Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் கடல்வழி விநியோகங்களை முடக்க இந்திய உதவ வேண்டும் - மகிந்த ராஜபக்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 03-09-2007 18:44 மணி தமிழீழம் [மயூரன்]

புலிகளின் கடல்வழி விநியோகங்களை முடக்க இந்திய உதவ வேண்டும் - மகிந்த ராஜபக்ச

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்வழி விநியோகங்களை முடக்க இந்திய உதவி புரிய வேண்டும் என மகிந்த ராஜபக்ச இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய ஜ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திற்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கடல்வழி விநோயகங்களை முற்றுகையிட இந்திய மத்திய அரசாங்கம் உதவியளிக்க வேண்டும்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவு மிகவும் வலுமானது. எனது நாட்டில் உள்ள ஏனைய அரசியல் தலைவர்களை விட நான் இந்தியாவை நன்கு புரிந்துள்ளேன்.

எமது நாட்டில் இயல்பு நிலையை உருவாக்கமும் அபிவிருத்தியை முன்னெடுப்பும் இந்தியாவுக்கு இன்றியமையாதது. இதனாலேயே இனப்பிரச்சினைக்கு முக்கிய பங்கினை வகிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்.

இந்திய உதவியை நான் மட்டும் நாடவில்லை. சமாதானத்தை விரும்பும் அனைத்து உலகமும் நாடி நிற்கின்றது.

பாயங்கரவாதிகளின் பிடியிலிருந்து இலங்கையின் ஜனநாயகத்தை நிலைநாட்ட இந்திய உதிவி செய்யவேண்டும்.

யாழ் குடாநாட்டிலும் திருகோணமலையிலும் உள்ள கடற்பிரதேசத்தில் இந்தியாவின் உதவி தேவைப்படுகின்றது.

பயங்கரமான ஆயுதங்கள் எமது நாட்டினுள் கடத்தப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்.

சிறீலங்காவுக்கான படைத்துறை தளபாடங்களை தொடர்ந்தும் பாகிஸ்தானிடனும் சீனாவிடமும் பெற்றுக்கொள்வோம்.

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் நிலவும் தளமாக சிறீலங்கா எந்த ஒரு சக்தியும் பயன்படுத்துவதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை முதல் முதலில் சந்தித்த போது எந்தவொரு நாடும் இந்தியாவுக்கு எதிராக இலங்கையைப் பயன்படுத்த நான் அதிகாரத்தில் இருக்கும் வரை அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தேன்.

எமது வான் படையின் பலத்தை அதிகரிப்பது தொடர்பில் கொள்வனவு செய்யவிருந்த மிக் 29 ரக மிகையொலி விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் இந்தியாவுக்கு விளக்கம் அளித்திருந்தேன்.

இந்தியா எமக்கு பொருளாதார உதவிகளை வழங்கியதோடு, படைத்துறைப் பயிற்சிகளையும், ரடார் கருவிகளையும், படைத்துறை தளபாடங்களையும் வழங்கியுள்ளது என மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி - பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.