Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினமும் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி

[23 - August - 2007]

நாட்டின் பொருளாதாரம் நாளாந்தம் அதலபாதாளத்தை நோக்கியே வீழ்ந்துகொண்டிருக்கின்றது. அரசாங்கத்துக்கு இந்தப் பொருளாதார நெருக்கடி ஒரு பொருட்டாகவே தென்பட்டதாக தெரியவில்லை. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அரசுக்கு எந்தவிதமானதொரு நிகழ்ச்சி நிரலும் கிடையாது. மொத்தத்தில் சொல்லப்போனால் அரசிடம் உருப்படியான பொருளாதாரக் கொள்கை என்று எதுவுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. ஸ்திரமானதொரு பொருளாதாரக் கொள்கையை வகுத்துக் கொள்ளாத நிலையில் எந்த அரசும் ஆட்சியைக் கொண்டு நடத்துவதென்பது மிகக்கடினமானதும் நெருக்கடியானதுமாகும். ஒரு நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் அந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கையிலேயே தங்கியிருக்கின்றது. எமது நாட்டைப் பொறுத்தளவில் சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் கட்டத்திலும் எம்மிடம் ஒரு நிரந்தரமானதும் உறுதியானதுமான பொருளாதாரக் கொள்கை கட்டியெழுப்பப்படவே இல்லை.

ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் அதிகாரத்துக்கு வருபவர்களுக்கு ஏற்றவிதத்தில் குறுகிய காலத் திட்டங்களை மட்டுமே வகுத்து நிருவாகங்கள் செயற்படுகின்றன. இவற்றிடம் ஒருபோதுமே தொலைநோக்குப் பார்வை இருந்ததற்கான சந்தர்ப்பமே காணப்படவில்லை. இதற்கிடையே கடந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் இரண்டரை வருட காலத்தில் தனியார்துறையினருக்கு கூடுதல் வாய்ப்பளித்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பொருளாதாரச் செயற்பாடுகளில் அரசு நேரடித் தலையீட்டைத் தவிர்த்து தனியார்துறைக்குக் கூடுதல் வாய்ப்பை அளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேலோங்கச் செய்ய முடியுமென்ற ஒரு கோட்பாட்டையே ஐக்கிய தேசியக் கட்சி அரசு கொண்டிருந்தது.

இவற்றுக்கு மத்தியில் தான் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அபிவிருத்தித் திட்டங்கள், வேலைவாய்ப்புகள் போன்றவற்றை தனியார் துறை வசம் கொடுப்பதன் மூலம் அரசு பொருளாதாரச் சிக்கலிலிருந்து விடுபடும் வாய்ப்பை ஏற்படுத்தினார். இத்தகைய பொருளாதார நோக்கையே மேற்குலகம் கையாண்டு வருகின்றது. மேற்குலகின் இந்தப் பொருளாதாரக் கொள்கை சிறிய வளர்முக நாடான இலங்கைக்குப் பொருந்துமா? இல்லையா என்பது வேறுவிடயம். ஆனால், ஏதோவொரு வகையில் நாட்டின் பொருளாதார நெருக்கடியை தளர்த்துவதற்கு அது ஒருவகையில் உதுவியது மட்டும் உண்மையானதாகும். இன்று நாடு மீண்டும் பாரியதொரு பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளது. இதிலிருந்து மீட்சிபெறுவது மிகக் கடினமானதாகவே தெரிகிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொகையான வங்கிக் கடன்களைப் பெற்று அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாடு பெரும் கடனாளியாக்கப்பட்டுள்ளதையே காணமுடிகிறது.

எமது அயல் நாடான இந்தியாவின் இன்றைய பிரதமர் ஒரு பொருளாதார விற்பன்னராவார். எதைச் செய்து, எதனைத் தவிர்த்துப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை நன்குணர்ந்து அவர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அனைத்தையும் கட்டிப்பிடித்துக் கொள்ளவுமில்லை. சகலதையும் தனியாருக்குத் தாரை வார்க்கவுமில்லை. வெளிநாட்டு நிறுவனங்களைப் பயன்படுத்தித் தனது நாட்டின் பொருளாதார வளத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் படிப்படியாக வெற்றி கண்டு வருகின்றார். ஆனால், எமது நாட்டில் என்ன நடக்கின்றது. அதிகாரத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டு நாடு அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாட்டு மக்கள் வறுமைக்கோட்டின் இறுதி எல்லைக்கே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நாடு இன்று பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருப்பது தெட்டத் தெளிவானதொன்றாகும். இதனை மூடிமறைப்பதற்கு அரசு பல பிரயத்தனங்களையும் மேற்கொள்கின்ற போதிலும் அவை வெளியே பாய்ந்து கொண்டே இருக்கின்றது.

இன்னொரு விடயம் பணநோட்டுகளை அச்சிடுவதால் நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியாதென்பதாகும். பணநோட்டுகளை அச்சிட்டுக் குவிப்பதால் பொருளாதாரப் பிரச்சினை தீரப்போவதில்லை. உறுதியானதொரு பொருளாதாரக் கொள்கை எமக்கு மிக முக்கியமானதாகும். ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் எமது நாட்டுக்கென நிரந்தரமானதொரு பொருளாதாரக் கொள்கை வகுக்கப்படாதவரை நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியவே முடியாது. இது குறித்து அரசியல்வாதிகளும் பொருளாதார நிபுணர்களும் வர்த்தக சமூகத்தினரும் ஆழமாகச் சிந்திக்க முன்வர வேண்டும். குறுகிய அரசியல், சுயநல நோக்கத்துக்காக நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் பணிகள் தொடருமானால் நாட்டின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இதிலிருந்து மீட்சி என்பது எண்ணிப்பார்க்கவே முடியாததாகும். பட்ஜெட்டுகளும் கணக்கு அறிக்கைகளும் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வாகப் போவதில்லை. உறுதியான கொள்கைத் திட்டமே மிக முக்கியமானதென்பதை வலியுறுத்திச் சொல்லி வைக்கின்றோம்.

நன்றி - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.