Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோமாளிக் கூத்தாகத் தொடரும் சர்வதேசக் கையாள்கைப் போக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-09-01

கோமாளிக் கூத்தாகத் தொடரும் சர்வதேசக் கையாள்கைப் போக்கு

சர்வதேச சமூகத்தைக் கையாள்வதில் மோசமான இராஜதந்திரத் தவறுகளை இழைப்பதன் மூலம் கொழும்பு அரசு தனது தலையில் தானே மண் அள்ளிக் கொட்டி வருகிறது என்பதைப் பல தடவைகள் இப்பத்தியில் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். அதுவே தொடர்கதையாகத் தொடர்கின்றது.

இப்போது, அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கும் கலாநிதி ரஜீவ் விஜேசிங்க "சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி' போல தேவையில்லாத விவகாரத்தைக் கிளறிக் குழப்பி அடித்திருக்கின்றார்.

அவர் இப்பொறுப்பை ஏற்று சில மாதங்களே ஆகின்றன. அதற்கிடையில் மேற்குலகுக்கு குறிப்பாக மேற்குலக மனித உரிமைகள் அமைப்புகளுக்கு எதிராக ஓர் அறிக்கைப் போரைத் தொடங்கி ஆலாபரணம் பண்ணி வருகின்றார் அவர்.

மூதூரில், பட்டினிக்கு எதிரான பிரான்ஸ் தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் 17 பேரின் படுகொலை தொடர்பாக அதிக சிரத்தை காட்டிவரும் சர்வதேச சமூகம், அந்தப் படுகொலைச் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருக்க, அதை விடுத்து, அந்தப் பணியாளர்கள் படுகொலைக்கு அந்தத் தொண்டு நிறுவனமும் காரணம் என்று புதுக்கதை ஒன்றை அவிழ்த்துவிட்டு தம்மைத் தாமே கோமாளியாக்கிக் கொண்டார் அவர்.

இப்போது, இந்தியாவில் போய் இருந்துகொண்டு மற்றொரு கதையை அவிழ்த்து விட்டிருக்கின்றார். அதுவும், இலங்கை அரசின் சமாதானச் செயலகப் பணிமனையின் பணிப்பாளர் என்ற தோரணையில் தாம் கருத்துக் கூறுகின்றோம் என்பதை மறந்து அவர் பேசுகிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் அக்கருத்து வெளிப்பட்டிருக்கின்றது.

""இலங்கையில் ஆட்சியை மாற்றுவதற்குப் பிரித்தானிய அரசு எதிர்பார்க்கின்றது. தனக்கு விருப்பமான ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டே தனது நடவடிக்கைகளைப் பிரித்தானியா முன்னெடுக்கின்றது.

""ஒரு கட்டத்தில் அனுசரணைத் தரப்பில் இருந்து நோர்வேயை ஓரங்கட்டிவிட்டு அந்த இடத்தைத் தான் பிடிப்பதற்கும் பிரிட்டன் விரும்பியது'' என்றெல்லாம் அவர் கருத்துக் கூறியிருக்கின்றார்.

பிரிட்டனின் பிரதமராக ரொனி பிளேயர் இருந்த சமயம், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அமைதித் தீர்வைக் காணும் விடயத்தில் பிரிட்டனையும் சம்பந்தப்படுத்த விரும்பி, நேரடியாக பிரிட்டனுக்குச் சென்று, அந்நாட்டுப் பிரதமரின் விடுமுறைக்கால பங்களாவில் பிரதமர் பிளேயருடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகப் பேச்சுகளை நடத்தி, முன்முயற்சிகளை எடுத்தார் என்பது இலங்கை அரசின் சமாதானச் செயலகத்தின் புதிய பணிப்பாளருக்குத் தெரியாது போலும்.

உள்நாட்டில் பௌத்த சிங்களப் பேரினவாதிகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்த இந்த அரசுத் தலைமை, அதன் காரணமாக அந்த மேலாண்மைப் போக்காளர்களைச் சமாளித்துத் திருப்திப்படுத்துவதற்காக நோர்வேயை அனுசரணைப் பணியிலிருந்து அகற்ற எத்தனித்தமையும்

நோர்வேக்கு மாற்றுத் தரப்பாக பிரிட்டன் உட்பட பல நாடுகளில் ஏதேனும் ஒன்றை இதற்குள் இழுத்து விழுத்த அது முயன்றமையும் இராஜ தந்திர வட்டாரங்களில் நன்கு தெரிந்த விடயங்கள்.

அவற்றை மறந்து, புதுப் புரளி அவிழ்த்துவிடும் கலாநிதி விஜேசிங்கவுக்கு பிரிட்டன் உரிய பதிலடி தந்திருக்கின்றது.

""இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிடும் எண்ணம் பிரிட்டனுக்குக் கிஞ்சித்தும் கிடையாது. இலங்கையில் உள்நாட்டுக் கட்சி அரசியலில் சம்பந்தப்பட நாம் விரும்பமாட்டோம். நோர்வேயின் இடத்துக்கு பிரிட்டன் அனுசரணைத் தரப்பாக வருவது என்ற எண்ணம் எந்தச் சந்தர்ப்பத்திலும் எமக்கு இருந்ததில்லை.'' என்று பிரிட்டன் உத்தியோகபூர்வமாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்து விட்டது.

ஐ. நாவின் உயரதிகாரியைப் பார்த்து அரசின் மூத்த அமைச்சரும், நாடாளுமன்ற பிரதம கொறடாவுமான ஜெயராஜ் பெர்னாண்டோப் புள்ளே "பயங்கரவாதி' என்கிறார். அது குறித்து அரசுத் தலைமை கவலை கூடத் தெரிவிக்காமல் மௌனம் காத்து அந்தக் கருத்தை அதன்மூலம் அங்கீகரிக்கின்றது.

இப்போது என்னவென்றால் நாட்டின் ஆளும் தரப்பை மாற்றி, எதிர்க்கட்சித் தரப்பை ஆட்சியில் அமர்த்த பிரிட்டன் முயல்கிறது என அரசின் ஒரு முக்கிய அதிகாரி இந்தியாவில் போய் இருந்துகொண்டு கூறுகின்றார்.

சர்வதேசத்தை கொழும்பு கையாளும் முறைமை பற்றிய சில உதாரணங்கள் மட்டுமே இவை.

இந்த அரசின் மூத்த அமைச்சராகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிப் பீடத்துக்கு அதிகாரத்துக்கு ஏற்றுவதற்கு முன்னின்று உழைத்தவருமான மங்கள சமரவீர, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பிலிருந்து வெளியேற முன்னர் தமது அதிருப்திகளைக் குறிப்பிட்டு, அரசுத் தலைவருக்கு விரிவான கடிதங்களை அனுப்பி வைத்திருந்தார். அவற்றில் சர்வதேச சமூகத்தைக் கையாளும் விடயத்தை கொழும்பு நிர்வாகம் ஒரு பொழுதுபோக்கு விடயம்போல கோமாளித்தனமாக கையாள்கின்றது எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அது திரும்பத் திரும்ப உறுதியாகி வருகின்றது. அதன் ஓர் அங்கம்தான் அரச சமாதானச் செயலகப் பணிப்பாளரின் தற்போதைய கருத்தும் கூட.

நாட்டில் ஆட்சியில் இருக்கும் அரசை அதுவும் நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அரசை வீட்டுக்கு அனுப்பி, எதிர்க்கட்சித் தரப்பை ஆட்சியில் அமர்த்துவதற்கு பிரிட்டன் போன்ற மேற்குலக நாடு முயல்கின்றது என்று குற்றம் சுமத்துவது ஒரு சின்ன விவகாரம் அல்ல. அதுவும் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் அதைக் குறிப்பிடுவது மிக முக்கிய அம்சமாகும். அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோப்புள்ளே போன்ற உள்நாட்டில் வாக்காளர்களைச் சமாளிக்கவும், தமது ஆதரவு மற்றும் செல்வாக்கைப் பெருக்கவும், வாயில் வந்தபடி கருத்து வெளியிடும் ஒரு சராசரி அரசியல்வாதியின் கூற்று அல்ல இது. அரசில் பொறுப்புவாய்ந்த பதவியில் இருக்கும் ஓர் அதிகாரி வெளியிட்ட கருத்து இது. அதுவும், அரசின் சார்பில் சர்வதேச தொடர்பாடல்களை மேற்கொள்ளும் அதிகாரத்தில் இருக்கின்ற இராஜதந்திரத் தகுதியுடைய ஓர் அதிகாரியின் கூற்று இது.

அதை வெறுமனே கடந்து செல்லும் குறிப்பாகக் (passing comment) கருதி ஒதுக்கி விட முடியாது. சர்வதேச சமூகம் அப்படி ஒதுக்கிவிடாது என்பதும் கவனிக்கத்தக்கது.

நன்றி - உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெய்லி மிரர் ஆங்கில ஊடகத்தில், சிங்களவர்களாலேயே இக்கருத்து நன்றாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது!

cartoonl.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.