Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முசலி ஆக்கிரமிப்பு தாக்குதல் நடவடிக்கையில் இறந்த பொதுமக்கள் தொகை 13 ஆக அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 03-09-2007 04:28 மணி தமிழீழம் [மயூரன்]

முசலி ஆக்கிரமிப்பு தாக்குதல் நடவடிக்கையில் இறந்த பொதுமக்கள் தொகை 13 ஆக அதிகரிப்பு

மன்னார் முசலி பிரிவுக்குட்பட்ட பசுந்தென்றல் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆளஊடுருவும் அணியினர் மேற்கொண்ட நாசகார கிளைமோர் தாக்குதலில் இருசிறுவர்கள்இ 19 அகவையுடைய சிறுமி உட்பட நான்கு பெண்கள், நான்கு ஆண்கள் என 12பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொல்லப்பட்டவர்களில் இருவர் இன்னமும் இனம்காணப்படவில்லை எனத்தெரியவருகிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்த தந்தைஇ தாய்இ நான்கு வயது குழந்தை மற்றும் அவரது அன்ரி என நால்வரும் மற்றய குடும்பத்தை சேர்ந்த மூவரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை மற்றொரு பொதுமகனும் சனிக்கிழமை சிறீலங்கா படையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆளஊடுருவும் அணியின் தாக்குதலுக்குட்பவட்டவர்களை மன்னார் மாவட்ட மருத்துவ மனைக்கு சிறீலங்கா செஞ்சிலுவை சங்க மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியோர் ஐந்து வாகனங்களில் ஞாயிறு மாலை 6.15 மணியளவில் கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை மன்னார் மாவட்ட ஆண்டகை ராஜப்பு ஜோசெப் அடிகளார் அவர்கள் இறந்தவர்களை நூற்றுக்கணக்கான உறவினர்கள் முன்னிலையில் உடலங்களை இனம்காண்பதற்கு சென்றிருந்ததாக தெரியவருகிறது.

வாகன சாரதியான 24 அகவையுடைய செல்வகுமார்இ 25 அகவையுடைய அவரது மனைவி பிறின்சி செல்வகுமார்இ அவர்களது 4 அகவையுடைய குழந்தை மற்றும் அவர்களது அன்ரி 42 அகவையுடைய ஜேவுதாசன் எலிசபெத் என மாவட்ட நீதிபதி ரி.ஜெ.பிரபாகரன் முன்னிலையில் இனம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை மற்றய குடும்பத்தை சேர்ந்த 50 அகவையுடைய பணிமயம் ஜெயராஜ், அவரது 20 அகவையுடைய மகன் பணிமயம் ஒஸ்கார்இ 19 அகவையுடைய பெண்மணியும் அவரது நெருங்கிய உறவினர் என இனம் காணப்பட்டுள்ளது.

ஏனைய மூவரும் 4 அகவையுடைய பெண்குழந்தை புவிசுவேதா, 25 அகவையுடைய ஆண் கிருஸ்ணபாலன்இ 60 அகவையுடைய பெண்மணி சரோஜா நாகமுத்து எனவும் தெரியவருகிறது.

நன்றி

பதிவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.