Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாயில்லாமல் நானில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயில்லாமல் நானில்லை

1969இல் வெளிவந்த திரைப்படம் அடிமைப்பெண். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்தாயில்லாமல் நானில்லை தானா எவரும் பிறந்ததில்லை”. சமீபத்தில் நான் வாசித்த யேர்மனியச் செய்தி ஒன்று இந்தப் பாடலை எனக்கு நினைவூட்டியது

“..மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள் 

மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்

மங்கள வாழ்வுக்குத் துணையிருப்பாள் 

தாயில்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொருதாய் இருக்கின்றாள்

என்றும் என்னைக் காக்கின்றாள்..”

த்தாலியில் வெரோனா நாட்டில் இறந்து போன தனது தாயின் உடலோடு ஆறு வருடங்களுக்கு மேலாக ஒரே வீட்டில்  அவரது மகன் வசித்து வந்திருக்கிறார். அதுவும் தனது தாயின் உடல் இருந்த கட்டிலிலேயே அவரும் நித்திரை கொண்டிருக்கிறார்.

86 வயதான யேர்மனியைச் சேர்ந்த ஹெல்கா மரியா தனது மகனுடன் வெரோனா நகரத்தில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்திருக்கிறார். ஆறு வருடங்களுக்கு முன்னர் ஹெல்கா மரியா இறந்து விட, அவரது உடலைசிப்பால்மூடக்கூடிய ஒரு பிளாஸ்ரிக் பைக்குள் போட்டு மூடி கட்டிலில் வைத்துவிட்டு எதுவிதக் கவலையும் இல்லாமல் இறந்த தாயின் உடலுக்கு அருகிலேயே உறங்கவும் செய்திருக்கிறார். அயலவர்கள் ஹெல்கா மரியாவைப் பற்றி விசாரிக்கும் போது, தனது தாய் யேர்மனிக்குத் திரும்பிப் போய் விட்டதாக அப்பட்டமான பொய்யையும் சொல்லி இருக்கிறார்இத்தனைக்கும் அவருக்கு மனநோய் என்று எதுவுமில்லை. மாறாகப் பண நோய் இருந்திருக்கிறது. தாயின் ஓய்வூதியப் பணத்தை தனதாக்கிக் கொள்வதே அவரின் நோக்கமாக இருந்திருக்கிறது. ஆறு வருடங்களுக்கு மேலாக தாயின் ஓய்வூதியம் மூலமாக அவர் பெற்ற தொகை 180,000யூரோக்களுக்கு மேலே என்று கணக்கிடப் பட்டிருக்கிறது. அவரின் அந்த நாடகம் மே மாதம் 25ந் திகதியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.

ஹெல்கா மரியா தனது வயது மூப்பின் காரணமாக மருந்துகள் உட்கொண்டு வந்திருக்கின்றார். அவரின் மருத்துவச் செலவுகளை மருத்துவக் காப்புரிமையே கவனித்துக் கொண்டிருந்தது. ஆறு வருடங்களுக்கு மேலாக அதுவும் கோரோனா காலத்திலும் கூட எந்தவித மருத்துவத் தேவைகளுக்கும், அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவக் காப்புறுதி அட்டையை அவர்  பயன்படுத்தவில்லை என்பதை தற்செயலாகக் கவனித்த மருத்துவக் காப்புறுதி நிறுவனம் சந்தேகம் கொண்டு அது பற்றி யேர்மனிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவித்திருக்கிறது

யேர்மனியில் இருந்து தகவல் கிடைத்து இத்தாலி பொலிஸார் ஹெல்கா மரியா வீட்டிற்குப் போய் பார்த்த போது பிளாஸ்ரிக் பைக்குள் மம்மி போன்று இருந்த அவரின் உடல் கிடைத்திருக்கிறது. பொலிஸார் வீட்டுக்கு வந்த போது அவர்கள் கண்களில் படாமல் தப்பித்த ஹெல்கா மரியாவின் அறுபது வயதான மகன் பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் மேல் விசாரணைகள் இப்பொழுது நடக்கிறது.

 காக்கியான் 03.06.2023

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பணத்துக்காக… இறந்தவருடன் ஒரு வீட்டில் அல்ல, ஒரே கட்டிலில் 
 ஆறு வருடங்களாக உறங்கியவர் எப்படிப் பட்ட மனிதனாக சமூகத்தில் நடமாடியிருப்பார்
என்பதை நினைக்க ஆச்சரியமாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.