Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு நோக்கிய பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்பில்லை - போரியல் ஆய்வாளர்கள்

Featured Replies

வடக்கு நோக்கிய பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்பில்லை - போரியல் ஆய்வாளர்கள்

ஸ்ரீலங்கா இராணுவம் வடக்கு நோக்கிய பாரிய படை நடவடிக்கை ஒன்றை உடனடியாக ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என போரியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கை தக்கவைப்பதற்கு பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பாரிய படை நடவடிக்கை ஒன்றை வடக்கில் ஆரம்பிப்பதற்கான ஆளணி பற்றாக்குறை தோன்றியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பருவ மழை ஆரம்பித்துள்ளதால் படை நடவடிக்கைகக்கு ஏற்ற சூழ்நிலையும் ஸ்ரீலங்கா படைகளுக்கு கிடைக்காது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா படைகள் வடக்கில் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு பெருமளவான யுத்த தாங்கிகளை ஈடுபடுவத்துவதற்கே திட்டமிட்டுள்ளனர்.

யுத்த தாங்கிகளின் அணி ஒன்றை முன்னிறுத்தி விமானப்படையின் ஆதரவுடன் படை நடவடிக்கையினை வன்னி நோக்கி இரு முனைகளில் ஆரம்பிப்பதே ஸ்ரீலங்கா படைகளின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை விடவும் ஏ 9 நெடுஞ்சாலையை கைப்பற்றி குடாநாட்டில் உள்ள படையினருடன் தரைவழித் தொட்ர்பை ஏற்படுத்துவதே ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என தெரியவந்துள்ளது.

குடாநாட்டை விடுதலைப் புலிகள் கைப்பற்றும் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்தால் நிலத்தொடர்பற்று தனித்து விடப்பட்டுள்ள படையினர் முற்றாக ஆழிக்கப்பட்டு விடுவார்கள் என்று அலங்கா படைதரப்பு அச்சமடைந்துள்ளது.

அவ்வாறான நிலை ஏற்படுவதை தடுப்பதற்காகவே ஏ 9 நெடுஞ்சாலையை கைப்பற்றி குடாநாட்டிற்கு தரைவழிப் போக்குவரத்தினை ஏற்படுத்த படைத்தரப்பு முயல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் புதியதொரு தாக்குதலை ஆரம்பிபத்தை விடவும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே படையினரின் முக்கிய குறிக்கோளாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவப்பெயாச்சி காலம் முடிவடையும் போது புதிதாக படைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களை கிழக்கில் நிலை நிறுத்தி விட்டு கிழக்கில் நிலைகொண்டுள்ள படையினரையும் வடக்கின் கள முனைகளில் ஈடுபடுத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி : பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

வழமையான ஞாயிற்றுக்கிழமை ஆய்வுகள்.. எதையும் சரியாகக் கணிக்கமுடியாததால் எல்லாத் தெரிவுகளையும் எழுதுகின்றார்கள். இராணுவம் பெரிய தாக்குதலை வடக்கில் மேற்கொள்ளாவிட்டால் பொருளாதார சிக்கல்களால் ஏற்படும் சிங்களவரின் எதிர்ப்புக்களை மகிந்தவால் சமாளிக்கமுடியாது என்பதை இத்தகைய "ஆய்வுகள்" கருத்தில் கொள்வதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை போன்று வன்னியில் புலிகளை பின்தள்ள முடியாத நிலை

வீரகேசரி நாளேடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் வலுவான பிரதேசமாக விளங்கும் வன்னியில், கிழக்கைப் போன்று இலகுவாகப் புலிகளை பின்தள்ள முடியாததோர் நிலைமை இருப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.போதியளவு ஆளணி படை பலம் இன்மையும், பருவகால மழையும் இந்நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பதாக இராணுவ ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு கிழக்கு மாகாணத்தை புலிகளிடமிருந்து இராணுவம் மீட்டதைத் தொடர்ந்து, புலிகளின் படை பலமிக்கதும் "சிற்றரசு' போன்று செயற்பட்டு வருவதுமான வன்னிப் பிராந்தியத்தின் புலிகளின் தளங்களின் மீது தாக்குதலை நடத்த திட்டமிட்டது.

எனினும் அக்டோபர் மாதத்தில் பருவகால மழைவீச்சி ஏற்படுமாதலால் தாங்கிகள் மற்றும் பாரிய ஆயுதங்களை நகர்த்தி செல்வது மிகவும் கடினமாகவே அமையும். அத்துடன் மழை, சகதிக்குள் வாகனங்கள் புதையுமாதலால் இந்நடவடிக்கை கஷ்டமானதாகவே அமையும் என பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ களநில அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

எனினும் பருவபெயர்ச்சி கால மழை காலம் முடியும் வரை சிறு அளவிலான இராணுவ நடவடிக்கைகளின் சாத்தியம் குறித்து அவர் மறுக்கவில்லை.

கிழக்கில் தமக்கு ஏற்பட்ட இழப்பை புலிகள் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், தாக்கிவிட்டு தப்பிச் செல்லும் தந்திரோபாயத்தை அவர்கள் கைவிடவில்லை.

""இதேவேளை நாம் கைப்பற்றிய பிரதேசத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமானால் பெருமளவு படையினரைச் சேவையில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் அவர்கள் சிறு குழுக்களை அனுப்பி, எம்மை தொந்தரவு படுத்துவார்கள் என சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.