Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய பாதைக்கு தேவை புதிய பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பாதைக்கு தேவை புதிய பார்வை

[03 - September - 2007]

தெற்காசிய நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மூன்று முக்கிய பிரச்சினைகள் - வறுமை, தீவிரவாதம், ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய சுதந்திர பத்திரிகையாளர்கள் சங்கம் நடத்திய ஆறாவது மண்டல மாநாடு இப் பிரச்சினைகள் குறித்து விவாதித்து, சில வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.

`ஊடகங்கள், அமைதி, வறுமை ஒழிப்பு' என்ற தலைப்பில் கொழும்பில் இரு தினங்கள் நடைபெற்ற சாஃப்மா (SAFMA) மாநாட்டில் தெற்காசிய நாடுகளின் பத்திரிகையாளர்கள், பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர்.

"தீவிரவாதம் இருக்கும் வரை - ஊடகங்களின் சுதந்திரத்துக்குப் பாதிப்பு நீடிக்கும் வரை - வறுமை ஒழிப்பு சாத்தியமில்லை". அந்த மாநாட்டில் பங்கேற்ற `சார்க்' பத்திரிகையாளர் பிரதிநிதிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்திய கருத்து இதுதான்.

இந்த மாநாட்டில் முத்தாய்ப்பாகப் பங்கேற்றவர் நோபல் பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ், சிறிய அளவிலான பொருளாதாரத் திட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை வலுப்படுத்த இயலும் என்றார் அவர். தாம் வெற்றிகரமாகச் செயல்படுத்திய கிராம வங்கி திட்டத்தின் சிறப்புகளை அவர் விரிவாக விளக்கினார்.

"அரசு சார்புத் திட்டங்கள் எப்போதுமே வெற்றிபெறும் என்று சொல்ல முடியாது. ஆனால், தனி நபர்கள் சிறு அளவில் குழுக்களாகச் செயல்பட்டு பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தினால் சிறப்பான வெற்றியைப் பெற இயலும்" என்றார். இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும் சுய உதவிக் குழுக்களின் வெற்றியை அவர் சுட்டிக் காட்டினார்.

கிராம வங்கித் திட்டத்தை மக்கள் பெருமளவு பயன்படுத்திக் கொண்டதற்கு முதன்மையான காரணம் அதிகாரவர்க்க நடைமுறைகள் இல்லாததுதான் என்றார் அவர். "கண்ணில் தென்பட்ட பிச்சைக்காரர்களைப் பிடித்து, `கடனுதவி அளித்தால், தொழில் தொடங்கி பிழைப்பாயா?' என்று கேட்டோம். ஆரம்பத்தில் அவர்களிடம் தயக்கமே இருந்தது. முதல் கட்டமாக எங்களது ஊழியர்களுக்கு ஊக்கமளித்தோம். தரப்பட்ட கடனுக்கு வட்டி இல்லை என்று தெம்பூட்டினோம். விளைவு, இதுவரை ஒரு இலட்சம் பிச்சைக்காரர்கள் கிராம வங்கியின் நிதியுதவியைப் பெற்றுள்ளனர்" என்றார் யூனுஸ்.

இந்த மாநாட்டில் முன்னிலைப்படுத்தப்பட்ட இன்னொரு முக்கிய விடயம். தெற்காசிய நாடுகளில் நிலவும் பத்திரிகைகள் மீதான கட்டுப்பாடு அல்லது அடக்குமுறை.

நேபாளத்தில் இருந்த கெடுபிடி தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருவதாக அந்நாட்டுப் பத்திரிகையாளர்கள் கூறினர். அதே சமயம் மாலைதீவில் பத்திரிகைகளின் மீதான கட்டுப்பாடு நெருக்குகிறது என்ற கவலையைப் வெளிப்படுத்தினர் அந்நாட்டுப் பத்திரிகையாளர்கள்.

விவாத அரங்கில் பல்வேறு உணர்வுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. "யாழ்ப்பாணத்தில் இதுவரை 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்" என்ற அதிர்ச்சித் தகவலை வேதனையுடன் பகிர்ந்து கொண்டார் யாழ். பத்திரிகையாளர் ஒருவர்.

"சிலர் போராளிகளாலும், வேறு சிலர் அரசுப் படைகளாலும் கொல்லப்படுகின்றனர். சில சமயம் போராளிகளின் பெயரில் உள்ளூர் சமூக விரோதிகள் ஆள் கடத்தல், பணம் பறிப்பு போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் கடமை" என்றார் கொழும்பைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர்.

கொழும்பு மாநாட்டில் `சாஃப்மா' அமைப்பின் தலைமைச் செயலராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இம்தியாஸ் ஆலம், நடுநிலையுடன் நின்று பாகிஸ்தான் அரசின் அணுகுமுறைகளை விமர்சித்தவர் என்ற பெயரைப் பெற்றவர். `டெய்லி மிரர்' நாளேட்டின் ஆசிரியராக இருந்த அவர் தற்போது சாஃப்மா அமைப்பின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்.

"தெற்காசிய நாடுகள் ஒவ்வொன்றிலும் ஏதாவது பிரச்சினைக்குரிய நிகழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், உண்மை எங்கே இருக்கிறது, யார் பக்கம் இருக்கிறது என்பதை வெளியுலகுக்குக் காட்ட வேண்டியது ஊடகங்களின் பங்கு. அதற்கு சாஃப்மா உறுதி செய்ய வேண்டும்" என்கிறார் இலங்கையின் சாஃப்மா பிரிவுத் தலைவர் லக்க்ஷ்மன் குணசேகர.

பிரச்சினை உள்ள பகுதிகளுக்கு `சார்க்' நாட்டுப் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செல்ல அந்தந்த நாடுகள் உதவவேண்டும். அங்குள்ள தகவல்களைச் சேகரித்து உலகுக்கு கொண்டு வரவேண்டும், அதன் மூலம் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்க வழிகளையும் தெரிவிக்க வேண்டும் என்று சில பத்திரிகையாளர்கள் யோசனை தெரிவித்தனர்.

நிறைவாக சில பிரகடனங்களும் நிறைவேற்றப்பட்டன.

இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க அந்தந்த அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, இலங்கையில் போர்நிறுத்தம் செயல்படுத்தப்பட வேண்டும். போராளிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் ரீதியில் தீர்வு காண வேண்டும். அதற்கு இந்தியா உதவ வேண்டும்.

சார்க் நாடுகளில் வறுமையைப் போக்க புதிய திட்டங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பன பிரகடத்தின் முக்கிய அம்சங்கள்.

மேலை நாடுகளின் ஆயுதங்களான உலகமயமாதல், அணு ஆயுதப் பரவல் தடை போன்றவற்றால் தெற்காசிய மண்டல நாடுகள் பாதிக்கப்படாமல் புதிய பாதையில் செல்ல புதிய பார்வை தேவை என்பதை இந்த மாநாடு வலியுறுத்தியது.

தினமணி

நன்றி - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.