Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

Published By: T. SARANYA

23 MAR, 2023 | 12:12 PM
image

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இரு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 12 மீனவர்கள்  கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இதுவரை காங்கேசன்துறைக்கு கொண்டு வரப்படவில்லை.

கொண்டு வரப்பட்டதும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இவ்வாறு 1802 மற்றும் 65 ஆகிய இருபடகுகளே பிடிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/151233

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11 இந்திய மீனவர்கள் விடுவிப்பு – ஒருவருக்கு சிறை

law.jpg

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய மீனவர்களில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி எல்லை தாண்டி அனலைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் இரு படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஆறாவது சந்தேகநபர் ஒரு வருடத்திற்கு முன் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டிருந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவருக்கு 14 மாத கால சிறைத்தண்டனையை விதித்து ஊர்காவற்றுறை நீதவான் இன்று உத்தரவிட்டார்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட இரு படகுகளில் ஒரு படகை பறிமுதல் செய்தும் மற்றைய படகின் உரிமையாளர் இன்மையினால் அந்த படகிற்கான உரிமை கோரும் வழக்கினை அடுத்த மாதம் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தும் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவ படகுரிமை மீதான வழக்கும் அடுத்த மாதம் 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/248225

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.