Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மனநல பிரச்சினைகளை சந்திக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய டிஜிட்டல் உலகில் ஆண்ட்ராய்ட் செல்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. அதே நேரம் நாளும், பொழுதும் செல்போன்களில் மூழ்கி விடுவதால் பேராபத்துகளும் எதிர்கால சந்ததியினருக்கு சூழ்ந்துள்ளன.

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் இலாப நோக்கம் இல்லாத சாப்பியன் எனும் தனியார் ஆய்வகம் ஆண்ட்ராய்டு செல்போன்கள் அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினரிடையே ஒரு ஆய்வினை மேற்கொண்டது. உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 4000 பேரும் இடம் பெற்றிருந்தனர்.

boy-3360415_960_720.jpg

 

இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர்கள் கூறும் போது, தற்போது குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டை கொடுப்பது நாகரீகமாகவும், கெளரவமாகவும் ஆகிவிட்டது. இதன் மூலம் தமது குழந்தைகள் டிஜிட்டல் அறிவை பெறுவார்கள் என பெற்றோர்கள் நம்புகின்றனர்.

ஆனால் அவர்களின் எதிர்காலத்தை நீங்கள் சூனியம் ஆக்கிக் கொள்கிறீர்கள் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தைக்கு எவ்வளவு முன்னதாக ஸ்மார்ட்போன் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இளம் வயதிலேயே மனநல பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சிறுவயதிலேயே ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்த இளைஞர்கள் அதிக தற்கொலை எண்ணங்களுடனும், யதார்த்தத்தில் இருந்து விலகி இருப்பது போன்ற உணர்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளிலிருந்து அவர்கள் ஒதுங்கி இருக்க நினைக்கிறார்கள். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடும் எண்ணங்கள் அவர்களுக்கு குறைந்திருந்தது. இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

6 வயது முதல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் இளம்பெண்களில் 74 சதவீதம் பேருக்கு மன அழுத்தம் இருப்பதும், கடுமையான மனநல சவால்களை அவர்கள் எதிர்கொண்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/253854

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள் இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதை தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள்

Published By: VISHNU

26 MAY, 2023 | 09:00 PM
image
Placehoder--_22.jpg

 

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் கையடக்க தொலைபேசி, டெப் உள்ளிட்ட இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

குறித்த வயது பிரிவுடைய குழந்தைகள் இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதன் பாதிப்பு பத்து அல்லது 12 வயதில் தாக்கம் செலுத்தும் என்று டொக்டர் தர்ஷனி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களும் சிறுவர்களின் உளவியல் சுகாதாரமும் எனும் தொனிப்பொருளில் சி.பி.எம். (CBM)  நிறுவனம் நடத்திய விழிப்புணர்பு நிகழ்வின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.  சிறுவர்கள் வீடியோ கேம் விளையாடுவதன் தாக்கம் அவர்களை பெரிதும் பாதிக்கக் கூடும்.

இதேவேளை, சமூக ஊடகங்களில் அதிகளவான நேரத்தை செலவிடும் பிள்ளைகள் தற்கொலை முயற்சிக்கு செல்லும் அபாயம் நிலவுகிறது. இதுவிடயத்தில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் டொக்டர் தர்ஷனி ஹெட்டியாராச்சி கேட்டுக்கொண்டார்.

https://www.virakesari.lk/article/156271

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கணணியும் கைத்தொலைபேசியும் சுகாதார வாழ்க்கைக்கும் தனிமனித வாழ்க்கைக்கும்   கேடு விளைவிப்பது.

கைத்தொலைபேசியையும் கணனியையும் வியாபார நோக்கம் மற்றும் அவசர தகவல் பரிமாற்றத்துடன் நிறுத்தி விடவேண்டும்.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் ஜாக்கிரதை – மனநல மருத்துவரின் எச்சரிக்கை

online-class-300x174.jpg


கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஒன்லைன் கற்றல்-கற்பித்தல் செயல்முறை வெற்றிகரமான முறையாக இல்லை என்று நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்திருந்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த யுனெஸ்கோ அமைப்பின் விசேட அறிக்கையில் பாடசாலை மாணவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி தடை செய்யப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதால் அவர்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம் என்ற எண்ணமே இதற்குக் காரணம். சமீபத்திய நாட்களில், கொவிட்-19 தொற்றுநோயால், பாடசாலைகளில் கைத்தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கண்டோம், அதே போல் “பாடசாலை மாணவர்களிடையே வீட்டில் கைத்தொலைபேசிகளின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

இத்துடன் இந்த பாடசாலை மாணவர்கள் கற்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் எதிர்மறையான பல விஷயங்களும் நடந்து வருகின்றன. ஒரு விஷயம் என்னவென்றால், ஆசிரியரிடம் நேரடியாகக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, இந்த கைத்தொலைபேசி மூலமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ கற்றுக்கொள்வது, ஆசிரியரிடம் நேரடியாகக் கற்றுக்கொள்வது போல் சிறந்த கற்றல் அல்ல என்பதை யுனெஸ்கோ அமைப்பு சுட்டிக்காட்டியது.

இலத்திரனியல் சாதனங்களின் பாவனையினால் பாடசாலை மாணவர்கள் நடைமுறைக் கல்வியில் இருந்து ஒதுக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆசிரியர் ஒருவர் ஆளாளுக்கு கேள்விகள் கேட்டு உண்மைகளை நன்கு புரிந்து கொண்டு கற்பிப்பது போல் தொலைபேசியில் கற்றல் வெற்றியடையாது. அதேபோல், குழந்தைகள் தங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி கேள்விகளைக் கேட்கிறார்கள், ஆசிரியர்களுடன் தொடர்புகொண்டு நடைமுறை விஷயங்களைச் செய்கிறார்கள், மேலும் யுனெஸ்கோ இந்த கைத்தொலைபேசி மூலமாகவோ அல்லது இந்த மின்னணு சாதனத்தின் மூலமாகவோ கற்றலை ஒருபோதும் செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளது..” என அவர் தெரிவித்திருந்தார்.

https://thinakkural.lk/article/266192

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளிடம் கைப்பேசிகளை கொடுக்க வேண்டாம்!

கையடக்க தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிக பயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் வெகுவாக இணையக் காணொளியில் விளையாட்டுகளுக்கு அடிமையாகின்றனர்.

இலங்கையில் அதிக வெப்பத்தால் மனநோய் அபாயம்!

இணையக் காணொளி விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் தீவிரமாக அவதானம் செலுத்துதால் மனநல நோய்க்கு உள்ளாகின்றனர். இதனால் பிள்ளைகள் கல்வியில் தோல்வியடைந்து பெற்றோரை எதிரிகளாக நோக்குகின்றனர்.

இதனால் குழந்தைகளின் எதிர்காலம் முற்றாக அழிந்துவிடும். எனவே குழந்தைகளுக்கு இயன்றவரை கையடக்க தொலைபேசியை வழங்குவதை பெற்றோர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் ரூமி ரூபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://thinakkural.lk/article/270345

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.