Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு கடத்தல் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் இராணுவத்தினர்- கருணா குழுவினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு கடத்தல் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் இராணுவத்தினர்- கருணா குழுவினர்: கண்காணிப்புக் குழு

[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 14:50 ஈழம்] [சி.கனகரத்தினம்]

கிழக்குப் பிரதேசத்தில் கடத்தல் சம்பவங்களில் சிறிலங்கா இராணுவத்தினரும், துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் திருக்கோவிலில் 45 அப்பாவி பொதுமக்களை கருணா குழுவினர் தடுத்து வைத்ததாகவும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

ஜூலை 30- ஓகஸ்ட் 5 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் அறிக்கை:

கிழக்குப் பிரதேசத்தில் கடத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்தும் கண்காணிப்புக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கடத்தப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. அடையாளம் தெரியாத குழுவினர் 4 பேரை கடத்தியுள்ளனர். இதில் 2 சம்பவங்களில் சிறிலங்கா காவல்துறையினரைப் போன்ற உடை உடுத்தியோர் ஈடுபட்டுள்ளனர். மற்ற இரு சம்பவங்களில் கருணா குழுவினரையும் சிறிலங்கா இராணுவத்தினரையும் தொடர்புபடுத்தி பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் 3 கடத்தல் சம்பவங்களில் கருணா குழுவினரும் மற்றொரு சம்பவத்தில் சிறிலங்கா இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

ஓகஸ்ட் 31 ஆம் நாள் பெரியவெளியில் 46 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மூதூர் மக்களிடத்தில் இன்னமும் இயல்பு வாழ்க்கை உருவாகவில்லை. நிலையற்ற பாதுகாப்பு நிலைமைகளால் வருவாய் செயற்பாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலில் கருணா குழுவின் அலுஅலகத்தில் ஓகஸ்ட் முதலாம் நாள் 45 பொதுமக்களை பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாக கண்காணிப்புக் குழுவிடம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ். கோட்டையிலிருந்து பூநகரி மற்றும் முகமாலை நோக்கி பலமுறை எறிகணைத் தாக்குதல் நடத்துள்ளன.

வவுனியா பம்பைமடு பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி இந்த வார காலப்பகுதி முழுமையும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை இராணுவத்தினர் மேற்கொண்டனர். சில எறிகணைகள் வன்னியின் வடக்குப் பகுதியிலும் வீழ்ந்துள்ளன.

ஜூலை 30 ஆம் நாள் முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் சிறிலங்கா கடற்படையினர் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 31 ஆம் நாள் மாசேரி பகுதியில் நிகழ்ந்த கிளைமோர் தாக்குதல்களில் 3 சிறிலங்கா இராணுவத்தினரும் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மன்னாரை அண்மித்த பகுதியில் ஓகஸ்ட் 3 ஆம் நாள் நிகழ்த்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் இரு கிளைமோர் தாக்குதல்கள் நிகழ்த்தபட்டுள்ளன. யாழில் ஜூலை 30 ஆம் நாள் அன்றும் வன்னி பள்ளமடுவில் ஓகஸ்ட் 4 ஆம் நாள் அன்றும் கிளைமோர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

மன்னாரில் ஓகஸ்ட் 3 ஆம் நாள் சிறிலங்கா இராணுவத்தினரின் பதுங்குகுழிகளை நோக்கி சிறிய வகை ஆயுதங்கள் மூலம் புலிகள் தாக்குதல் நடத்தினர்.

யாழ்ப்பாணத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வார காலப்பகுதியில் 10 படுகொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனிடையே மாவட்டத்தில் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் மக்களினது நாளாந்த வாழ்க்கை மற்றும் பிரதேச பொருளாதாரம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

ஜூலை 31 ஆம் நாள் மூவர் யாழில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். யாழ். நகரத்தில் இரு வேறு தனித்தனி சம்பவங்களில் 42 மற்றும் 21 வயது மதிக்கத்த இருவர் கொல்லப்பட்டனர். 42 வயது மதிக்கத்தக்க நபர் ஈ.பி.டி.பி.யினருடன் தொடர்புடையவர். அதே நாளில் திருநெல்வேலி பகுதியில் 21 வயது மதிக்கத்தக்க நபர் கொல்லப்பட்டார்.

ஓகஸ்ட் 2ஆம் நாள் மேலும் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். திருநெல்வேலியில் ஒருவரும் யாழ். நகரில் இருவரும் கொல்லப்பட்டனர். கொக்குவில் பகுதியில் 22 வயது ஊடகவியலாளர் மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமே பொறுப்பு என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

ஓகஸ்ட் 3 ஆம் நாள் திருநெல்வேலியில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் ஜூலை 31 ஆம் நாள் 22 வயதுள்ள இளைஞர் ஒருவர் மாசேரி பகுதியிலும் ஓகஸ்ட் 2 ஆம் நாள் யாழ். மாநகர சபைக்குள் 25 வயது மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்திலிருந்து தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளன. இரண்டு சம்பவங்களுக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் காரணம் என்றும் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஜூலை 31 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ளுர் கண்காணிப்புக் குழுவினரின் கூட்டத்தில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பங்கேற்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பின்னர் முதல் முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்றனர். யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, யாழ். நகருக்குள் நுழைவதில் உள்ள சிரமங்கள், அதிகரித்து வரும் இராணுவ சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள், மீன்பிடித் தடைகள் உள்ளிட்டவைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசத்தில் இந்த வார காலப்பகுதியில் 6 கிளைமோர் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கிழக்கில் தம்பலகாமத்துக்கு அண்மித்த பகுதியில் ஓகஸ்ட் முதலாம் நாள் சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் 3 விடுதலைப் புலி போராளிகள் உயிரிழந்திருப்பதாகவும் 4 பொதுமக்கள் படுகாயமடைந்ததாகவும் கண்காணிப்புக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸட் 2 ஆம் நாள் கொக்கட்டிச்சோலையில் காவல்துறையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. எவருக்கும் காயமில்லை.

ஓகஸ்ட் 3 ஆம் நாள் வெல்லாவெளியில் சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

வடபகுதிக்கு விடுதலைப் புலிகள் நகர்வதைத் தொடர்ந்து நிலாவெளியிலிருந்து சிறிலங்கா கடற்படையினர் எறிகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்போது பாரிய அளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று சிறிலங்கா கடற்படையினர், கண்காணிப்புக் குழுவினரிடம் தெரிவித்தனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது

http://www.eelampage.com/?cn=32977

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.