Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆக்கிரமிப்பும் அரசியலும் சமயமும்-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிப்பும் அரசியலும் சமயமும்-பா.உதயன் 

அன்பையும் அறத்தையும் 
அழகிய காதலையும் 
தர்மத்தையும் தார்மீகத்தையும் 
சமாதானத்தையும் சமத்துவத்தையும் 
போதிக்கும் மதங்கள் 
மதம் கொண்ட மனிதர்களினால் 
வன்முறையும் வெறுப்பும் வேறுபாடும்
மனிதப் படுகொலையும்
அரசியலும் ஆக்கிரமிப்புமாக 
எல்லாமே தலை கீழாக கிடக்கிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனுக்கு மட்டும் தான் கட்டக் கூடாது வட கிழக்கில் புத்த விகாரையா. காணவில்லையே  மக்களை இவர் பின்னால். ஐந்து பேரைக் கூட அவர் பின்னால் காணோமே இருந்த போதும் இத்தனை அடக்கு முறைக்கு பின்னும் பிழை சரிகளுக்கு பின்னால் இவன் மட்டும் தனியப் போராடுகிறானே இதுற்கும் ஒரு துணிவு வேண்டும். எந்தப் போராட்டமாக இருந்தாலும் தனி மனிதர்களினாலோ அல்லது மக்களினாலோ நடாத்தப் படுகின்ற போராடுங்கள் வரவேற்கப்பட வேண்டும்.

அரசியல் என்பதே தனி நலன்களோடும் சுய நலன்களோடும் சேர்ந்தது தானே. சுதந்திரப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணிக்கும் ஒரு சுதந்திர வீரனுக்கும் அரசியல் வாதிக்கும் பல வேறுபாடுகளைக் கொண்ட முகங்களைக் காணலாம். ஒரு அரசியல்வாதியின் ஒரு முகம் பதவியும் பெருமையும் புகழும் அதிகாரமும் கொண்டதாகவே இருக்கும். எது எப்படி இருப்பினும் ஆக்கிரமிப்பும் அதிகாரமும் பலமும் கொண்ட படைகளுக்கு மத்தியில் துணிந்து போராடுவது என்பது பெரும் சவால் மிக்கதே.

தையிட்டி விகாரை விவாகரத்தில் தேசியம் என்று கூவித் திரியும் எங்கள் கட்சிகள் எங்கே. எங்கே இந்த மக்களைக் காணோம் கட்டும் போது விகாரை காணாமல் ஏன் போனார்கள் மக்களும் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற பாரளுமன்ற உறுப்பினர்களும். அண்ணணின் தம்பிமார் என்று ஒரு காலம்  நிலத்திலும் புலத்திலும் அவர்கள் பின் திரித்தவர்கள் எல்லாம் ஆளுக்கு ஆள் பிரிவுகளோடு ஒற்றுமை தொலைந்து ஒருவருக்கு ஒருவர் பகையாளி ஆகி விட்டார்கள். 

நிலத்தில் இன்று ஆக்கிரமிப்புக்குள் உள்ள மக்களாக கதைக்கவோ பேசவோ முடியாத மக்களாய் இருக்கிறார்கள். இன்று வட கிழக்கில் சிங்கள கலாச்சாரமும் மதமும் மொழியும் பரவினால் இனி என்ன அதே மதம் இனம் கலாச்சாரம் கொண்ட அந்த மக்கள் வந்து அங்கே குடியிருக்க வேண்டியது தானே. இனி என்ன மிச்சம் எங்கள் இருக்கும் நிலமும் இனிப் பறி போகும் நிலை தான். குந்தி இருக்கக் கூட இனி நிலம் இருக்குமோ. புலம் பெயர்ந்து வாழும் முதலாம் தலைமுறையினர் பலர் தங்கள் இறுதிக் காலங்களில் இலங்கை திரும்பி சென்று வாழும் கனவுகளோடு இருக்கிறார்கள். இருந்தபோதும் அங்கு ஒரு நிரந்தர சமாதானம் ஏற்படாமல் ஒரு அச்சம் நிறைந்த சூழலில் அவர்களுக்கு கூட திரும்பி செல்வதில் ஒரு அச்சம் இருக்கின்றது.

இன்னும் ஒரு தேசிய இனத்தின் மொழியையும் கலாச்சாரத்தையும் அது பின் பற்றும் நம்பிக்கைகளையும் அழித்து விட்டால் அந்த இனம் தொடர்ந்து வாழும் சுவாதத்தை இழந்து விடும். இதன் ஒரு நிகழ்ச்சி நிரலே ஆக்கிரமிப்போடு கூடிய சிங்களப் போரினவாதத்தின் முகமாகும். இருந்த போதும் இவர்களது இனவாத முகம் ஒரு நாள் தோற்கடிக்கப்படலாம். ஈழத் தமிழர் பட்ட துன்பங்களுக்கு ஒரு நாள் விடிவு கிட்டலாம். இதற்கான ஒரு வெற்றியாகவே கனடியப் பிரதமரின் முள்ளிவாய்க்கால் நினைவு உரை இனப்படுகொலை என்பதை சொல்லி இருப்பது ஒரு மாற்றதிற்கான பாதையாகும். இதற்காக உழைத்த அனைத்து தமிழ் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு துணை நின்ற அனைத்து நிறுவனங்களும்  உழைத்து இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது. 

பா.உதயன் ✍️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.