Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொலைக் கலாசாரம் தொடர்ந்தால் இலங்கை காட்டு மிராண்டிகள் நாடாகும் போருக்கெதிரான தேசிய முன்னணி எச்சரிக்கை

Featured Replies

இலங்கையில் கொலை மற்றும் வன்முறைக் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. இதனை நாம் தொடரவிடுவேமானால், எதிர்கால இலங்கை காட்டு மிராண்டித்தனம் நிறைந்த நாடாக மாறிவிடும். எனவே இதனைத் தடுத்து கொலைக்கலாசாரம் இல்லாத நாடாக இலங்கையை மாற்றுவது எமது கடப்பாடாகும் என்று போருக்கெதிரான தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி குமார் ரூபசிங்க தெரிவித்தார்.

கொலைகள் இல்லாத நாட்டை கட்டியெழுப்பும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி நாடுதளுவிய ரீதியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை நடத்தவுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற போருக்கெதிரான தேசிய முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே கலாநிதி குமார் ரூபசிங்க இதனைத்தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

எதிர்வரும் 21 ஆம் திகதி சர்வதேச சமாதானத்தினமாகும் அன்றைய தினத்தில் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் காலை 10.00 மணிமுதல் நண்பகல் 01.00 மணிவரை கொலைகள் அல்லாத நாடொன்றை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு சத்தியாக்கிரகத்தை நடத்தவுள்ளோம். இது ஒருநாள் நிகழ்ச்சித்திட்டமல்ல நீண்டகால வேலைத்திட்டமாகும். கொழும்பில் இடம்பெறும் நிகழ்ச்சிக்கு சமாந்தரமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு தவிர்ந்த, நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் எமது கொள்கையை முன்வைத்து 40 ஆயிரம் பேர் கொலைகள் அல்லாத நாட்டிற்கெதிராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள்.

எமது நாட்டின் 1948 முதல் தோன்றிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வன்முறையே கையிலெடுக்கப்படுகின்றது. அன்று 1958 மொழிப் பிரச்சினைக்கான வடபகுதி தமிழர்கள் அமைதிப்போராட்டத்தை நடத்தியபோது அவர்களுக்கு செவிசாய்க்கப்படவில்லை. மாறாக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

கடந்த இரண்டரை வருடங்களாக நாட்டில் கப்பம் பெறுதல், காணாமல் போதல், கடத்தல்கள், கொலைகள் அதிகரித்துள்ளன. 1971 இல் 50,000 இளைஞர்கள் கொலைசெய்யப்பட்டவர்கள், 1988 89 களில் 30,000 பேர் காணாமல் போயினர்.

இன்று வட கிழக்கிலும் கொழும்பிலும் வெள்ளை வான்களில் ஆட்கடத்தல்கள் இடம்பெறுகின்றன. இதுதொடர்பாக ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை பொலிஸாரால் எவரும் கைது செய்யப்படவில்லை, விசாரணை செய்யப்படவுமில்லை.

நாட்டில் கொலைகள் மலிவாக இடம்பெறுகின்றன. இதற்கு யுத்தம் மட்டும் காரணமல்ல பல்வேறுபட்ட சமூக பிரச்சினைகளும் காரணமாகும். தற்கொலைகள், தனிப்பட்ட கொலைகள் தினம் தினம் அதிகரித்துச் செல்கின்றன. குடும்ப வன்முறைகளும் மேலோங்கிச் செல்கின்றன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டியது எமது கடப்படாகும்.

எம்முடன் இணைந்து செயல்பட்டவர்கள் இன்று அரசுடன் இணைந்து அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர். சமாதானத்தை ஏற்படுத்தவும், யுத்தத்தை நிறுத்தும் நோக்கத்திற்காகவே அரசுடன் இணைந்துள்ளதாக கூறுகின்றனர்.

இலங்கையில் இன்று தேசப்பற்றாளர்கள், தேசத்துரோகிகளென இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு நோக்கப்படுகிறார்கள். தேசத்துரோகிகள் என்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஆனால், எமது முன்னணியில் அதற்கு இடமில்லை.

நாட்டில் கொலை, வன்முறைக் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்தச் செல்கிறது. இதற்கு இடமளித்துவிட்டு அமைதியாக இருப்போமானல் எதிர்கால இலங்கை காட்டுமிராண்டிகள் நிறைந்த நாடாக மாறிவிடும். அதனை தடுத்து நிறுத்துவதே எமது செயற்பாடுகளின் நோக்கமாகும்.

virakesari.lk

Edited by தமிழினீ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.