Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் ஓய்வுகளை எண்ணி நாம் நிம்மதி கொள்ள முடியாது: "லக்பிம" வார ஏடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் ஓய்வுகளை எண்ணி நாம் நிம்மதி கொள்ள முடியாது: "லக்பிம" வார ஏடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு முன்னர் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வதுண்டு, தற்போது அவர்கள் இரவு நேர பறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் ஓய்வுகளை எண்ணி நாம் நிம்மதி கொள்ள முடியாது என்று "லக்பிம" வார ஏடு எச்சரித்துள்ளது.

"லக்பிம" வார ஏட்டில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் ரங்கா ஜெயசூர்ய எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

சிறிலங்கா வான் படையினால் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஜேவை-11 (JY-II) ரக குறைந்த உயர்வீச்சுள்ள முப்பரிமான ரடார்கள் நீண்ட காலத்தின் பின்னர் கடந்த வாரம் சிறிலங்காவை வந்தடைந்துள்ளன. இதுவே சிறிலங்கா வான் படையின் விபரப்பட்டியலில் உள்ள முதலாவது முப்பரிமான ராடார்களாகும்.

இந்த ராடார்களானது குறுகிய மற்றும் நடுத்தர உயர்வீச்சுக் கொண்டது. சீனாவின் எலெக்ரோனிக் ரெக்னோலஜி குறூப் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த ராடார்கள் தாழ்வாக பறக்கும் வானூர்திகளைக்கண்டறிந்து அது தொடர்பான தகவல்களை வான் எதிர்ப்பு ஆயுதத்தொகுதிக்கு வழங்கக்கூடியவை.

வெளியில் இருந்தான உதவிகள் அற்ற நிலையில் இது சுயாதீனமாக அல்லது பல உணர்திறன்மிக்க வான் பாதுகாப்பு ஆயுத வலைப்பின்னலாக தொழிற்படக்கூடியது. அதன் முழு தொகுதியும் எடுத்துச் செல்லக்கூடிய 3 பகுதிகளை உடையவை. மேலும் இந்த பகுதிகள் விரைவாக தன்னியக்க முறையில் இணைக்கப்படவும், பிரிக்கப்படவும் கூடியவை.

5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த ராடார்கள் மீரிகம பகுதியில் நிறுவப்பட உள்ளன. இது அந்தப் பகுதியில் இருந்து 180 கி.மீ தூரத்திற்கு வான் தேடுதல்களை மேற்கொள்ளக்.கூடியது. அதாவது வவுனியா வரையிலான வான் பரப்பை இது கண்காணிக்க கூடியது. இந்திரா-11 ராடார்கள் 90 கி.மீ தூரவீச்சை கொண்டவை. எனவே அவற்றினால் பெருமளவான வான் பரப்புக்களை கண்காணிக்க முடியாது விடப்பட்டிருந்தது. அதனை இந்த ராடார்கள் நிவர்த்தி செய்துள்ளது.

விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதலின் போது வவுனியாவில் அமைந்திருந்த ராடார் நிலையத்தினால் அவர்களின் வானூர்திகள் தெற்கு நோக்கி பயணிப்பது அவதானிக்கப்பட்டது ஆனால் பின்னர் அது மறைந்து விட்டது. அதன் பின்னர் அவை கொழும்பை நோக்கி பயணித்துள்ளன. ஆனால் அந்த வானூர்திகள் வான் படைத்தளத்தை தாக்கிய போது இந்திரா-11 ராடார்கள் சேவையில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட ஜேவை-11 ராடாரை விட சிறிலங்கா வான் படையினர் மேலும் இரு ஜேவை-11 ராடார்களையும் கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை கொள்வனவு செய்யும் திட்டமானது நிதி நெருக்கடி காரணமாக தடங்கல்களை சந்தித்துள்ளது. மிக்-29 வானூர்திகள் வான் ஆளுமைக்கு என தயாரிக்கப்பட்டவை. அதாவது அவை வானில் இருந்து வானுக்கான தாக்குதல்களை எதிர்த்தரப்பு வானூர்திகளை நோக்கி நடத்தக்கூடியவை. தற்போதும் தயாரிக்கப்பட்டு வரும் மிக்-29 ரக வானூர்திகளானது அமெரிக்காவின் எஃப்-16 (F 16 Fighting Falcon) மற்றும் வைஎஃப்-17 கோப்ரா (YF -17 Cobra) தாக்குதல் வானூர்திகளுக்கு ஈடாக ரசியாசினால் தயாரிக்கப்படுபவை.

சிறிலங்காவின் வான்படை தளபதி ரொசான் குணதிலக்க மிக்-29 தாக்குதல் வானூர்திகளை கொள்வனவு செய்வதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ளார். எனினும் விடுதலைப் புலிகளின் Zlin Z 143 ரக இலகுரக வானூர்திகளை தாக்குவதற்கு இது மிகவும் செலவு மிக்க முறை என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

ஒரு மிக்-29 தாக்குதல் வானூர்தியின் கொள்முதல் விலையானது 20 முதல் 27 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது அதனுடன் கொள்முதல் செய்யப்படும் ஆயுத மற்றும் தொழில்நுட்ப தொகுதிகளில் வகைகளில் தங்கியுள்ளது.

மிக்-29 தாக்குதல் வானூர்திகளின் கொள்வனவுகள் பிற்போடப்பட்டுள்ள நிலையில் சிறிலங்கா வான்படை சீனாவினால் தயாரிக்கப்படும் 04 எஃப்-7 ஜிபி (F7 GB) ரக தாக்குதல் வானூர்திகளை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த வானூர்திகளானது சோவியத்தின் மிக்-21 ரக தாக்குதல் வானூர்திகளின் பிரதி வடிவமாகும்.

1950 மற்றும் 1960 களில் சோவியத்திற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவின் போது சோவியத்து தனது பாதுகாப்பு தொழில்நுட்பங்களை சீனாவுடன் பகிர்ந்து கொண்டபோது சீனாவினால் அவை தயாரிக்கப்பட்டவை.

சோவியத்தினால் வழங்கப்பட்ட குறுகிய தூர இடைமறிப்பு தாக்குதல் வானூர்திகளான மிக்-21 வானூர்திகளின் பொறியியல் தொழில்நுட்பத்தை அறிந்த சீனா தனது செந்த தயாரிப்பான சென்டு ஜியான்-7 (Chengdu Jian-7) குறுகிய தூர இடைமறிப்பு தாக்குதல் வானூர்தியைத் தாயாரித்தது. அதன் ஏற்றுமதி வானூர்தியின் வடிவம் எஃப்-7 ஆகும்.

சிறிலங்கா வான்படையிடம் தற்போது 6 எஃப்-7 தாக்குதல் வானூர்திகள் உள்ளன. எனினும் அவை பொதுவாக தரைத் தாக்குதலுக்கே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையான வானூர்திகளை மட்டுப்படுத்தப்பட்ட வான் இடைமறிப்பு தாக்குதலுக்கும் பயன்படுத்த முடியும்.

மேலும் மறுசீரமைப்பு பணிகளுக்காக உக்ரேய்னுக்கு அனுப்பப்பட்ட நான்கு மிக்-27 தரைத் தாக்குதல் வானூர்திகள் சிறிலங்காவை வந்தடைய உள்ளன.

புதிய வகை ஆயுதங்களை கொள்வனவு செய்யும் அதேசமயம் வான்படையினர் தமது வான் பாதுகாப்பு ஆளுமையையும் நவீனமயப்படுத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கா வான் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்திய போது ராடார் மூலம் வழி நடத்தப்படும் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி செயலிழந்து இருந்தது. தற்போது அது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சுவீடன் நாட்டு தயாரிப்பான இந்த ராடார் மூலம் வழிநடத்தப்படும் பாதுகாப்பு தொகுதி 32 கி.மீ. தூர வீச்சுக்கொண்ட அக்ரேனிம் யூஎஸ்எஃப்எம் (acronym USFM) வகையை சேர்ந்தது. அவை தற்போது முக்கிய படை நிலைகளில் நிறுவப்பட்டுள்ளன.

கொழும்பின் மீது விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நடைபெற்று மூன்று மாதங்களுக்கு மேல் கடந்து விட்டது. இந்த அமைதி தொடர்பாக அறிய பொதுமக்கள் ஆவலாக உள்ளனர். விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் என்ற ரீதியில் சிறிலங்கா வான்படையினர் தாக்குதல்களை நடத்தி வருவதும் இந்த ஆவலை அதிகரித்துள்ளது.

ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று மன்னார் பகுதியில் கடற்படையினரின் அதிவேக தாக்குதல் படகின் ராடார் திரைகளில் அவதானிக்கப்பட்டதாக சிறிலங்கா புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. எனவே விடுதலைப் புலிகளின் இந்த அமைதி அவர்களின் வானூர்திகளுக்கான உதிரிப்பாகங்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையினால் எற்பட்டதாக கொள்ள முடியாது.

விடுதலைப் புலிகளிடம் வானூர்திகள் உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்த போதும் நீண்டகாலத்தின் பின்னரே அவர்களின் வான்தாக்குதல் நடைபெற்றதை நாம் நினைவிற் கொள்ளலாம். முதலாவது வான் தாக்குதலின் போது அவர்கள் வெற்றிகரமான இரவு நேர பறப்பின் ஆளுமையை நிரூபித்திருந்தனர்.

வெளிச்சங்கள் அணைக்கப்பட்ட நிலையிலும் விடுதலைப் புலிகளின் வானோடிகள் தமது இலக்குகளை மிகவும் கனகச்சிதமாக தாக்கியுள்ளனர். எனினும் குண்டுகளின் வலுவற்ற தன்மையினால் குறைந்தளவு சேதங்களே ஏற்பட்டிருந்தது.

இந்த எல்லா நிகழ்வுகளும் விடுதலைப் புலிகள் தாக்குதலுக்கு முன்னர் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வதை கோடிட்டு காட்டியுள்ளது. எனினும் பெரும் படைத்துறை அல்லது பொருளாதார நிலைகள் மீது விடுதலைப் புலிகள் வான் தற்கொலைத் தாக்குதலை நடத்தக்கூடும் எனவும் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

இதனிடையே விடுதலைப் புலிகள் இரவுநேர பறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் ஓய்வுகளை எண்ணி நாம் நிம்மதி கொள்ள முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.