Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடாளுமன்றத்தில் கேலிப்பொருளான ஜெயராஜ்

Featured Replies

[செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2007, 19:09 ஈழம்] [கொழும்பு நிருபர்]

இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் குறித்த சிறிலங்கா நாடாளுமன்ற விவாதத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை எதிரணியினர் கடுமையாக கிண்டலடித்தனர்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இனப்பிரச்சினைக்கு கூட்டாட்சித் தீர்வை முன்வைக்க மகிந்த அரசாங்கம் முனைவதாக ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச கூறியதைத் தொடர்ந்து இந்த விவாதம் சூடு பிடித்தது.

விமல் வீரவன்சவின் கருத்துக்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டொ புள்ளே பதிலளிக்கையில் "தீர்வு திட்டம் ஒற்றையாட்சியின் கீழேயே முன்வைக்கப்படும் அதில் மாற்றமில்லை" என்றார்.

இதனையடுத்து உருவான சூடான வாய்த்தர்க்கங்களுக்கு மத்தியில் "அதிகாரப்பரவலாக்கலை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றிருப்பதாக இந்தியத் தலைவர்கள் கூறியதாக" ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் கிரியெல்ல கூறினார்.

அதற்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, "அதிகாரப் பகிர்வை அரசு ஏற்றுக்கொண்டதாக இந்தியாவில் உங்களுக்கு கூறியது யார்?" என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச, "ஒற்றையாட்சியின் அடிப்படையில்தான் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று நீங்கள் கூறியது தனிப்பட்ட கருத்தா அல்லது அரசாங்கத்தின் நிலைப்பாடா?" என்று கேட்டார்.

அப்போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அசடு வழிய எழுந்து, "அது மகிந்தவின் நிலைப்பாடு" என்றார்.

நன்றி : புதினம்

ஏற்கனவே அவர் ஒரு கோமாளி தெரிந்த விடயம்தானே :P

தேசிய பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கத்தினூடாகவோ அல்லது அதிகாரப் பகிர்வினூடாகவோ அரசியல் தீர்வு காணப்படும்போது அது `ஒற்றையாட்சி' என்ற வரையறைக்குள்ளேயே இருக்க வேண்டுமென்பது ஜனாதிபதியின் தீர்மானம் என்று அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்திருக்கின்றது.

ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான விமல் வீரவன்ச நேற்று பாராளுமன்றத்தில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத் திட்டம் தொடர்பாக விசேட அறிக்கை விடுத்து உரையாற்றியதையடுத்து ஏற்பட்ட சர்ச்சையொன்றின்போதே தேசியப் பிரச்சினைக்கான தீர்வு எதுவாக இருந்தாலும் அது ஒற்றையாட்சியின் அடிப்படையிலேயே இருக்குமெனவும் இது தனது தனிப்பட்ட கருத்தல்ல, ஜனாதிபதியின் தீர்மானமெனவும் ஆளும் தரப்பின் பிரதம கொரடாவான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அறிவித்தார்.

முன்னதாக பேசிய விமல் வீரவன்ச, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரண குழுவில் பெரும்பான்மையினரின் யோசனையாக தேசிய பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வொன்றை முன்வைக்க தயாராகி இருப்பதாக தெரியவந்திருப்பதாகவும், இது 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிரானதெனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கையின் ஒற்றையாட்சி முறையை பாதுகாக்கவே 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு பெரும்பான்மையான மக்களின் ஆணை கிடைத்ததாகவும், மக்கள் ஆணை மூலம் கிடைத்த தீர்வொன்றை இன்னுமொரு மக்கள் ஆணையினால் மீறிச்செல்ல முடியுமே தவிர சில அரசியல் கட்சிகளின் பெரும்பான்மையைக் கொண்டு அதை செய்துவிட முடியாதெனவும் விமல் வீரவன்ச கூறினார்.

இதேநேரம், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணையின் அடிப்படையிலிருந்து வெளியே செல்ல அரசாங்கம் செயற்படுமாயின், அது சந்தேகத்துக்கு இடமில்லாமல் இந்த அரசாங்கத்தின் முடிவாக அமைந்து விடுமெனவும் வீரவன்ச எம்.பி.மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், விமல் வீரவன்சவின் கூற்றின் பின்னர் பேசிய அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பிரச்சினைக்கான தீர்வு எதுவாக இருந்தாலும் அது ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே இருக்குமெனவும் அதை மீறிச் செல்லாதெனவும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல, அரசாங்கம் தீர்வை அதிகார பகிர்வின் (Pஒநெர் ஷரிங்) அடிப்படையில் முன்வைக்கத் தயாரா அல்லது அதிகார பரவலாக்கலின் (Pஒநெர் டெவொலுடிஒன்) அடிப்படையில் முன்வைக்க தயாரா எனக் கேள்வி எழுப்பியதுடன் அதிகார பரவலாக்கலுக்கும் அதிகார பகிர்விற்கும் வித்தியாசமிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கத் தரப்பினர் இந்தியாவில் சென்று அதிகார பகிர்வுக்கு (Pஒநெர் ஷரிங்) தயாரென கூறியிருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கம் ஒற்றையாட்சியின் கீழ் அதிகபட்சம் அதிகாரத்தை பகிர்வதற்கு தயாரென தெரிவித்த அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே, முதலில் ஐ.தே.க.வினர் அமர்ந்து பேச முன்வர வேண்டுமெனவும் கூறினார்.

இதேநேரம், நாட்டின் பிரச்சினையை ஒற்றையாட்சிக்குள் தீர்க்க முடியாதென தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஒற்றையாட்சி மூலமான தீர்வுக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். சமஷ்டி முறையிலான ஆட்சி மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். இல்லாவிட்டால் போர்தான் நீடிக்கும். இந்த அரசாங்கம் நாட்டை ஆழ்கடலில் மூழ்கடிக்கவே பார்க்கிறது என ஆவேசமாக தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பிலுள்ள லொட்ஜ்களிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விடயத்தில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க அரசு சார்பில் வருத்தம் தெரிவித்த போது, அதற்கு எதிரான கருத்தொன்றை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே வெளியிட்டதாகவும், இதேபோல், ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகமான ஜோன் ஹோம்ஸை இதே அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே பயங்கரவாதியென தெரிவித்த போது, இன்னுமொரு அமைச்சரினால் இது அரசின் நிலைப்பாடு இல்லையெனவும், அமைச்சரின் தனிப்பட்ட நிலைப்பாடெனவும் தெரிவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஐ.தே.க.வின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர, அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே பல சந்தர்ப்பங்களிலும் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளதாகவும், இது பிரச்சினைக்குரியது எனவும் கூறினார்.

அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்தா அல்லது, அரசின் நிலைப்பாடா என விமல் வீரவன்ச கேள்வி எழுப்ப, அது ஜனாதிபதியின் தீர்மானமென அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

காற்றூக்கென்னன் வேலி ...

--------------------------------------

க.கஜேந்திரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.