Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக இரும்பு மனிதன் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குமரி ஸ்ட்ராங் மேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக இரும்பு மனிதன் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குமரி ஸ்ட்ராங் மேன்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
உலக இரும்பு மனிதன் போட்டி, ஸ்ட்ராங் மேன் கண்ணன்

உலக இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொண்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ட்ராங் மேன் கண்ணன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் ஸ்ட்ராங் மேன் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்கும் வீரர்கள் சாதாரணமாக இல்லாமல், தங்கள் உடல் எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனை படைத்து வருகின்றனர்.

இந்த ஆண்டிற்கான உலக இரும்பு மனிதன் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் 7 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற நிலையில், இந்திய அளவில் பல்வேறு ஸ்ட்ராங் மேன் சாதனைகள் புரிந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ட்ராங் மேன் கண்ணன் லாங் பிரஸ், யோக் வாக், டயர் பிலிப் மற்றும் ஸ்டோன் என்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு, இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார் கண்ணன்.

 

யார் இந்த ஸ்ட்ராங் மேன் கண்ணன்?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாமரைகுட்டிவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். எம்.ஏ., பட்டதாரியான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக பளு தூக்கி சாதனை புரிந்து வருகிறார்.

கண்ணன் இளம் வயதில் இருந்து உடற்பயிற்சி செய்து பல பரிசுகளை பெற்றதுடன், பல்வேறு எடை பிரிவு போட்டிகளில் பங்கேற்று கனரக வாகனங்களை தனது உடலால் இழுத்து மூன்று முறை 'ஸ்ட்ராங் மேன் ஆஃப் இந்தியா' பட்டம் வென்றுள்ளார். பஞ்சாபில் நடந்த உலக வலிமையான மனிதர் போட்டியில் 3-ம் இடம் பிடித்தார்.

கடந்தாண்டு நாகர்கோவில் அருகே விஸ்வாசபுரம் நான்கு வழிச்சாலையில் நேற்று 13.5 டன் கிலோ எடையுள்ள 14 டயர் லாரியை கயிற்றால் கட்டி 4 நிமிடங்களில் 111 மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத்தார்.

மேலும், நாகர்கோவிலில் நடந்த சர்க்கஸ் ஒன்றில் தென்னாப்பிரிக்கா வீரர் சவாலை ஏற்று 80 கிலோ எடை கொண்ட டிராக்டர் டயர் ஒன்றை கையால் தூக்கி சாதனை புரிந்தார்.

உலக இரும்பு மனிதன் போட்டி, ஸ்ட்ராங் மேன் கண்ணன்

அதனை தொடர்ந்து 90 கிலோ உடல் எடை கொண்ட கண்ணன் தனது எடையை விட 4 மடங்கு எடை கொண்ட 370 கிலோ காரை, யோக் வாக் என்ற முறைப்படி 25 மீட்டர் தூக்கி நடந்து சென்று உலக சாதனை படைத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச இரும்பு மனிதர் போட்டியில் 85 கிலோ எடை பிரிவில் பங்கேற்பதற்காக இவர் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டார். சுமார் 100 கிலோ எடை உள்ள கற்களை அடுத்தடுத்து தூக்கியும், டிராக்டர் டயர் மற்றும் வெயிட்களை தோளில் சுமந்து கொண்டும் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக இரும்பு மனிதன் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட இரும்பு மனிதன் கண்ணன், 85 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்று இரண்டாம் இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்

குமரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணனுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தங்கப்பதக்கம் வெல்வேன்

உலக இரும்பு மனிதன் போட்டி, ஸ்ட்ராங் மேன் கண்ணன்

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ட்ராங் மேன் கண்ணன், 'இந்தியாவில் முதல் முறையாக பஞ்சாப் மாநிலம் சண்டிகரில்; நடைபெற்ற உலக இரும்பு மனிதன் போட்டியில் 85 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளேன்.

உலக இரும்பு மனிதன் போட்டியில் முதலாவதாக லாங் பிரஸ், யோக் வாக், டயர் பிலிப் மற்றும் ஸ்டோன் போன்ற நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.இதில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது.

குறிப்பாக தமிழகத்திலிருந்து கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது குறித்து மிகவும் சந்தோஷமடைகிறேன். இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்ப்பேன்’ என்றார் ஸ்ட்ராங் மேன் கண்ணன்.

https://www.bbc.com/tamil/articles/cn05dqj2x1wo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.