Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமை மீறல்களை மூடி மறைப்பதும் குற்றம்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-09-02

மனித உரிமை மீறல்களை மூடி மறைப்பதும் குற்றம்தான்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமாதான வழியில் அமைதித் தீர்வு காண்பதிலும் நாட்டில் மனித உரிமைகளைப் பேணுவதிலும் கொழும்பு அரசு பொறுப்பு ணர்வோடு செயற்படவில்லை என்று அதிருப்தி கொண் டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இது தொடர்பான தனது அதிருப்தியையும் விசனத்தையும் இலங்கைக்கு உணர்த்தும் வகையிலும், இலங்கை மீது அழுத்தம் ஒன்றை பிரயோகிக் கும் விதத்திலும் சில நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகின்றது எனச் செய்திகள் கசிந்துள்ளன.

ஏற்கனவே பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகள் இதே காரணத்துக்காகத் தமது உதவித் திட்டங்களை இடைநிறுத் தியிருக்கின்றன.

அதேபோல, ஐரோப்பிய ஒன்றியமும் இதுவரை இலங் கைக்கு தான் வழங்கி வந்த வரிச்சலுகைகளை விலக்கி, இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுக்கக்கூடும் எனக் கூறப் படுகின்றது.

தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தை இலங்கை கையா ளும் முறைமை சர்வதேச மட்டத்தில் கடும் கண்டனத்துக் கும், விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கின்றது. இந்தப் பின் புலத்திலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிருப்தியும் வெளிப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டம் இன்னும் எட்டு நாள்களில் சுவிஸ் நாட் டின் ஜெனிவா நகரில் ஆரம்பமாக இருக்கின்றது. இலங்கை நிலைமை பற்றிய விடயம் அங்கு அக்குவேறு ஆணி வேறா கப் பிய்த்து உதறப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை நிலைமை குறித்து அங்கு வெளிப்படும் விவ காரங்கள் அம்பலமாகும் உண்மைகள் இலங்கை தொடர் பாக ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு வலுச் சேர்ப்பனவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆள்கள் கடத்தப்படுதல், காணாமல் போகச் செய்யப்படு தல், படுகொலை செய்யப்படுதல், கப்பம் அறவிடுதல், ஊடக வியலாளர்களும் ஊடகங்களும் அச்சுறுத்தப்படுதல் போன்ற மோசமான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் அதிகரித் துச் செல்வது குறித்தே ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணைக்குழுவின் கூட்டத்தில் இலங்கை சம்பந்தமான விவகாரத்தில் பிரதானமாக ஆரா யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தகைய மனித உரிமை மீறல்கள் இலங்கையில் குறிப்பாகத் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கிலும் தலைநகர் கொழும்பிலும் கவலைதரும் விதத்தில் அதி கரித்து வருவது குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கள் அபாய மணி எழுப்பி வருகின்றன. மனித உரிமைகள் பேணப்படும் விவகாரத்தை உலகளாவிய ரீதியில் ஊன்றிக் கவனித்துவரும் முக்கிய அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை கூட கடந்த வியாழனன்று தான் வெளியிட்ட பிந்திய அறிக்கையில் இதனைத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் சுட்டிக் காட்டியிருக்கின்றது. சர்வதேச ரீதியிலான தனது அவ தானிப்புகளை வெளிப்படுத்தியுள்ள மன்னிப்புச் சபை, இலங்கை விடயத்தில் பலவந்தமாகக் கடத்தப்பட்டு ஆள் கள் காணாமற்போகச் செய்யப்படுவது கடந்த சில மாதங்களாக மோசமாக அதிகரித்திருப்பதாகக் கவலை தெரிவித்திருக் கின்றது.

இவ்வாறு கடத்தல், காணாமற்போகச் செய்தல் ஒரு புறம் தீவிரமடைய மறுபுறம் அதைச் சமாளித்து உண்மையை மூடி மறைக்கும் கொழும்பின் எத்தனமும் கூட முனைப்புற்றிருக் கின்றது.

இப்படி ஆள்கள் கடத்தப்பட்டு காணாமற்போகும் சம் பவங்கள் பெருமளவில் இப்போது குறைந்திருக்கின்றன என்றும்

கடந்த செப்ரெம்பர் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை காணாமற்போனவர்கள் என்று கூறப்பட்ட 1992 பேரில் 1425 பேர் மீண்டுவிட்டனர் என்றும்

ஒரு புள்ளி விவரக் கணக்கோடு தகவல் வெளியிட்டிருக் கின்றார் காணாமற்போதல் மற்றும் கடத்தல்கள் குறித்து விவாதிப்பதற்கு அரசு நியமித்துள்ள தனிநபர் ஆணைக்குழு வின் ஆணையாளரான ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி மகாநாம திலகரட்ண.

யாழ். குடாநாட்டு நிலைமைகளை ஒரு தடவை இந்த ஆணையாளர் ஊன்றிக் கவனித்திருப்பாராயின் இப்படி நிலைமை சீரடைந்து வருகின்றது என்ற ஒரு கருத்தை அவர் வெளியிட்டிருக்கமாட்டார் என நம்பலாம்.

குடாநாட்டில் மர்ம நபர்களினால் ஆள்கள் கடத்தப்படு வதும் சுட்டுக்கொல்லப்படுவதும் பெருங் கொடூரமாகத் தொடர்கின்றது. யாழ்.குடாநாட்டைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறும் படைகளோ இந்த அராஜகங்கள் யாவற்றையும் இனந்தெரியாத தரப்புகள் மீது சுலபமாக சுமத்திவிட்டு ஆசுவாசமாக அமர்ந்திருக்கின்றன.

யாழ். குடாநாட்டில் அடிக்கடி அங்கு ஆயுதம் கைப்பற்றி னோம், இங்கு புலிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடித் தோம், அத்தனை புலிகளைப் பிடித்தோம், இத்தனை புலி களைக் கைது செய்தோம் என்றெல்லாம் படைத்தரப்பு அவ் வப்போது கதை விடுகின்றது. ஊடகங்களும் அச்செய்தி களைத் தாராளமாக எடுத்துச் சென்று மக்களுக்குத் தெரிவிக் கின்றன.

ஆனாலும் குடாநாட்டைத் தமது முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, வெற்றிகரமாக இவ்வளவு புலி முறியடிப்பு நட வடிக்கைகளையும் முன்னெடுக்கும் படையினர் யாழ். குடா நாட்டையே பெரும் பயங்கரத்துக்குள் ஆழ்த்தியிருக்கும் இந் தக் கொடூரக் கொலையாளிகள், ஆள்கடத்தல்காரர்களை ஒரு தடவையாவது வழி மறிக்கத் தன்னும் முடியவில்லை; இயலவில்லை.

இத்தகைய இயலாமை வெளிப்படுத்தி நிற்கும் உண்மை என்ன? அதற்குள் உறைந்து புதைந்து கிடக்கும் சூட்சுமம் என்ன? இவை எல்லாம் கூட ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தில் அம்பலமாகும், வெளிப்படுத்தப்படும் என எதிர் பார்க்கலாம்.

அப்போது மகாநாம திலகரட்ண ஆணைக்குழு போன்ற வற்றின் சமாளிப்பு அறிவிப்புகள், அறிக்கைகள் கந்தலாகி விடும் என்பது நிச்சயம்.

ஆள்கடத்தல்கள், காணாமற்போகச் செய்தல் போன்ற மோசமான மனித உரிமை மீறல்களை மூடி மறைக்க முயல் வது கூட அந்த மனித உரிமை மீறல்கள் போன்றே மோசமான குற்றங்கள்தாம். சம்பந்தப்பட்டோர் இதை உணர்வது நல் லது.

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.