பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
-
Tell a friend
-
Posts
-
இலங்கையில் யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பது உங்களுக்கு தெரியாத??? தந்தை செல்வா. இவர்களுடன் பேசி பயனில்லை’ என்று தான் தமிழ் ஈழம் என்ற தீர்மானம் எடுத்தார்கள் 1977 இல். ஆனால் இதில் தொண்டமானையும். ஏன் இணைத்தார?? என்பது எனக்கு விளங்கவில்லை 2009 இல். நாங்கள் அறிந்த விடயம் ஆயுதப்போராட்டம் மூலமும் ஒன்றும் பெற முடியாது என்பது சர்வதேசம் தான் போராட்டம் தோல்விக்கு காரணம் ஏனெனில் பேச்சுவார்த்தை நடத்தும் படி பிரபாகரனுக்கு கடுமையான தொடர்ச்சியான அழுத்தம் கொடுத்தது ஆனாபடியால் தான் 2002 ஒப்பந்தம் கையெழுத்திட்டார் பிரபாகரனுக்கு நன்றாக தெரியும் அரசியல் தீர்வு கிடையாது என்பது ஆனால் சர்வதேச அழுத்தை தட்டி கழிக்க முடியவில்லை இல்லையென்றால் ஆயுதப் போராட்டம் வெற்றி தான் சர்வதேச ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது கற்றுக் கொண்ட பாடம்
-
அண்ணை பணிச்சுமையாய் இருக்குமோ?!
-
By ஏராளன் · பதியப்பட்டது
Published By: DIGITAL DESK 7 03 JUL, 2024 | 12:09 PM வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார். அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு வழங்கியிருந்தார். இந்த நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு தேவையைக் காரணம்காட்டி ஒன்றுவிட்ட சகோதரியிடமிருந்து உறுதியைப் பெற்றுச்சென்று மோசடியாக உரிமை மாற்றம் செய்துள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணி மோசடி செய்த சகோதரியைக் கைது செய்தனர். அவர் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவிய பிறிதொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். இவரும் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (01) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஆனந்தராஜாவின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, 10 ஆயிரம் ரூபாவுக்காகவே தான் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒப்புக்கொண்டார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டத்துக்குத் துணைபோன பெண் (10 ஆயிரம் ரூபாவுக்காக கையொப்பம் வைத்தவர்) கொழும்பைச் சேர்ந்தவர் என்றும், சுன்னாகத்தில் தற்காலிகமாக வசித்தபோதே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். சட்டத்தரணியின் முன்னிலையில் கையொப்பம் வைத்தபோது தான் நோய்வாய்ப் பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர் மாஸ்க் அணிந்திருந்தார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187562 -
நம் நாடு என்பதில் உடன்பாடே. ஆனால் இது வெள்ளை நாடு என்பது தான் தவறு.
-
By ஏராளன் · பதியப்பட்டது
03 JUL, 2024 | 11:15 AM பிரிட்டனில் நாளை பொதுத்தேர்தலில்மக்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்தும் தொழிற்கட்சி அதிக ஆதரவு காணப்படுவதாக கார்டியன் தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளி;ல் காணப்பட்ட நிலையில் மாற்றமில்லை தொழில்கட்சிக்கான ஆதரவு சிறிய அளவில் குறைந்துள்ளது என தெரிவித்துள்ள கார்டியன் எனினும் அந்த கட்சியே தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது. கென்சவேர்ட்டிவ் கட்சியின் 14 வருடகால ஆட்சியின் பின்னர் கெய்ர் ஸ்டாமெரின் தொழில்கட்சி2022 முதல் கருத்துக்கணிப்புகளில் முன்னிலையில் காணப்படுவதாக கார்டியன் தெரிவித்துள்ளது. தற்போதைய கருத்துக்கணிப்புகளின் படி தொழில்கட்சிக்கு 40 வீத ஆதரவு காணப்படுவதாகவும் பிரதமர் ரிசி சுனாக்கின் கென்சவேட்டிவ் கட்சிக்கு 20 வீத ஆதரவு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள கார்டியன் பிரிட்டனின் சீர்திருத்த கட்சிக்கு 15 வீத ஆதரவும் லிபரல் ஜனநாயக கட்சியினருக்கு 11வீத ஆதரவும் பசுமை கட்சிக்கு 5.8 வீத ஆதரவும் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தொழில்கட்சிக்கு 326 ஆசனங்கள் கிடைக்கலாம் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 127 ஆசனங்களும் லிபரல் ஜனநாயக கட்சியினருக்கு 50 ஆசனங்களும் கிடைக்கலாம் என கார்டியன் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/187565
-
-
Our picks
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts