Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவிற்கான கடன் வழங்கல் தாமதமடையலாம்: "த புளும்பேர்க்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவிற்கான கடன் வழங்கல் தாமதமடையலாம்: "த புளும்பேர்க்"

[புதன்கிழமை, 5 செப்ரெம்பர் 2007, 13:48 ஈழம்] [பி.கெளரி]

உலகின் கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு, சிறிலங்கா இராணுவத்தினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் ஆகியவற்றால் சிறிலங்காவுக்கான முதற்கட்ட கடன் தொகை வழங்கல் தாமதமடையலாம் என்று "த புளும்பேர்க்" இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அந்த இணையத்தள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்களின் தமிழ் வடிவம்:

முதலீடுகளுக்கான ஆபத்துக்கள் குறையும் வரையும் தமது எல்லா நிதி நடவடிக்கைகளையும் முதலீட்டாளர்கள் நிறுத்தியுள்ளனர், அவர்கள் சந்தைப்படுத்தலுக்கான சிறந்த சூழ்நிலை உருவாகும் வரை காத்திருக்க வேண்டும் என்று ஹொங்ஹெங்கை தளமாக கொண்டுள்ள ஐஎன்ஜி என்னும் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிமிக்க முதலீட்டு நிறுவனத்தின் முகாமையாளர் ஜோல் கிம் தெரிவித்துள்ளார்.

500 மில்லியன் தொகையை வழங்குவதில் ஏற்படும் தாமதம், வீதிகளை புனரமைத்தல், துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல், கடந்த இரு வருடங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் மந்தமடைந்துள்ள பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் போன்ற அரசின் திட்டங்களுக்காக மலிவான நிதியை தேடும் முயற்சியை தடைப்படுத்தலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய வங்கி தனது வட்டிவிகிதத்தை 8.25 இல் இருந்து 10.5 ஆக ஏழு முறை அதிகரித்துள்ளது. இது வாழ்க்கை செலவின் உயர்வை கட்டுப்படுத்தி, தேசிய நிதி முகாமைத்துவத்தை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது.

இந்த உயர்ந்த வட்டி விகிதங்கள் மற்றும் தனிநாடு கோரி போராடும் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்கள் என்பன சிறிலங்காவின் 26 பில்லியன் டொலர் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மந்தமாக்கியுள்ளது.

இந்த ஆண்டின் மார்ச் 31 ஆம் நாளுடன் முடிவுற்ற முதல் மூன்று மாத காலத்தில் பொருளாதார வளர்ச்சியானது 6.1 விகிதமாகும்.

இது கடந்த ஆண்டின் இந்த காலப்பகுதியின் 7.9 விகிதத்துடன் ஒப்பிடும் போது அண்ணளவாக 2 விகிதம் குறைவாகும்.

தற்போதைய சந்தை நிலைமைகளால் நாம் தளர்வடையவில்லை, நாம் எமது திட்டங்களை நோக்கி செயற்பட்டுக்கொண்டு வருகின்றோம். நிலைமைகள் ஒரு இரவிலும் மாற்றமடையலாம் என்று சிறிலங்காவின் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தெற்கு கரையில் உள்ள தீவான சிறிலங்கா தனது முறிகளை இந்த மாதத்தின் முற்பகுதியில் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாக சிறிலங்காவின் மத்திய வங்கி மின்னஞ்சல் மூலம் ஜூலை 13 ஆம் நாள் தெரிவித்திருந்தது.

எனினும் அமெரிக்காவின் வீட்டுக்கடன் திட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களால் சந்தை நிலை உறுதியற்ற நிலையை அடைந்துள்ளதாகவும், அதனால் சிறிலங்காவின் நிதி நிலமை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக பிற்ச் தரப்படுத்தும் அமைப்பு கடந்த ஓகஸ்ட் 22 ஆம் நாள் தெரிவித்திருந்தது.

அது சிறிலங்காவுக்கான நீண்டகால வெளிநாட்டு கடன் தரப்படுத்தல் நிலையாக இரு பிபி எதிர்மறையை வழங்கியிருந்தது. இது முதலீட்டுக்கான தரத்தில் இருந்து மூன்று நிலைகள் குறைவானது.

ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியான முறிகளை விற்பனை செய்யும் திட்டத்தை வியட்னாமும் இந்த மாதம் மீள்பரிசீலனை செய்ய உள்ளது. இறுதி முடிவை எடுக்கும் முன்னர் சந்தைப்படுத்தல்களுக்கான அவசியத்தை எமது அரசு ஆய்வு செய்ய வேண்டி உள்ளது என்று வியட்னாம் பிரதமர் நுஜென் தான் டங் கடந்த ஓகஸ்ட் 13 ஆம் நாள் தெரிவித்திருந்தார்.

ஜேபி மோர்கன் சேஸ் அன் கோ ஈஎம்பிஐ சுட்டெண் தரவுகளின் படி அமெரிக்காவின் நிதித்துறையின் கடந்த ஜூன் 1 ஆம் நாளுக்கான மிகக்குறைந்த சுட்டெண் 1.48 ஆக இருந்த போதும் கடந்த ஓகஸ்ட் 30 ஆம் நாள் அது 2.33 ஆகி உயர்ந்திருந்தது.

எனினும் அதிகரிப்புக்கள் அல்லது மேலதிகமான வருமானம் போன்றவற்றையே முதலீட்டாளர்கள் சந்தை முறிகளில் வேண்டி நிற்கின்றனர்.

நாட்டின் உட்கட்டுமானப்பணிகளை மேம்படுத்தும் முகமாக தனக்கு தேவையான நிதியை திரட்டுவதற்கு சிறிலங்கா அரசு பார்கிளேஸ் கபிரல், எச்எஸ்பிசி பிஎல்சி, ஜேபி மோர்கன் ஆகிய நிதி நிறுவனங்களை கடந்த ஓகஸ்ட் 2 ஆம் நாள் நாடியிருந்தது. இந்த கடன் சிறிலங்காவின் நிறுவனங்கள் அனைத்துலக முதலீட்டு சந்தைகளில் நிதியை திரட்டுவதற்கு உதவும் என்று மத்திய வங்கி கடந்த ஜூலை 13 ஆம் நாள் தெரிவித்திருந்தது.

வெளிநாட்டு கடன் அரசின் நிதி செலவீடுகளை குறைக்கலாம். 10 வருட உள்ளுர் முறிகள் 18 விகிதத்தை ஈட்டியுள்ளதாக கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் வர்த்தக வங்கி தெரிவித்துள்ளது. வியட்னாமின் 6.875 விகித முறிகளானது 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைய உள்ளது.

இது கடந்த மே மாதம் 2 ஆம் நாள் 5.7 விகிதத்தில் இருந்த போதும் தற்போது 6.47 விகிதமாக உயர்ந்துள்ளது.

2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நான்கு வருடங்களின் பின்னர் முறிவடைந்து விட்டது. 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 5,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்பு நிலையங்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலை தொடர்ந்து சிறிலங்காவுக்கான உல்லாசப் பயணிகளின் வரவு ஜூலை மாதம் 44,142 ஆக் வீழ்ச்சி கண்டுள்ளது. இது 20 விகித வீழ்சிசியாகும்.

சிறிலங்காவுக்கு கடன் வழங்கும் நேரம் சிக்கலானது. அங்கு மோதல்கள் நடைபெறுவது எப்போதும் சாதகமற்ற நிலையையே உருவாக்கும் என 7.6 பில்லியன் டொலர்களை முதலீடாக கொண்ட சிங்கப்பூரைத் தளமாகக்கொண்ட பிரமெரிகா பிக்ஸ்ட் இன்கம் ஏசியா நிறுவனத்தை சேர்ந்த கிளிபோட் லோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் மிகப்பெரும் தொலைபேசி நிறுவனமான சிறிலங்கா ரெலிகொம் 100 மில்லியன் டொலர்களை 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெற்றிருந்தது.

தெற்காசிய தீவில் உள்ள நிறுவனம் ஒன்று பெற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு கடன் இதுவாகும்.

ஓன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும் சிறிலங்கா அதன் கடன்களால் பாதிப்புக்களுக்கு உள்ளாகாது. இது வட்டி விகிதங்களை கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவும் என்று எச்எஸ்பிசி வங்கியின் கொழும்பு பிராந்திய முகாமையாளர் லக்சன் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் இராணுவத்தினருக்கான செலவுகள், அதிகரித்துள்ள மசகு எண்ணை விலைகள் காரணமாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரல், பணவீக்கத்தை 10 விகிதமாக கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டு விட்டதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

பணவீக்கம் ஓகஸ்ட்டில் 17.3 விகிதமாக இருந்தது.

வட்டிகளை செலுத்துவதற்காகவும், ஊதியங்களை வழங்குவதற்காகவும் இந்த ஆண்டிற்கான வரவு - செலவு திட்டத்தின் செலவுகளை 19 விகிதத்தால் அரசு அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பு 835 பில்லியன் ரூபாய்களாகும் (7.4 பில்லியன் டொலர்கள்). இந்த ஆண்டுக்கான இராணுவ செலவீனங்களும் 44 விகிதமாக சடுதியாக அதிகரித்துள்ளது.

தற்போது உலக நிதி சந்தை தளம்பல் நிலையில் உள்ளதனால் பெரும் பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றகரமானதாக இல்லை. எனினும் சிறிலங்காவின் பாதுகாப்பும் இதில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் பிற்ச் அமைப்பின் மூத்த பணிப்பாளர் போல் ராவ்கின்ஸ் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - புதினம்

கொடுக்கிறது கடன் பிச்சை அதை நேரத்துக்கு கொடுத்தா போக வேண்டிய இடத்துக்கு போகும் தானே

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.