Jump to content

சீனா - இந்தியாவைக் கையாள 8 பேர் : வெளிநாடு செல்லும் முன் ரணில் வியூகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனா - இந்தியாவைக் கையாள 8 பேர் : வெளிநாடு செல்லும் முன் ரணில் வியூகம் 

By NANTHINI

05 NOV, 2022 | 07:53 PM
image

 

(லியோ நிரோஷ தர்ஷன்)

லங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியாவையும் சீனாவையும் கையாள்வதற்கு 8 பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

அத்துடன் எகிப்தில் இடம்பெறவுள்ள உலக காலநிலை தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  ஞாயிற்றுக்கிழமை (நவ 6) அதிகாலை எகிப்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எகிப்தில் இவ்வாரம் இடம்பெறவுள்ள உலக காலநிலை தொடர்பான 'கோப் 27' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி புறப்படுவதற்கு முன்னர் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக முக்கிய சில தீர்மானங்களை எடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் முக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.  

இதன்போது கடன் மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தியது. அதாவது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்து ஆரோக்கியமான  வெளிப்பாடுகளை இதுவரையில் காண முடியவில்லை. 

எனவே, இதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே சிறந்த உத்தரவாதங்களை அளித்துள்ளனர். சீன மக்கள் காங்கிரஸின் வருடாந்த மாநாடு இடம்பெற்றமையினால் அவர்களுடன் கலந்துரையாட முடியாமல் போனது.

தற்போது நிலைமை சீராகியுள்ள நிலையில் இது தொடர்பாக கலந்துரையாடி, இறுதித் தீர்மானம் எடுக்க முடியுமென அரசாங்கத்தின் சார்பாக சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்ததுடன், கிடைக்கப்பெற்றுள்ள வலியுறுத்தல்களை ஜனாதிபதியுடன் அவசரமாக கலந்துரையாடுவதாகவும் குறிப்பிட்டார்.

இதன் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த சாகல ரத்நாயக்க சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின் வலியுறுத்தல்களை குறிப்பிட்டார். 

இந்நிலையில் சீனா மற்றும் இந்தியாவுடன் கலந்துரையாடி, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த 8 பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.  

இதன் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, திறைச்சேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் ஜனாதிபதியின் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முழு உலக நாடுகளும் அவதானித்து வருகின்றன. மேலும், பல நாடுகள் எமது நடவடிக்கைகளை முன்னுதாரணமாக கொள்வதற்கும் ஆர்வத்துடன் கண்காணித்து வருகின்றன. அந்த நாடுகளின் வரிசையில் செம்பியா முதலிடத்தில் உள்ளது. 

எனவே, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டங்களை மிகவும் அவதானத்துடன் செயல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிடுகையில், 

தலைவர் ஒருவருக்கு அதிகாரம் இருந்தால் மாத்திரம் போதாது. அதனை பயன்படுத்த சிறந்த அறிவும் இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால், ஆட்சியை கைப்பற்றவும், அதனை பாதுகாத்துக்கொள்ளவும் முடியும். இது நவம்பர் 2 எதிரணியினரின் போராட்டத்தின்போது வெளிப்பட்டதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139189

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.