Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதே தெம்போடு வந்திருக்கிறேன்: டி.ராஜேந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதே தெம்போடு வந்திருக்கிறேன்: டி.ராஜேந்தர்

di.gif

உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த டி.ராஜேந்தர் இன்று (ஜூலை 22) சென்னை திரும்பினார். அப்போது பழைய தெம்போடு வந்திருப்பதாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.
நடிகர், இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட டி.ராஜேந்தர் கடந்த மே மாதம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். முதலில் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். டி.ராஜேந்தருக்கு ஹார்ட்டில் பிளாக் இருப்பதுடன் வயிற்றில் புற்று நோய் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள் இந்த இரு நோய்க்கும் இங்கு சிகிச்சை அளிப்பதை விட அமெரிக்காவில் சிகிச்சை பெற்றால் நன்றாக இருக்கும் என அறிவுரை வழங்கினர்.
அதன்படி தந்தைக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க டி.ஆரின் மகனும், நடிகருமான சிம்பு முதலில் அமெரிக்கா சென்றார். அங்கு சிகிச்சை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தார். அதுபோன்று தமிழகத்திலிருந்து அமெரிக்கா புறப்படுவதற்கு பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட நடைமுறைகளும் முடிந்து ஜூன் 14ஆம் தேதி இரவு அமெரிக்கா புறப்பட்டார் டி.ராஜேந்தர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ இறைவன் மீது நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் உங்களை எல்லாம் வந்து சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
அதன்படி அமெரிக்கா சென்ற அவருக்கு நல்ல படியாக சிகிச்சை முடிந்தது. அறுவை சிகிச்சை செய்துள்ளதால் சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி தனது மனைவி உஷா, மகன் சிம்பு, குறளரசன், பேரக்குழந்தை ஆகியோருடன் அமெரிக்காவில் தங்கி ஓய்வெடுத்தார்.
டி.ராஜேந்தர் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. சிகிச்சை முடிந்ததால் முன்கூட்டியே சூட்டிங்க்காக சென்னை கிளம்பினார் சிம்பு. அப்போது, “கிளம்புகிறேன்… உடம்ப பாத்துக்கோங்க” என்று கூறி டி.ராஜேந்தரை சிம்பு கட்டிப்பிடிக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் டி.ராஜேந்தர் இன்று (ஜூலை 22) காலை 4 மணிக்குச் சென்னை திரும்பினார்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டி.ராஜேந்தர் என்றால் எல்லோரும் தன்னம்பிக்கை என்று சொல்வார்கள். நான் இந்த இடத்தில் இன்று நிற்கிறேன் என்றால் அதற்கு இறைவன் அருள்தான் காரணம். என்னுடைய கடவுள் நம்பிக்கைதான் காரணம். அதோடு என்னுடைய தமிழக மக்கள், ரசிகர்கள் பிரார்த்தனை செய்த பலனால் தான் இன்று அதே தெம்போடு, உணர்வோடு வந்திருக்கிறேன். தமிழகத்திலேயே சிகிச்சை பெறலாம் என்று சொன்ன போது சிம்பு வற்புறுத்தலின் பேரில் அமெரிக்காவுக்குச் சென்றேன். அங்கு அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தில் இன்றைக்குத் தலைவராக இருக்கக் கூடிய பாலாசாமிநாதன், மருத்துவர் மகேஷ் உள்ளிட்டோர் என் மீது காட்டிய அன்பை வார்த்தையால் கூற முடியாது. அமெரிக்காவில் இருக்கின்றேனா இல்லை என்றால் தமிழகத்தில் இருக்கின்றேனா எனத் தெரியாத அளவுக்கு என் மீது அன்புகாட்டினர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “விடியற்காலையில் இங்கு வந்திருக்கிறேன். சிகிச்சை பெற்று நன்றாகிவிட்டது என் இதயம். நான் இன்று எதிர்கொண்டிருப்பது இந்த உதயம். இந்த வேளையில் லட்சிய திமுக சார்பில் எனக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன். ஊடகத்தைச் சார்ந்தவர்கள் வந்திருப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை.
நான் அமெரிக்கா செல்வதற்கு உறுதுணையாக இருந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் காட்டிய அன்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
சிம்புவின் திருமணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த டி.ராஜேந்தர், “இருமனம் ஒன்று பட்டால் திருமணம். கடவுள் எழுதியது தான் நடக்கும். காலச்சக்கரம் சுழல ஆரம்பித்தால் கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள் மேலே இருப்பவர்கள் கீழே வருவார்கள் . கல்யாணத்தை இறைவன் தான் நிச்சயிக்க வேண்டும், மனிதனால் நிச்சயிக்க முடியாது. சிம்புவின் நல்ல மனதுக்கு எங்கள் இல்லத்திற்கு நல்ல குணமுடைய திருமகள், மருமகள் வருவாள் கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது” எனப் பேட்டியை நிறைவு செய்து வீடு திரும்பினார்.
 

https://minnambalam.com/d-rajender-returned-home-after-treatment-in-america/

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.