Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கல்வி, சுகாதாரத்துறைகளை தனியார் மயமாக்குவதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதா ? - சஜித் அரசாங்கத்திடம் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி, சுகாதாரத்துறைகளை தனியார் மயமாக்குவதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதா ? - சஜித் அரசாங்கத்திடம் கேள்வி

By DIGITAL DESK 2

10 NOV, 2022 | 09:56 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

 

அமைச்சுப்பதவிகளை காட்டி எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை பழி எடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

எந்த முயற்சி எடுத்தாலும் எமது கட்சியில் இருந்து ஒரு உறுப்பினரும் முட்டாள்தனமான அரசாங்கத்தில் இணையப்போவதில்லை.

அத்துடன் இலவச சுகாதாரதுறை மற்றும் கல்வித்துறையை தனியார் மயப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உறுதியளித்துள்ளீர்களா? என கேட்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதனிக்கிழமை (9) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டை வங்குரொத்து அரசாங்கத்தின் மூலம் மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியம் பாலமாக அமைந்துள்ளது என்று கூறுகின்றனர்.

அப்படியென்றால் ஏன் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்டத்தில் மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை வெளியிடாமல் இருக்கின்றது. நாட்டுக்கு அதனை வெளிப்படுத்த அரசாங்கம் ஏன் அச்சப்படவேண்டும் என கேட்கின்றோம். 

Sajith Premadasa hospitalized

 

அத்துடன் பல்வேறு வரிகளை அதிகரிக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளையே செயற்படுத்துகின்றோம் என்று ஜனாதிபதி கூறுகின்றார்.

அப்படியென்றால்  விலை, கட்டண அதிகரிப்புகளுக்கும் இதுவா காரணம். உடன்படிக்கைகளை மறைத்துக்கொண்டு செயற்படும் அரசாங்க்ததுடன் இணைந்து செயற்படுமாறு அரசாங்கம் அழைக்கின்றது.

அத்துடன் இந்த நாட்டின் இலவச சுகாதார துறை, கல்வித்துறையை தனியார் மயப்படுத்த சர்வதேச நாணய நிதியத்திடம் வாக்குறுதி அளித்திருக்கின்றதா என ரசாங்கத்திடம் கேட்கின்றோம்.

சில பிரதான அரச வைத்தியசாலைகளில் கட்டணங்களுடன் சில சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ள புதிதாக ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சுகாதார துறையை தனியார் மயப்படுத்தவதா? என்று அரசாங்கத்திடம் கேட்கின்றோம்.

அத்துடன் திருட்டுத்தனமான ஒப்பந்தங்களின் மூலம் பொருளாதாரத்தை சீர்குலைக்க இவர்கள் முயற்சிக்கின்றனர்.  இதுவே மொட்டின் கொள்கையாகும்.

நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.  இத்தனைக்கும் மத்தியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

இந்த முட்டாள்தனமான அரசில் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் இல்லை. அரசாங்கம் எமது கட்சியில் இருந்து பழி எடுப்பதற்கு பயந்து நாங்கள் யாரையும் வெளிநாடுகளுக்கு அனுப்பவில்லை. எமது உறுப்பினர்கள் மீது எமக்கு நம்பிக்கை இருக்கின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/139581

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலவச மருத்துவம், இலவச கல்விச் சேவையில் கட்டணம் அறவிடுமாறு நாணய நிதியம் ஆலோசனை வழங்கியதாக வெளியான செய்தி அடிப்படையற்றது - செஹான் சேமசிங்க

By DIGITAL DESK 2

10 NOV, 2022 | 10:13 AM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

 

 

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளாவிட்டால் சமூக கட்டமைப்பு மிக மோசமான விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும்,அதனை எவராலும் தடுக்க முடியாது.

இலவச மருத்துவம், இலவச கல்வி சேவையில் கட்டணம் அறவிடுமாறு நாணய நிதியம் ஆலோசனை வழங்கியதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.

இலவச கல்வி.மருத்துவ சேவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ. 09) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி கட்டளைச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெளிப்படை தன்மையுடன் இடம்பெறுகிறது.

எதனையும் மறைக்கவில்லை,மறைக்கவும் முடியாது.சகல விடயங்களும் வெளிப்படை தன்மையுடன் இடம்பெற வேண்டும் என சர்வதேச நாணய நிதியம்  ஆலோசனை வழங்கியுள்ளது.

 

Step in to steer 'it' | Daily News

 

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவின் அனுமதி கிடைத்தவுடன் நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்போம்.உணர்வு பூர்வமான விடயங்களை தற்போது பகிரங்கப்படுத்த முடியாது.

பல்வேறு காரணிகளினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்கவில்லை.பொருளாதார மீட்சிக்காக நடைமுறைக்கு சாத்தியமான தீர்மானங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

வரி அதிகரிப்பினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். வரி அதிகரிப்பு குறுகிய காலத்தை அடிப்படையாகக் கொண்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தோல்வியடிடைந்தால் கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாட்டில் காணப்பட்ட மிக மோசமான நிலைமையை போன்ற தன்மை பன்மடங்கு அதிகரிக்கும், இதனை எவராலும் தடுக்க முடியாது. ஆகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை அவசர தேவையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பிலான விடயங்கள் திரிபுப்படுத்தப்பட்டுள்ளன. ஒருசில ஊடகங்கள் அரசியல் நோக்கத்திற்காக உண்மை விடயங்களை திரிபுப்படுத்தி பிரபல்யமடைகின்றன.அரசாங்கம் என்ற ரீதியில் பிரபல்யமடையும் நிலையில் நாடு தற்போது இல்லை.

வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளில் மருந்து விநியோகத்திற்கு கட்டணம் அறவிடுமாறும்,அரச பல்கலைக்கழகங்களில் கட்டணம் அறவிடுமாறும் சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் அடிப்படையற்றதாகும்.இலவச மருத்து சேவை, இலவச கல்வி சேவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தல், பொருளாதாரத்தை முன்னெடுத்தல் மற்றும்,பொருளாதாரத்தை வளர்ச்சிப் பெற செய்தல் உள்ளிட்ட மூன்று விடயங்கள்  குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தலுபக்கான ஆரம்பக் கட்ட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த செப்டெம்பர் மாதத்தை காட்டிலும் ஒக்டோபர் மாதம் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. எதிர்வரும் காலப்பகுதியில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/139584

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.