Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாதமே முன்னெடுக்கப்பட்டது - சாகர காரியவசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாதமே முன்னெடுக்கப்பட்டது - சாகர காரியவசம்

By T. SARANYA

25 AUG, 2022 | 05:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாத செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கம் காணப்பட்டுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்தவர்கள் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக அரசாங்கத்தை பலப்படுத்தி,முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார்கள். 

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் மீது நம்பிக்கை கொள்ள முடியாது.

ஜனநாயக போராட்டத்திற்கு எதிராக அரசாங்கம் அடக்குமுறையினை பிரயோகிப்பதாக எதிர்தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது. 

ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாத செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சியினை ஜனநாயக செயற்பாடு என குறிப்பிட முடியாது.

மே 09எஆம் திகதி ஆளும் தரப்பின் உறுப்பினர்களின் உடமைகள் தீக்கிரரையாக்கப்பட்டன. பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மிலேட்சத்தனமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யபட்டமை மனித உரிமை மீறல் என எவரும் குறிப்பிடுவதில்லை.

போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பழிவாங்களுக்காக கைது செய்யப்படுவதாக குறிப்பிடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கைதுகளுக்கும்,பொதுஜன பெரமுனவிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

மே 09ஆம் திகதி முதல் இடம் பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து பாதுகாப்பு தரப்பினர் முறையான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனனர் என்றார். https://www.virakesari.lk/article/134381

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.