Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் விரோத செயற்பாடுகளின் உறைவிடமாக மாறிவரும் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் விரோத செயற்பாடுகளின் உறைவிடமாக மாறிவரும் இலங்கை

[01 - September - 2007]

காலகண்டன்

ஒரு காலத்தில் நல்ல பல விடயங்களுக்காக உலக நாடுகளில் பெயர் பெற்று விளங்கிய இலங்கை இன்று தீய விடயங்களினதும் மக்கள் விரோத செயற்பாடுகளினதும் இருப்பிடமாகி பெயர் மங்கி வரும் நாடாகக் காட்சி தருகின்றது. முப்பது வருட இன முரண்பாட்டு யுத்தம் அரசியல் தீர்வு மறுக்கப்பட்ட நிலையில் தொடரப்படுகின்றது. அதன் எதிர் விளைவுகள் சகல துறைகளிலும் பாதக நிலைமைகளைத் தோற்றுவித்து நிற்கின்றமை இன்றைய யதார்த்தமாகும். யுத்த அழிவுகள், இடப் பெயர்வுகள் மட்டுமன்றி அன்றாடம் கொலைகளும் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களும் பாரிய மனித உரிமை மீறல்களாகத் தொடர்கின்றன. அதேவேளை பொருளாதார நெருக்கடிகளும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புகளும் வேகமடைந்து மக்களைத் தலை நிமிர விடாது அமுக்கி வருகின்றன.

பயங்கரவாத எதிர்ப்பு புலிகளை அழித்தொழிப்பது என்ற பெயரில் எவை செய்யப்பட்டாலும் சகலரும் அதனைத் தாங்கிக் கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்ற நிலைதான் காணப்படுகின்றது. அச்சுறுத்தல் மிரட்டல் இறுதியில் ஏதோ வகையில் உரியவர்களை முடித்துக் கட்டுதல் என்ற பயங்கர நிலை தான் காணப்படுகின்றது. இச் சூழலின் மறைவிலே நாடு முன்பு என்றுமே கண்டிராத வகையில் ஊழல் மோசடிகள், இலஞ்சம் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் என்பன அரசாங்க நிறுவனங்களிலும் ஆளும் உயர் மட்டங்களிலும் இடம்பெற்றுவந்து ள்ளன. இன்றும் அவை தொடர்கின்றன.

ஊழல் மோசடிகள்

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அரசாங்க பொது நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி முறைகேடுகள் பற்றி ஆராயும் பாராளுமன்றக் குழு தனது இரண்டாவது அறிக்கையை வெளியிட்டது. அதில் இருபது நிறுவனங்களில் இடம்பெற்ற 600 கோடி ரூபா ஊழல் மோசடி பற்றி விபரிக்கப்பட்டிருந்தது. இதே பாராளுமன்ற குழு எட்டு மாதங்களுக்கு முன்பு ஜனவரி 12 ஆம் திகதி வெளியிட்ட தனது முதலாவது அறிக்கையில் 26 பொது நிறுவனங்களில் இடம்பெற்ற 15,000 கோடி ரூபா ஊழல் மோசடிகள் பற்றி விபரமாக எடுத்துக் கூறி இருந்தது.

பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தலைமையிலான பாராளுமன்றக் குழு 2006 ஜூலை முதல் 2007 ஜூலை வரையான ஒருவருட காலப் பகுதியில் 106 தடவைகள் கூடி 70 வரையான நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையிலேயே இரண்டு தனித் தனி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் மூலம் மொத்தம் 46 அரசாங்க பொது நிறுவனங்களில் 15,600 கோடி ரூபா ஊழல் மோசடிக்கும் முறைகேடுகளுக்கும் உள்ளாகி தனி நபர்களின் கைகளுக்கும் பைகளுக்கும் சென்றடைந்துள்ளது.

அதி உயர் சொத்து சுகம் சுரண்டல் கொண்டோரின் ஆளும் வர்க்கப் பாராளுமன்ற ஆட்சி முறைமையின் கீழ் மேற்கூறிய ஊழல் மோசடி முறைகேடுகள் இடம்பெறுவது எவ்வகையிலும் அதிர்ச்சி தருவன அல்ல. அவை இயல்பாகவும் தொடர்ச்சியாகவும் இருந்து வரும் சங்கதிகளேயாகும்.

இருப்பினும் பாராளுமன்ற ஆட்சியின் கீழ் ஜனநாயகமும் நீதி, நேர்மையும் சட்ட ஒழுங்கும் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்கு இடையிடையே இவ்வித தெரிவுக் குழுக்களும் விசாரணைகளும் அம்பலமாக்கல்களும் இடம்பெறுவது இங்கு மட்டுமன்றி ஜனநாயகம் பேசும் நாடுகளில் நடந்து வருபவை தான்.

பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ள இப்பொது நிறுவன ஊழல் மோசடிகள், முறைகேடுகள் பற்றி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும் உயர் நீதிமன்றத்திற்கும் பாரப்படுத்த பாராளுமன்றம் முடிவு செய்திருக்கிறது. அதேவேளை, இந்த ஊழல் மோசடிகளில் பல உயர் மட்ட நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.