Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் சிங்கள வலயம் அமைக்க மகிந்த அரசாங்கம் சதி: இரா. சம்பந்தன் குற்றச்சாட்டு

Featured Replies

[புதன்கிழமை, 5 செப்ரெம்பர் 2007, 19:01 ஈழம்] [கொழும்பு நிருபர்]

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரத்தை குறைத்து அங்கே சிங்கள வலயம் ஒன்றை உருவாக்க மகிந்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கு - கிழக்கு நிலைமைகள் குறித்து சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை அவர் பேசியதாவது:

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. சிறிலங்கா அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. கிழக்கில் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் அரசாங்கம், தமிழ் மக்களை அங்கே அடக்கி ஒடுக்கி வருகின்றது.

கிழக்கில் இருந்த தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதிக்கத்தை இல்லாமல் செய்யவே மகிந்த அரசாங்கம் இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்கிறது.

எனவே உடனடியாக இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கள் எவையும் கிழக்கு மாகாண நடவடிக்கைக்காக பெறப்படுவதில்லை.

கிழக்கு இராணுவ நடவடிக்கையால் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாகி விட்டனர்.

வாகரைக்கு மகிந்த சென்றார். அங்கே நிகழ்ந்த தாக்குதல்களில் மக்கள் உயிரிழக்கவில்லை என்றார்.

ஆனால் 300-க்கும் அதிகமான தமிழர்கள் அங்கே உயிரிழந்துள்ளனர். இந்த சாபக்கேடான நடவடிக்கை மூலம் அங்கே ஒரு திட்டமிட்ட நடவடிக்கை நிகழ்வது உறுதிப்படுத்தியுள்ளது.

கிழக்கை சிங்கள மயப்படுத்தவே மூதூர் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் ஆதரவு தரமாட்டோம். தமிழர்கள், ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதையே அந்த உயர்பாதுகாப்பு வலயம் கூறி நிற்கிறது.

தமிழ் மக்களைப் போன்றே முஸ்லிம் மக்களும் கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினர் கைப்பற்றிய பகுதிகளில் அரச நிர்வாகத்தை சீர்படுத்தி விட்டதாக அரசாங்கம் கூறுகின்ற போதும் அங்கே அரச நிர்வாகம் நடைபெறவில்லை.

விடுதலைப் புலிகளிடம் இருந்து மக்களை விடுவிப்பதாக கூறி குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் சம்பூரை ஆக்கிரமித்த இராணுவத்தினர் இன்னும் ஏன் அந்தப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்தவில்லை?.

சம்பூரில் மக்களின் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அங்கே வீதிகளுக்கு சிங்களப் பெயர் சூட்டுகிறார்கள். தமிழ்- முஸ்லிம் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

நூறு வருடங்கள் பழமை வாய்ந்த காணி உறுதிகளை அங்குள்ள மக்கள் வைத்திருக்கின்றனர். ஆனால் அவை தற்போது அரச சொத்தாக்கப்பட்டு வருகின்றன.

பதவியா, புல்மோட்டை, திரியாய், வெலிஓயா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையே புதிய சிங்கள வலயத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.

நன்றி : புதினம்

இதில என்ன சதி இருக்கு?

அவர்கள் சொல்லி தானே செய்க்கிறார்கள் அதுக்கு தானெ கருணா ஒட்டு குழுவும் டக்கிளஸ் ஒட்டு குழுவும்(யாழ்கள டன் இல்லை) பக்க துணையாக இருக்கிறார்கள்.

சமந்தன் ஜயா தவறாக குற்றம் சாட்டிய படியால தான் அவங்கள் சிங்கள கட்சிகாரர்கள் வெளியேறினவர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இரா. சம்பந்தன் உரையை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த சிங்களக் கட்சிகள்

[புதன்கிழமை, 5 செப்ரெம்பர் 2007, 19:53 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா நாடாளுமன்றில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை, முல்லைத்தீவை ஊடறுத்து புதிய சிங்கள மாவட்டம் அமைக்க முயற்சி

[06 - September - 2007]

* ஜனாதிபதியுடன் ஹெல உறுமய ஒப்பந்தம்; சம்பந்தன் குற்றச்சாட்டு

-டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இரு தமிழ் மாவட்டங்களான திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையில் புதியதொரு சிங்கள மாவட்டமொன்றை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரான இரா.சம்பந்தன் நேற்று புதன்கிழமை சபையில் சுட்டிக் காட்டினார்.

ஜனாதிபதியுடன் ஜாதிக ஹெல உறுமயவினர் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசாங்கம் இதனை நிறுத்தாவிடின் அது சமாதானத்துக்கே பாதகமாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை விவாதத்துக்கென முன்வைத்துப் பேசும்போதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

வடக்கு, கிழக்கில் ஆட்கடத்தல், படுகொலைகளென தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவையனைத்தும் சட்டபூர்வமான பாதுகாப்புடனேயே ஒரு சில ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்த அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தவறி வருகிறது.

இதேநேரம், புதிய பிராந்தியங்களையும் நிர்வாக அலகுகளையும் ஏற்படுத்துவதில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இதன் மூலம் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்களே மென்மேலும் பாதிக்கப்படுகின்றன. அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக பிரச்சினையை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகிறது.

அரசாங்கம் வன்முறைகளையும் மனித உரிமை மீறல்களையும் நிறுத்தி வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அத்துடன், தொடர்பில்லாத பிறிதொரு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் வலிந்த குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன், இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த அரசு உரிய வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

பௌத்த மதகுரு ஒருவர் அரசாங்கமொன்றினது செயற்பாடானது தர்மத்தையும் நீதியையும் கொண்டதாக இருக்க வேண்டுமென சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனால், அரசாங்கம் கிழக்கை முற்றாக தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ்கொண்டு வந்து விட்டதாகக் கூறும் போதும் அங்கு அரசாங்கத்தின் நீதி தர்மத்தை கொண்ட மற்றும் செயற்பாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இம் மக்களின் நலன்கள் குறித்து கவனமெடுக்க வேண்டும்.

இதேநேரம், வாகரையைக் கைப்பற்றியதும் அங்கு வந்திருந்த ஜனாதிபதி பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு படையினருக்கு நான் நன்றி தெரிவிக்கவே தான் இங்கு வந்ததாகவும் இந்த நடவடிக்கையானது எந்த உயிரிழப்புகளும் இன்றி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.