Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள இயலாத அளவுக்கு சிறிலங்காவில் நிதிப் பற்றாக்குறை: தி.இறைவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள இயலாத அளவுக்கு சிறிலங்காவில் நிதிப் பற்றாக்குறை: தி.இறைவன்

[திங்கட்கிழமை, 3 செப்ரெம்பர் 2007, 14:57 ஈழம்] [தாயக செய்தியாளர்]

வடக்கில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள இயலாத அளவுக்கு சிறிலங்காவில் நிதிப் பற்றாக்குறை உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் செய்தி ஆசிரியர் தி.இறைவன் தெரிவித்துள்ளார்.

பூநகரி முழங்காவிலில் கடந்த வெள்ளிக்கிழமை (24.08.07) நடைபெற்ற புலிகளின் குரல் வானொலியின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் அவர் பேசியதாவது:

நம்மை சிங்கள அரசாங்கம் இராணுவ ரீதியாக ஒடுக்கிக்கொண்டிருந்த அதே காலத்தில் கருத்துக்கள் ரீதியாகவும் நம்மை ஒடுக்கிக்கொண்டிருந்தது.

அவர்களுடைய வானொலிகள், தொலைக்காட்சிகள் அவர்களுடைய செய்தி ஊடகங்கள் அனைத்தின் மூலமும் நம்மை சிங்கள தேசம் அடிமைப்படுத்தி வந்திருக்கின்றது.

அவர்களுடைய பொய்களையும் எங்களுடைய இனத்தின் விடுதலைக்கெதிரான கருத்துக்களையும் எங்களுடைய மக்கள் மீது திணித்து எங்களைக் கருத்து ரீதியாகவும் எதிரிகள் அடிமைப்படுத்தி வந்திருக்கின்றனர்.

எங்களுடைய மண்ணில் நாங்கள் முழுமையான விடுதலை பெற்று உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய தலைமையிலே இந்த விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்து இன்று மிகவும் ஒரு உச்சகட்ட நிலைமையிலே வந்து நின்றிருக்கின்றது.

பௌதீக ரீதியாக எங்களுடைய நிலங்களை எங்களுடைய மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் உரிமையுடன் வாழ்வதற்குமான ஓர் மீட்பு நடவடிக்கையாக எங்களுடைய தேசியத் தலைவர் அவர்களுடைய தலைமையிலான இந்த விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்ற அதேவேளை கருத்து ரீதியாக எதிரிகள் எங்களை ஆக்கிரமித்திருந்த நிலைமையில் கருத்து ரீதியாகவும் எங்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காக எங்களுடைய தேசியத் தலைவர் அவர்கள் எங்களுடைய மக்களுக்காக எங்களுடைய தமிழ் மொழிக்காக எங்களுடைய உரிமை மீட்புக்காக எங்களுடைய மண்ணுக்காக ஊடகங்களை உருவாக்கினார்.

1984 இல் விடுதலைப் புலிகள் ஏடு தொடங்கியது முதல் கடைசியாக இப்பொழுது செய்கோள் வழியாகவும் தரை வழியாகவும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி என்ற தொலைக்காட்சி ஊடகம் வரைக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் எவ்வளவுக்கு எவ்வளவு நவீனத்துவமாக ஊடகங்களை உருவாக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நவீனத்துவமாக ஊடகங்களை உருவாக்கி எங்களுடைய தாய் மண்ணில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கும் புலம்பெயர்ந்து உலகம் முழுமையிலும் வாழ்ந்து வருகின்ற எங்களுடைய உறவுகளுக்கும் வேற்று நாடுகளில் வாழ்ந்து வருகின்ற எங்களுடைய தாய்மண் அல்லாதவர்களான தமிழ் மக்களுக்கும் எங்களுடைய விடுதலைக் கருத்தை எங்களுடைய தேசியக் கருத்தைச் சொல்வதற்கான ஊடகங்கள் நிறையவே எங்களுடைய தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையிலே எங்களுடைய மக்களிடம் எங்களுடைய மக்கள் மத்தியில் அன்றாடம் உறவாடிக் கொண்டிருக்கின்ற ஊடகமாகப் புலிகளின் குரல் ஊடகம் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் நாள் தொடங்கி இன்று வரை தொடர்ச்சியாக நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது.

தொடக்கத்தில் யாழ். குடாநாட்டிலே இயங்கி வந்த அதாவது ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் எங்களுடைய ஊடகம் இன்று எங்களுடைய தாயகத்தின் அரைவாசிப் பகுதிக்கு மேல் சென்றடையக் கூடியதாக வளர்ச்சியடைந்திருக்கிறது. உலகளவில் வாழ்கின்ற தமிழ் மக்களைச் சென்றடைவதற்கு ஏற்றவாறு வளர்ச்சியடைந்திருக்கின்றது.

அந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக எங்களுடைய வானொலியும் மக்களும் இணைய வேண்டும் என்பதற்காக எங்களுடைய வானொலியில் மக்கள் பங்குபற்ற வேண்டும் என்பதற்காக பங்குபற்ற வேண்டும் என்பதற்காக எங்களுடைய வானொலியின் பத்தாவது ஆண்டு நிறைவில் 2,000 ஆம் ஆண்டில் நாங்கள் வன்னிப்பகுதியில் அதாவது எங்களுடைய நிர்வாகப் பகுதியில் வானொலி மன்றங்களை ஊக்குவித்து ஊரூராக அமைத்திருந்தோம்.

அன்றைய தொடக்ககால வானொலி மன்றங்களின் உருவாக்கத்தின் போது முழங்காவில் பகுதி உள்ளடக்கப்படவில்லை. அப்பொழுது இருந்த எங்களுடைய சக்திக்கேற்ப எங்களுடைய வலுவுக்கேற்ப எங்களுடைய வானொலிமன்றங்கள் அமைந்திருந்தன.

கடைசியாக வன்னி மேற்குப் பரப்பளவில் வன்னி கிழக்கு, வன்னி மேற்கு என்று அன்று ஜெயசிக்குறு சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலம் வன்னி துண்டாடப்படக்கூடிய ஒரு ஆபத்தான சூழ்நிலை இருந்த போது வன்னியின் கிழக்குப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் வானொலி மன்றங்கள் இயங்கின.

வன்னியின் மேற்குப் பகுதியில் மல்லாவியிலும் அக்கராயனிலும் வானொலி மன்றங்கள் இயங்கின. அந்த அக்கராயன் வானொலி மன்றத்தின் நீட்சியாக அந்த அக்கராயன் வானொலி மன்ற நிர்வாகத்துக்கு உள்ளடங்கலாக முழங்காவில் பகுதியிலிருந்து வானொலி மன்ற நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின.

அதே போல் பூநகரிப் பகுதியிலும் வானொலி மன்ற நிகழ்ச்சிகள் ஒலிபரப்புச் செய்யப்பட்டன. இப்பொழுது முழங்காவில் பகுதி மன்னார் மாவட்டத்துடன் உள்ளடக்கப்பட்டு ஓர் வானொலி மன்றம் உருவாக்கப்பட்டு இந்த மக்களுடைய வேண்டுகைக்கு ஏற்ப அவர்களுடைய ஆவலை நிறைவு செய்கின்ற வகையில் இந்த வானொலி மன்றம் உருவாக்கப்பட்டு இந்த வானொலி மன்றத்தின் முத்தமிழ்க் கலையரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதேவேளை இந்த முத்தமிழ்க் கலையரங்கம் என்பது நாங்கள் ஓர் செவிப்புல ஊடகம் அதாவது கேட்பதற்குரிய ஊடகம்.

அதற்குக் காட்சி கிடையாது. செவிகளால் தான் நாங்கள் வானொலியைக் கேட்டு எங்களுடைய மனத்திரைகளில் காட்சிகளை உருவகித்துக் கற்பனை செய்து கொண்டு நாங்கள் அதற்குள் வாழ வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த நிலைமையில் வானொலியில் பங்கு பற்றுகின்ற மக்களுக்கு இந்த வானொலி மன்றங்கள் ஊடாகப் பங்கு பற்றுகின்ற மக்களுக்கு ஓர் அரங்க வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் ஒரு கட்புல வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் முத்தமிழ்க் கலையரங்க நிகழ்ச்சிகள் மாதா, மாதம் 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நடைபெற்று வருகின்றன.

முதல் ஆண்டில் இந்த முத்தமிழ் கலையரங்கம் எங்களுடைய புலிகளின் குரல் மையமிருந்த முள்ளியவளையிலே வித்தியானந்தாக் கல்லூரி மண்டபத்திலே நடைபெற்றது.

அடுத்த 2002 ஆம் ஆண்டு தொடக்கம் வானொலி மன்றங்கள் எங்கெங்கு இருந்தனவோ அந்த மன்றங்களினுடைய தீர்மானத்தின் அடிப்படையில் அந்தந்த இடங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு முத்தமிழ் கலையரங்க நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையிலே முழங்காவில் பகுதியிலே இந்த முத்தமிழ்க் கலையரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எங்களுடைய ஊடகங்கள் ஊடாக நாங்கள் எங்களுடைய விடுதலைக் கருத்தை வலுப்படுத்திச் சொல்ல வேண்டும். எதிரியின் ஆக்கிரமிப்பை உடைப்பதற்கு நாங்கள் எங்களுடைய ஊடகத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஊடகத்தினூடாக எங்களுடைய பங்களிப்புகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஊரெங்கும் ஒலிவெள்ளம் என்கின்ற எங்களுடைய நடமாடுகின்ற சிறப்பு ஒலிபரப்புக்கள் மூலம் எங்களுடைய மக்களுடைய விடுதலைக் கருத்துகள் விடுதலையை வலுப்படுத்துகின்ற எண்ணக்கருத்துகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மூன்று நாட்களாக இந்த ஊரெங்கும் ஒலிவெள்ளமாக முழங்காவில் வாழ் மக்கள் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர

ஓம் அண்ணை சரியாய் சொன்னியள் அரசாங்கத்திற்கு நிதிப்பற்றாக்குறை தான் வடக்கில் போர் செய்வதற்கு ஆனால் சிலாவத்துறையையும் அரிப்புத்துறையும் நீங்கள் எப்ப கிழக்கிற்கு அல்லது மேற்கிற்கு மாத்தினியள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.