Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவேளை இந்தியா துரிதமாக உதவியது - சீனா உதவிக்கான குரலிற்கு பதிலளிக்கவில்லை- சமந்தா பவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு இந்தியா துரிதமாக உதவியது ஆனால் உதவிக்காக விடுக்கப்பட்ட வேண்டுகோள்களிற்கு சீனா பதிலளிக்கவில்லை என யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சமந்தா பவர் அங்கு இதனை தெரிவித்துள்ளார்.

FYqU-OlVEAExncw.jpg

புதுடில்லி ஐஐடியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான உதவும் மிக முக்கியமான நடவடிக்கைகளுடன் இந்தியா துரிதமாக பதில்நடவடிக்கையில் ஈடுபட்டது என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சீனா கணிசமான நிவாரணத்தை  என்ற வேண்டுகோள்களிற்கு இறுதிவரை பதில்அளிக்கப்படவில்லை எனவும்  சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய கடன்வழங்குநர்களை விட வெளிப்படை தன்மையற்ற கடன்களை உயர் வட்டிக்கு வழங்கியதன் மூலம் சீனா இலங்கைக்கு பெருமளவு கடன்வழங்கிய நாடாக மாறியது என குறிப்பிட்டுள்ள சமந்தா பவர் இலங்கை;ககு உதவுவதற்காக சீனா கடன்மறுசீரமைப்பில் ஈடுபடுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா மிகவேகமாக முற்றிலும் முக்கியமான நடவடிக்கைகளுடன் விரைந்தது எனவும் தெரிவித்துள்ள அவர் இலங்கை வங்குரோத்து நிலையையும் மேலும் வீழ்ச்சியையும் தடுப்பதற்பு உதவுவதற்காக இலங்கைக்கு இந்தியா வழங்கிய 3.5 பில்லியன் டொலர் கடனுதவி குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் 2000 ம் ஆண்டு முதல் அதிகளவில் இலங்கைக்கு விரும்பி கடனுதவி வழங்கிய சீனா இந்தியாவிற்கு நேர்மாறான விதத்தில்செயற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தசாப்தகாலத்தில் இலங்கைக்கு வெளிப்படைதன்மையற்ற அதிக வட்டியுடனான கடன்களை வழங்கியதன் மூலமும்,மிகச்சிறிய வருமானத்தை கூட பெற்றுத்தராத கப்பல்கள் ஒருபோதும் பயன்படுத்தாத பாரிய துறைமுகம் உட்பட சந்தேகத்திற்குரிய நடைமுறைப்பயன்பாட்டுக்குரிய உட்கட்டமைப்பு திட்டங்களிற்கு உதவி வழங்கியதன் மூலமும் சீனா இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக மாறியது எனவும் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

FYqg4Y5VUAAQORG.png

உலக நாடுகள் நெருக்கடியை எதிர்கொள்ளும் தருணங்களில் இந்தியா உதவியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கைக்கு கடனுதவி வழங்குவதாக உறுதியளித்தது ஆனால்  அவற்றை வழங்கவில்லை,என தெரிவித்துள்ள சமந்தா பவர் தனது உரையில் ஜனநாயக கொள்கைகளை கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவேளை இந்தியா துரிதமாக உதவியது - சீனா உதவிக்கான குரலிற்கு பதிலளிக்கவில்லை- சமந்தா பவர் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.