Jump to content

தோட்ட ஊழியர் மரணம் ; 40 இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்க உறுதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தோட்ட ஊழியர் மரணம் ; 40 இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்க உறுதி

By T. SARANYA

14 OCT, 2022 | 03:07 PM
image

நமுனுகல கனவரெல்ல தோட்ட ஊழியர் மரணம் தொடர்பில் தொழில் அமைச்சில் இன்று  (14) பேச்சுவார்த்தை நடபெற்றது.

பேச்சுவார்த்தையில் தொழில் அமைச்சர் மனுச நாணயகார, அமைச்சின் செயலாளர், நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் நிறுவாக இயக்குனர் பிரின்ஸ் குணவர்த்தன, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் ராமேஸ்வரன் மற்றும் கட்சியின் சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பேச்சுவார்த்தையில் நமுனுகல கனவரெல்ல தோட்ட ஊழியர் மரணத்திற்கு கம்பனி நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்பதுடன்,உயிரிழந்த இளைஞனின் குடும்பத்திற்கு நட்ட ஈடாக உரிய தொகை வழங்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சரிடம் இ.தொ.கா  வலியுறுத்தியது.

இளைஞன் மரணமடைந்த அன்று 15,000 ரூபா மத்திரமே நட்ட ஈடாக  வழங்க முடியும் என தெரிவித்த கம்பனி இ.தொ.காவின் தொடர் அழுத்தத்தினால் இன்று வெள்ளிக்கிழமை 40 இலட்சம் ரூபா வரை நஷ்டஈடு வழங்குவதாக  உறுதியளித்தது.

கம்பனி வழங்க முன்வந்த தொகை  குறித்து இ.தொ.கா கலந்து ஆலோசித்து முடிவு வழங்குவதாக  தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/137646

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்த தோட்டத் தொழிலாளிக்கு முதன்முறையாக 40 இலட்சம் ரூபா நஷ்ஈட்டை பெற்றுக்கொடுப்பு

By DIGITAL DESK 2

04 NOV, 2022 | 11:26 AM
image

 

தோட்ட நிர்வாகத்தின் அழுத்தத்தின் பேரில் பலவந்தமாக பணிக்கு அமர்த்தப்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த நமுனுகல கனவரெல்ல தோட்ட தொழிலாளி ஹர்ஷன் கணேஷ்மூர்த்தியின் மரணத்துக்கு நட்டஈடாக 40 இலட்சம் ரூபாவை  கடுமையான போராட்டத்தின் மூலம்  நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்திடமிருந்து  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ளது.

 

இதற்கான காசோலையை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்,பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் இன்று குறித்த குடும்பத்தினருக்கு வழங்கி வைத்தனர்.

 

 

 

 

Badulai_-_Pasarai__1_.jpg

நமுனுகலை பெருந்தோட்ட நிறுவனம் உயிரிழந்த இளைஞனுக்கு மரண சடங்கிற்கான செலவு உட்பட 15000 ரூபாய் மாத்திரமே நட்ட ஈடு வழங்க முடியும் என தெரிவித்திருந்தது. 

இத்தொகையை பெற்றுக் கொள்ள வேண்டாம் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அக்குடும்பத்தினருக்கு அறிவித்திருந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்படும் வரையில்  இளைஞனின் பூதவுடல் அடக்கம் செய்யபடாது என தெரிவித்த செந்தில் தொண்டமான் இளைஞனின் பூதவுடலை தொழிற்சாலையில் வைத்து, நமுனுகலை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். 

 

இச்சம்பவம் குறித்து நமுனுகலை பெருந்தோட்ட நிறுவனம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தது. அம்முறைப்பாடிற்கு இ.தொ.கா இடமளிக்காமையால்  தொழில் அமைச்சில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

 

இந்நிலையில்  கடந்த மாதம் 14 ஆம் திகதி தொழில் அமைச்சில், தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் உயிரிழந்த தொழிலாளிக்கு  உரிய நட்ட ஈட்டை வழங்குவது தொடர்பில் இ.தொ.கா தோட்ட நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உயிரிழந்த இளைஞனுக்கு  40 இலட்சம் ரூபாய் தருவதாக இப்பேச்சுவார்தையின் மூலமாக முடிவு செய்யப்பட்டது.

 

 

இந்த நட்டஈடு தொகை குறித்து இளைஞனின் குடும்பத்தார் மற்றும் தோட்ட மக்களுடன்  கலந்து ஆலோசித்து அவர்களின் விருப்பத்திற்கு அமைய இ.தொ.காவின் தொடர் போராட்டத்தினால் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தோட்ட தொழிலாளி ஒருவருக்கு  நட்ட ஈடாக  40 இலட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Badulai_-_Pasarai__4_.jpg

 

Badulai_-_Pasarai__2_.jpg

Badulai_-_Pasarai__3_.jpg

https://www.virakesari.lk/article/139073

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.