Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர்கள் அநாதைகள் அல்லர் தமிழகம் நிச்சயம் நேசகரம் நீட்டும்.- வைகோ

Featured Replies

ஈழத்தமிழருக்கு உணவு மற்றும மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக அனுப்ப அனுமதி மறுப்பதன் மூலம் இந்திய மத்திய அரசு மன்னிக்க முடியாத துரோகமிழைத்து வருகின்றன".இவ்வாறு மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயளாலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் நடைபெறும் உண்ணாநிலைப் போராட்டட இடத்திலிருந்து ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று வழங்கி நேர் காணலிலேயே இதனைத் தெரிவித்தார்.

இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர் சொல்லொணாத் துயரங்களுக்குள்ளகியுள்ளனர். உணவின்றி - நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளின்றி வாடி வதங்கி மடியும் துயரம் மிகுந்திருக்கின்ற வேளையில், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைப்பத்ற்கு அண்ணன் பழ.நெடுமாறன் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாக்கப்பட்டுவிட்டன.

மத்திய அரசு மனிதாபிமானத்தை குழிதோண்டிப் புதைத்து விட்டு தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவாத அரசுக்குத் துணைபோகும் துரோகத்தைச் செய்து வருகின்றது. அந்தத் துரோகத்ததுக்கு தமிழகத்தை ஆளுகின்ற தி.மு.க அரசும் உடந்தையாக இருக்கிறது.

இந்தப் படகுப்பயணத்தைக் கொச்சைப்டுத்தும் வகையில்; பொலிஸாரை விட்டு அறிக்கைகள், செய்திகள் தந்ததும் அதன் பின்னர் மீனவர்கள் படகுகளை வழங்கக் கூடாது என்று மிரட்டி அச்சுறுத்தி கொடுமைப்படுத்தியதும் உள்ளடங்குகின்றன. இதனை எதிர்த்தே கடந்த புதன் முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதம் நடைபெறுகின்றது. இதனை அண்ணன் பழ.நெடுமாறன் நடத்தி வருகிறார். அவரது உடல் நலம் பாதிக்கக் கூடாது என்ற சூழலில் அவர் சென்னைத் தலைநகரில் எங்களது இயக்க ஆதரவாளரான சௌந்தரராஜனின் வளாகத்தில் உண்ணாநிலை மேற் கொள்ள இருந்தத போது, அதனைத் தடுக்க கொலிஸார் முயன்றனர். இச் செய்தியை சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களைத் தாக்கிதும் ஓர் அராஜக நடவடிக்கையாகும்.

ஈழத் தமிழர்கள் அநாதைகள் அல்லர். தாய்த் தமிழகமும் கரம் நீட்டும். குரல் எழுப்பும் என்பதை உணர்த்தவும் இந்தப் பிரச்சினையில் மனிதாபிமானற்றறுச் செயற்பட்டு வரும் மத்திய மாநில அரசுகளை மக்கள் மன்றதிலே அடையாளப்படுத்தவும் அவர் மேற்கொண்டிருக்கும் உண்ணாநிலை அறப்போரும் அந்த வகையிலே வெற்றி பெற்றிருக்கின்றன.எனவே, உண்ணாநிலை நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்பினலும் கூட இந்தப் பிரச்சினையில் மத்திய அரசும் தமிழக அரசும் ஈழத்தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகமிழைத்து வருவதாக குற்றம் சாட்டுகிறேன்.

ஈழத்தமிழர்களை போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் செய்தித் தாள்களிலே வருகின்ற செய்திகள் பற்றி நீங்கள் நம்பிக்கை கொள்ளத தேவையில்லை. அங்கு நடைபெறும் இன விடுதலைப் போரில் த.வி.புலிகளுக்கு வெற்றி கிடைப்பதற்கு தாய்த்தமிழதத்தில் உள்ள தன்மானத் தமிழர்கள் உதவியாக இருப்பார்கள், உறுதுணையாக இருந்து குரல் எழுப்புவார்கள். அவர்களின் துயரங்களிலே பங்கெடுத்து அவர்களின் விடியலுக்காக உதவ விரும்புகின்றோம். இந்த விடியல் இந்த ஆண்டு முடிவதற்குள் உதயமாகும் என நம்புகிறோம்' என்றார் அவர்.

நன்றி சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.