயங் கரவாதத்தை - சர்வதேச சமூகம் கணிப்பிடத் தொடங்கி, அதன் பிரதிபலிப்புகளை வெளிப்படுத்த ஆரம்பித்ததும் மறுபுறமாக சீறத் தொடங்கியிருக்கின்றன.

அரச பயங்கரவாதத்தைச் சுட்டிக்காட்டி அதற்கு எதிராக சர்வதேச சமூகம் முன்வைக்கும் குற்றச்சாட்டை "இலங்கையின் 'சட்டரீதியான' அரசுக்கு எதிரான சதி நடவடிக்கை!'' என வர்ணிக்கின்றார் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் புஷ் நிர்வாகம் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதைத் தட்டிக்கேட்க முடியாத மனித உரிமைகள் அவதானிப்பு மையம் போன்ற சர்வதேச அமைப்புகள், இலங்கை அரசுக்கு எதிராக மட்டும் அத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது திராணியற்ற செயல் எனச் சீறியிருக்கின்றார் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா.

தனது இந்த வாதத்தின் மூலம் இலங்கை அரசு தமிழர்களுக்கு (அல்லது புலிகளுக்கு) எதிராக பயங்கரவாதக் குற்றங்களை - மனித உரிமை மீறல் குற்றங்களை - இழைக் கின்றது என்பதை வெளிப்படையாகக் கூறாமலேயே ஒப் புக்கொள்கின்றனர் ஜே.வி.பியினர் என்பது இங்கு கவனிக் கத்தக்கது.

""மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அரசு, தனக்குரிய - சட்டரீதியான முறைகளில் விசாரிக்கின்றது என்பதைத் தெளிவுபடுத் தும் போது, இதில் சர்வதேச சக்திகள் ஏன் முந்திக்கொண்டு தலையிடுகின்றன?'' - என்றும் ஜே. வி. பி. தலைவர்கள் விசனிக்கின்றார்கள்.

நல்லது. தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்து 21 மாதங்களாகிவிட்டன. அவரது ஆட்சி ஏற்பட்ட நாள் முதலே நாட்டில் மனித உரிமைகள் பேணும் நிலைமை மோசமடைந்து வருகின்றது. குறிப்பாகத் தமிழர்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறை தீவிர மடைந்திருக்கின்றது. ஆட்கடத்தல்கள்,வல்வந்தமாகக் காணாமற் போகச் செய்தல்கள், படுகொலைகள், கப்பம் அறவிடல் என்று தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் எல்லை மீறியிருக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு விதமான நியாயப்பாடுகள் தென்னிலங்கையால் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய மனித உரிமை மீறல்கள் 'பயங்கரவாதி களால்' புரியப்படுவனவாக - அல்லது 'பயங்கரவாதி களுக்கு' எதிராக மட்டும் புரியப்படுவனவாக சித்திரிக்கப் படுகின்றன. அல்லது இவை குறித்து விசாரித்து அவற்றுக்கு காரணமான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின் றன என அரசுத் தரப்பால் திரும்பத் திரும்ப விளக்கங்கள் கூறப்படுகின்றன.

உதட்டளவில் கூறப்படும் இந்த விளக்கங்களின் - உள்ளார்த்தங்களை - நியாயங்களை - உண்மைகளை - சர்வதேசம் சாவகாசமாகப் பொறுத்துப் பொறுத்துப்பார்த்து, நன்கு புரிந்துகொண்ட நிலையிலேயே இப்போது தனது அதிருப்தியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தும் கட்டத்துக்கு வந்தி ருக்கின்றது.

வல்லரசுகள் பிறதேசங்களில் புரியும் - அல்லது புரிந்தவை எனக் கூறப்படும் - மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி, தனது மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைத் தென்னிலங்கை சர்வதேச மட்டத்தில் நியாயப்படுத்திவிட முடியாது.

அதேபோல, தென்னிலங்கையினால் 'இலங்கைத் தீவின் பயங்கரவாதிகள்' எனச் சித்திரிக்கப்படுகின்ற தரப் பினால் புரியப்பட்டவை என்று கூறப்படும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி, சட்டரீதியான அரசு எனத் தன்னை அழைக்கும் இலங்கை, தனது மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி விடவும் முடியாது.

இத்தகைய பொருத்தமற்ற நியாயங்களைப் பொருட் படுத்துவதற்கும் அதைக் கேட்டு வாய் அடங்கிப் போய் மௌனம் காப்பதற்கும் - சர்வதேச சமூகம் ஏமாளிகளின் கூட்டம் அல்ல.

கொழும்பின் இந்த ஏமாற்று எத்தனங்கள் எத்தனை நாட்களுக்குத் தான் பலிக்கும்? மனித உரிமை மீறல்களைத் தடுக்கவும், அவற்றைப் புரிந்தோரை சட்டத்தின் முன் நிறுத்தவும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின் றன என்ற கொழும்பின் இழுத்தடிப்பு சமாதானம் இப்போது காலாவதியாகிப் புளித்துப் போய்விட்டது. செயலில் - யதார்த்தத்தில் எதுவுமே இல்லை என்பதையும் களத்தின் உண்மை - மெய்மை - நிலையையும் புரிந்து கொண்டுள்ள சர்வதேச சமூகம், தனது அதிருப்தியை மெல்லக் கசிய விடத் தொடங்கியிருக்கின்றது. அதைத் தாங்க முடியாமல் தென்னிலங்கை துடிக்கின்றது.

போகப்போக இது இன்னமும் சூடாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

நன்றி - உதயன்

இலங்கையின் சிறுபான்மை இனத்திமேல் சர்வதேசத்திற்கு அக்கறை என்றுமே இருக்கப்போவதில்லை. மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும்போது இப்படியான சில நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

மற்றப்படி சர்வதேசம் நேர்மையாகவோ நியாயமாகவே நடந்துகொள்ளும் என எதிபார்க்க முடியாது.

உண்மைதான் இணையவன் சர்வதேச சமூகம் ஒரு சாக்கடை கொசோவா பிரச்சினையில் அக்கறை காட்டும் சர்வதேசம் குர்திஸ் இன மக்களுக்காக ஈராக்கில் போராடியதாக கூறும் சர்வதேசம் குர்திஸ் மக்களுகளின் கொடுமைகாக சதாமை தூக்கிலிட்ட சர்வதேசம் டட்லி சேனநாயக்கா முதல் மகிந்தவரை கொலைகளையே புரிந்து வரும் இலங்கை அரசியல் தலமைகளை இன்னும் கொலைகளை செய்ய சொல்லி உசுபேத்துது

திருமலை உங்களுக்குதான் என புலிகள் சொன்னால் காணும் சர்வதேசம் பல்டி அடிக்கும் ஆனால் புலிகள் அரசியல் வங்குரோத்து நிலையில் இல்லை ஆதலால் மகிந்தவுக்கு உசுபேத்தி தன் ஆயுத ஏற்றுமதியை செயுது இது புரியாத சிறீலங்கா அரசியல் தலமை நாட்டை பொருளாதார வீழ்சியை கொன்டு செல்வதோடு மட்டுமல்ல இன முரண்பாட்டை இன்னும் அதிகரிகின்றன என்பதே உண்மை

புலிகளை யாரும் உசுபேத்தவும் முடியாது உசுபேற்றிய வகையில் ஆடும் பழக்கமும் புலிகளுக்கு இல்லை புலிகள் ஓங்கு சிங்களத்தின் தலையில் குத்தும் போது உசுப்பல் எல்லாம் அடங்கி விடும் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இன்றைய நகர்வுகள் தெளிவாக க்டாடுகின்றன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.