Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டமும் போராட்டமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின் இனவழிப்பின்  போது காணாமல் போனவர்களை மீள் கொணர்தல் என்று உறவுகள் நடாத்தும் போராட்டம் தீர்வுகள் கிடைக்காமல் நீண்டு கொண்டே போகிறது.  சிறீலங்கா அரசாங்கம் நீதியைப் புறம் தள்ளி தனது அதிகாரத்தை முன்னெடுத்துத் தொடர்ந்தும் போக்குக் காட்டிக் கொண்டே இருக்கிறது. பிள்ளைகளுக்காகப் போராட்டம் நடத்தும் பெற்றோர்களில் பலர்  இறந்தும் விட்டார்கள். சமீபத்தில் நான் வாசித்த யேர்மன் நாட்டுச் செய்தி  ஒரு தந்தை நடத்திய போராடத்தைப் பற்றியதாக இருந்தது. யேர்மனியச் சட்டம் இப்படி இருக்கிறதா என என்னை ஆச்சரியப்பட வைத்தது.
 

IMG-4088.jpg

 

இறுதியாக ஒரு நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கையுடன் நாற்பது வருடங்களாக மோல்மன் காத்துக் கொண்டிருந்தார். 79 வயதான மோல்மனின் மகள் பிரடெரிக் அவளது 17வது வயதில் கொலை செய்யப் பட்டிருந்தாள். அவளைக் கொன்றவனை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ள வேண்டும் என்பதே அவரின் ஒரே எண்ணமாக இருந்தது. அதற்காகத்தான் நீரழிவு நோய் தன்னைத் தாக்கியிருந்த போதிலும்  மனம் தளராமல் நீதிமன்றில் நியாயம் கேட்டுக் கொண்டிருந்தார்.

பள்ளி மாணவியான பிரடெரிக் தனது  இசைப் பயிற்சி முடிந்ததும்  ஒன்பது கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு வருவதற்காக, சிலவேளைகளில் வீதியில் போகும் கார்களில் உதவி கேட்டு அதில் பயணிப்பாள்.

1981ம் ஆண்டு நவம்பர் 4ந் திகதியும் அப்படித்தான்  அவள் பயணித்தாள்.  ஆனால் அன்று அவள் வீட்டுக்கு வந்து சேரவில்லை. அவளை காரில்  ஏற்றியவன்,  அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கத்தியால் குத்திக் கொன்று விட்டு உடலை காட்டுப் பகுதியில் போட்டு விட்டுப் போய்விட்டான்.

கொலையாளியைப் பிடிப்பதற்கு பொலிஸாருக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.  பூக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் குர்தீஸ் இனத்தைச் சேர்ந்த 22 வயதான இஸ்மெற்தான் அந்தக் கொலையாளி என்று பொலிஸார் தங்கள் விசாரணையில் தெரிந்து கொண்டார்கள். அதற்குப் போதுமான சாட்சியங்கள், காட்டுப் பகுதியில் ஈர மண்ணில் அச்சாகப் பதிந்திருந்த அவனின் கார் ரயரின் தடையம் என்பன அவனை அடையாளம் காட்டின.

1982இல் பிரடெரிக் கொலையை விசாரித்த   லூனெபூர்க் நகர நீதி மன்றம் இஸ்மெற்றுக்கு ஆயுள் தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்தது.  

“இஸ்மெற் தான் இந்தக் கொலையைச் செய்தான் என்று   லூனெபூர்க் நகர நீதி மன்றம் தவறாக முடிவெடுத்துள்ளது”  என இஸ்மெற்றின் வழக்கறிஞர் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

மோல்மன் எதிர்பார்த்த தீர்ப்புக்கு மாறான தீர்ப்பை உச்ச நீதி மன்றம் இஸ்மெற்றுக்கு வழங்கியது. 13.05.1983 மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இப்படி இருந்தது,  “சந்தர்ப்ப சூழ் நிலைகள் மற்றும்  சாட்சியங்கள் இஸ்மெற்றுக்கு எதிராக பொலிசாரால் தரப்பட்ட போதும் அந்தக் கொலையை இஸ்மெற்தான் செய்தார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள்  மன்றில் தரப்படவில்லை. அதனால்  இஸ்மெற் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப் படுகிறார்”

வழக்கில் இருந்து விடுவிக்கப் பட்ட இஸ்மெற் திருமணம் செய்து வீடு வாங்கி தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி சுதந்திர மனிதனாக வாழ ஆரம்பித்தான். ஆனால் மோல்மனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. தனது மகளை இவன்தான் கொன்றான் எனத் தெரிந்திருந்தும் அவனுக்கான தண்டனை தரப்படவில்லை என்று உள்ளுக்குள் வருந்திக் கொண்டேயிருந்தார். ஒருபக்கம் மகளை இழந்த சோகம் மறுபக்கம் தண்டனையில் இருந்து தப்பிய கொலையாளி.  மன உளைச்சலில் சோர்ந்து போயிருந்த மோல்மன் விரைவிலேயே நோயாளியாகிப் போயிருந்தார்.

கண்டு பிடிக்கப்படாத கொலைகளைப் பற்றி  2012இல் ஆராய்ந்து கொண்டிருந்த  அதிகாரி ஒருவருக்கு  பிரடெரிக்கின் கொலை சம்பந்தப் பட்ட கோப்பு கிடைக்க அவருக்கு அதை மேலும் ஆராய  ஆர்வம் வந்தது. பிரடெரிக் கொலையின் போது சேகரிக்கப் பட்ட பொருட்களை அவர் பார்வையிட்டு  கொலை செய்யப்பட்ட போது பிரடெரிக் அணிந்திருந்த அவளது உள்ளாடையை மட்டும் டீஎன்ஏ பரிசோதணைக்கு அனுப்பி வைத்தார். பிரடெரிக்கின் உள்ளாடையை பரிசோதித்த வல்லுனர்கள் அந்த உடையில் படிந்திருந்த விந்தணு இஸ்மெற்றினுடையதுதான் என  உறுதி செய்தனர். இஸ்மெற்தான் அவளை பாலியல் செய்தவன் என்பதற்கு வலுவான தடயம் கிடைத்து விட்டது. வழக்கை மீண்டும்  நீதி மன்றத்துக்கு கொண்டு போனார்கள். 

“உயர் நீதி மன்றில் விசாரணைக்கு எடுக்கப் பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று சட்ட இலக்கம் 362 குறிப்பிடுகிறது” என  இஸ்மெற்றின் சட்டத்தரணி தனது வாதத்தில் வைத்தார்.  அவரது வாதத்தில் உள்ள உண்மையை ஏற்றுக் கொண்டு உயர் நீதி மன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை என முடிவுக்கு வந்த போதும் மோல்மன் தனது முயற்சியை மட்டும் கைவிடவில்லை. இஸ்மெற்றால்  தான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அதற்கான வைத்தியச் செலவு 7000 யூரோக்களை இஸ்மெற்தனக்குத்  தரவேண்டும் என்றும் 2015 இல் மாகாணத்துக்கான  நீதிமன்றில் வழக்கொன்றைப் பதிவு செய்தார். அதே நேரம் இந்தவழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விடலாம் என்ற ஐயமும் அவரிடம் இருந்தது. அதனால், 362ம் இலக்க சட்டத்தில் மாறுதல்செய்யுங்கள் என்று இணையத்தினூடாக  ஒரு கையெழுத்து வேட்டையை ஆரம்பித்தார். அவரது இணையப் போராட்டம்நீதிமன்றத்தைச்  சிறிது அசைத்தது என்றுதான் சொல்லலாம். இஸ்மெற் 2022இல் மீண்டும் கைது செய்யப்பட்டு அவன் மீது விசாரணைநடத்த மன்று ஒப்புதல் அளித்தது. ஆனாலும் அவனது சட்டத்தரணி, 362 இலக்கச்  சட்டம் சொல்வதைத்தான் நீதிமன்றம் கடைப்பிடிக்கவேண்டும் என்று திரும்பவும்  வலியுறுத்தினார். இஸ்மெற் மீண்டும் விடுதலையானான்

இப்பொழுது 362 இலக்க சட்டத்தில் மாறுதல் வேண்டுமா? என்பது பரிசீலனையில் இருக்கிறது. மத்திய அரசியலமைப்பு நீதிமன்றத்தின்362வது இலக்க சட்டத்தின் மாற்றத்திற்கான தீர்ப்பு வரும் வரை மோல்மனால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது.

நாற்பது வருடப் போராட்டம், மகளின் இழப்பு, மன உளைச்சல், கொலையாளியான இஸ்மெற்றை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்தள்ள முடியாத சட்டச் சிக்கல் என்று சிக்கித் தவித்த மோல்மன் கடந்த வருட கோடையில் நீண்டகால நீரிழிவுத் தாக்குதலால் இறந்துபோனார். அவர் தொடர்ந்த வழக்கு மட்டும் உயிர் வாழ்கிறது.

கவி அருணாசலம்

Edited by Kavi arunasalam
எழுத்துப் பிழை திருத்தம்

  • Kavi arunasalam changed the title to சட்டமும் போராட்டமும்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2023 at 05:09, Kavi arunasalam said:

வழக்கில் இருந்து விடுவிக்கப் பட்ட இஸ்மெற் திருமணம் செய்து வீடு வாங்கி தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி சுதந்திர மனிதனாக வாழ ஆரம்பித்தான்

இப்பொழுதெல்லாம் மனசாட்சி என்ற சொல்லுக்கு தங்களுக்கேற்ற அர்த்தங்களை கூறிக்கொண்டு வாழ்கிறார்கள்.

அவர் இறந்த போனாலும் உண்மையிலேயே 362வது இலக்க சட்டத்தில் மாறுதல் வருமானால் மோல்மனால் உண்மையான குற்றவாளிகள் தண்டனை அடைய ஒரு வழிவரலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.