Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில். விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு – வைத்தியசாலையில் அனுமதிக்க முதல் நகைகள் மாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புளியம்பொக்கணையில் விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு!

யாழில். விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு – வைத்தியசாலையில் அனுமதிக்க முதல் நகைகள் மாயம்!

யாழ்ப்பாணத்தில் விபத்துக்கு உள்ளாகிய பெண்மணியின் தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உரும்பிராய் வடக்கை சேர்ந்த கனகநாயகம் உமாதேவி (வயது 72) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மணி வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வெளியில் சென்று, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை உரும்பிராய் பகுதியில் அவருக்கு பின்னால் வேகமாக வந்த கப் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து, அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்ட வேளை, விபத்தினை ஏற்படுத்திய கப் வாகனத்தில் வந்த நபர்கள் தாம், தமது வாகனத்தில் வரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்கிறோம் என கூறி அவரை வாகனத்தில் ஏற்றி, போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

விபத்து தொடர்பில் தகவல் அறிந்து வைத்தியசாலை சென்ற பெண்மணியின் கணவர் உள்ளிட்ட உறவினர்கள் வைத்தியசாலையில் நின்ற வேளை பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வேளையே தனது மனைவி அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் காப்பு என சுமார் 06 பவுண் நகைகளை காணவில்லை என கூறியுள்ளார்.

பெண்மணியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே அவர்  எவ்விதமான நகைகளும் அணிந்திருக்க வில்லை என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்க முதலே, தங்க நகைகள் அபகரிக்கப்பட்டு விட்டதாகவும், வைத்தியசாலையில் அனுமதித்தவர்களே நகைகளை அபகரித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விபத்து சம்பவம் மற்றும் நகைகள் அபகரிப்பு தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை விபத்தினை ஏற்படுத்திய கப் ரக வாகனத்தில் வந்தவர்கள் மது போதையில் இருந்ததாகவும் மிக வேகமாக வந்தே பெண்மணியை மோதி தள்ளியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வீதியில் கண்காணிப்பு கமரா மற்றும் வைத்திய சாலை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கமராக்களின் வீடியோ பதிவுகள் ஊடாக கப் வாகனத்தினை அடையாளம் கண்டு, கப் வாகனத்தில் பயணித்தவர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னடுத்துள்ளனர்.

https://athavannews.com/2023/1331104

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிகளா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மக்களிடம் உள்ள விழிப்புணர்வு எந்த நிலையில் உள்ளது என்பதற்கு 
இந்தச் சம்பவம் நல்ல எடுத்துக் காட்டு.

1) விபத்து நடந்த இடத்தில் இருந்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை நகர விட்டதே தவறு.
2) விபத்தில் உயிருக்கு போராடியவரை... அவர்களின் வாகனத்திலேயே... ஏற்றி அனுப்பி வைத்தது தவறு.
3) அந்த விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் இலக்கத் தகட்டை கூட, குறித்து வைக்காதது தவறு.
4) விபத்து ஏற்படுத்தியவர்கள் கூட... மூதாட்டி உயிருடன் இருந்தால், சிக்கல் வரும் என்று அவரை தாமதித்து வைத்தியசாலையில் சேர்த்திருக்கலாம்.
5) நகைக்கு ஆசைப்பட்டு, அவரை வாகனத்தில் வைத்து மேலும்  துன்புறுத்தி இருக்கலாம்.
6) ஆகக்  குறைந்தது அந்த வாகனத்தில், அந்த ஊரைச் சேர்ந்தவர் ஒருவராவது ஏறி சென்றிருக்கலாம்.
7) இப்படியான விபத்துக்களில்... நோயாளர் காவு வண்டியிலேயே ஒருவரை கொண்டு செல்லும் போது ... விபத்து நடந்த பகுதியை பொறுத்து அந்த நோயாளிக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் படுக்க வைப்பார்கள்.
  8 ) இங்கு அது அனுபவம் இல்லாதவர்களால்  நிச்சயம் கடைப் பிடிக்க பட்டிருக்க மாட்டாது.
9) அவருக்கு... முதலுதவி சிகிச்சை  தெரிந்தவர்கள்... காவல் துறையோ, நோயாளர் காவு வண்டியோ வரும் வரையாவது  முதலுதவி செய்திருக்கலாம்.

இந்தத் தவறுகள்  எல்லாம் சேர்த்து...  துவிச்சக்கர வண்டியில் பயணிக்கக் கூடிய அளவு 
தேக ஆரோக்கியமாக இருந்த ஒரு 72 தமிழ் மூதாட்டியின் 
உயிரும், உடைமையும் பறிக்கப் பட்டுள்ளது பெரும் சோகம். 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.