Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் பாரிஸிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தை தாக்கியதை இருட்டடிப்பு செய்யும் பிரான்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பாரிஸிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தை தாக்கியதை இருட்டடிப்பு செய்யும் பிரான்ஸ்

[14 - September - 2007] [Font Size - A - A - A]

கடந்த 2 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்துக்குள் புலிகள் இயக்க பயங்கரவாதிகள் அத்துமீறிப் புகுந்து அங்கிருந்த ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை முறித்தெடுத்து கிழித்தெறிந்துவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்து அடித்து நொருக்கி சேதப்படுத்தினர். இது மிக மோசமானதும் பாரதூரமானதுமான சர்வதேச சட்டவிரோத செயலாகும். பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கை சட்டதிட்டங்கள் அனைத்துக்கும் முற்றிலும் எதிரானவையாகும். ஸ்ரீலங்காவின் இறைமைக்கும் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான அடாவடித்தனமான பயங்கரவாதச் செயற்பாடாகும்.

ஆயினும், பயங்கரவாதத்துக்கு பணியப்போவதில்லை எனச் சூளுரைக்கும் பிரான்ஸ நாட்டின் ஜனாதிபதி நிகலஸ் சர்கோஷிக்குகு அவரது நாட்டின் தலைநகரிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தை இவ்வாறு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க முடியவில்லை. புலிகள் இயக்கத்தினர் தூதரகத்துக்குள் புகுந்து ஷ்ரீலங்காவின் தேசியக் கொடியை கிழித்தெறிந்து அலுவலகத்தை அடித்து நொருக்கி நெடுநேரம் தாக்குதல் நடத்தியபோதும் பிரான்ஸ் பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்காமல் தூங்கிவிட்டனர்.

இவ்வாறே கொழும்பிலிருக்கும் பிரான்ஸ் நாட்டுத் தூதரகத்தின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருக்குமாயின் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், எத்தனை தீவிரமாக எதிர்ப்புக் கிளம்பியிருக்கும், எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டிருக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கூட ஸ்ரீலங்கா அரசின் மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருப்பார்.

இதிலிருந்து தெரிவது யாதெனில் பிரான்ஸிலிருக்கும் தமிழ்ப் பயங்கரவாதிகளும் நாசிசவாதிகளும் அவர்களுக்கு வேண்டிய முறையில் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக எப்படி மோசமாக நடந்துகொண்டாலும் பிரான்ஸ் அரசும் அவ்வாறான அவர்களின் தாக்குதல்களை இருட்டடிப்பு செய்துவிடும் என்பதே. பிரான்ஸ் அரசு இப்படியாக எவ்வாறு தமிழ் நாசிசவாதிகளுக்குச் சார்பான முறையில் செயற்பட்டாலும் ஸ்ரீலங்காவில் தமிழ்ப் பயங்கரவாதிகள் நாசிசவாதிகளின் ஈழம் கனவு சிதைந்து வருவது உண்மை. இந்த நிலையில் ஐரோப்பாவிலுள்ள தமிழ்ப் பயங்கரவாதிகள் அந்தப் பிராந்திய நாடுகளில் மேலும், பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவர் என்பது தெளிவு.

பிரான்ஸ் அரசு உலக நாடுகளில் இயங்கும் ஒரே ஒரு சர்வதேச பயங்கரவாதக் குழு அல்-ஹைடா மட்டும்தான் என்று நினைக்கிறதா? பிரான்ஸ் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்குச் சார்பான நிலைப்பாட்டை உடனடியாகக் கைவிட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைநகர் பாரிசிலிருக்கும் ஸ்ரீலங்கா தூதரகத்தின் மீது புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளும் தமிழ் நாசிசவாதிகளும் நடத்திய இந்தத் தாக்குதல் பற்றி மௌனம் சாதிப்பதை பிரான்ஸ் அரசு உடனே கைவிட வேண்டும். ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை கிழித்தெறிந்து தேசத்தின் இறைமைக்குச் சவால் விட்ட பயங்கரவாதிகளைத் தேடிக் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும். -திவயின விமர்சனம் : 09.09.2007-

http://www.thinakkural.com/news/2007/9/14/...s_page36044.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் உங்கள் தூதரகத்தை france இல்தான் வைத்து தாக்க முடியும் என்ற இயலாமையோடு இருந்தால்

ஏன் உங்கள் தலைநகரங்களின் நிகழ்ந்த அசம்பாவிதங்களுக்கு புலிகளை பொறுப் பாளிகளாக்குகிறீர்கள்?

உலகத்துக்கு பயந்தே உங்கள் மக்கள் மீது புலிகளும் உங்கள் நடவடிக்கைகளுக்கு ஈடாக தாக்கவில்லை என்பது உண்மையானால். இந்தக் காரணம் பாரீஸ் இன் நடவடிக்கைக்கு முகத்தை மூடிக் கொண்டா குற்றம் சாட்டப் போகிறது.

புலிஎதிர்ப்பு நடவடிக்கைகள் மிக மலிவான தரத்துக்கு இறங்கிவிட்டதை அல்லவா காட்டுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.