Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழருக்கு எதிராக கலைஞர் பச்சைத் துரோகம் -பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு

Featured Replies

மனிதாபிமான அப்படையில் ஈழத்தமிழர்களுக்கு உதவிபுரிய மறுக்கும் முதல்வர் கருணாநிதி அந்தத் தமிழர்களுக்கு துரோகமிழைத்து விட்டார் எனக் குற்றஞ் சுமத்தியிருக்கின்றார் த.தே.இயக்த்தின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள்.

'ஈழத்தமிழர்களுக்கு உணவு,மருந்துகள், உள்ளளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்கும் முயற்சிக்கு முன்னெடுப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் முதல்வர் கருணாநிதி அந்தத் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்து விட்டார்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். நெடுமாறன்.

ஈழத் தமிழர்களுக்காக தமிழகமெங்கும் சேகரிக்கப்பட்ட மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களுடன் யாழ். நோக்கி படகில் புறப்படவிருக்கும நெடுமாறன் தலைமையிலான குழுவினர், தமது படகுப்பயணத்துக்கு ஆதரவு கேட்கும் கூட்டத்தைச் சனிக்கிழமை தஞ்சாவூரில் நடத்தினர். அன்றைய தினம் இரவு இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய நெடுமாறன் :-

'இலங்கையில் ஐந்து லட்சம் ஈழத்தமிர்கள் பசியாலும் பட்டினியாலும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாடறியும். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவியைச் செய்யக் கூட மத்திய,மாநில அரசுகள் முன்வரவில்லை.

இந்ததச் சூழலில்தான், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கடந்த டிசெம்பர், ஜனவரியில் ஒரு கோடி ரூபா (இந்திய ரூபா) மதிப்பிலான உணவு, மருந்துகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை இலங்கை செஞ்:சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப மத்திய அரசிடம் சட்டபூர்வமான அனுமதி கோரப்பட்டது. ஆனால், 7 மாதங்களாகியும் அனுமதி கிடைக்கவில்லை.

ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நேரடியாகவே வலியுறுத்தினார். பெர்னாண்டஸ் உள்ளிட்டோரும் வலியுறுத்தனர். ஆனாலும், எந்தப் பயனும் இல்லை.

இதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம், தமிழக மக்களிடமிருந்து பிரதமருக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் எனத் தொடர்ந்து எடுக்கப்படடட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததால், வேறு வழியில்லாமல் இந்தப் படகுப்பயணப் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது புயலால் இலங்கை பாதிக்கப்பட்டது. அப்பொது மனிதாபிமான அடிப்படையில் இரு கப்பல்கள் மூலம் உதவிப் பொருட்களை அனுப்பிவைத்தார் எம்.ஜி.ஆரின் அத்தகைய உள்ளம் முதல்வர் கருணாநிதிக்கு இல்லை.

மாறாக உதவிப் பொருட்களை அனுப்ப முட்டுக்கட்டை போடுகிறார். மனிதாபிமான அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யாததால் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்த வரலாற்றில் முதல்வர் கருணாநிதியும் தமிழகத்தைச் சேர்ந்த 13 மத்தி அமைச்சர்களும் இடம் பெறுவார்கள்.

ஏன் முட்டுக்கட்டை போடுகிறார்கள் இதில் எதற்கு அரசியல்?

செப்.12 ஆம் திகதி புதன்கிழமை கடலில் நாம் இறங்கும் போது இந்தியக் கடறபடையினர் தடுக்கலாம், சிங்களக் கடற்படையினர் எங்களைச் சுடலாம். எல்லாம் அறிந்துதான் இந்தத் தியாகப் பயணத்துக்குத் தயாராகி வருகிறோம்." என்றார் ஐயா நெடுமாறன்.

நன்றி : சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.