Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திசைதிருப்பும் தாக்குதல்களும், இராணுவக் காய்நகர்த்தல்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்காக இராணுவ ஆய்வாளர் செல்வி அ.மகிழினி

வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகள் வலிந்த பெரும்தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் புலிகளின் படையணிகள் இரவு பகல் பாராது தாக்குதல் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அங்குள்ள சர்வதேச ஊடகங்களின் நிருபர்கள் தெரிவித்து வருகின்றனர். இராணுவத்தின் புலனாய்வுத்தகவல்களும் இதனையே கூறுவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.

புலிகள் நடத்தப்போகும் தாக்குதல் குறித்து இராணுவத்தரப்பு அடிக்கடி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை வெளியிடுவதைப் பார்த்தால் இந்த வலிந்த தாக்குதல் எங்கு ஆரம்பமாகப்போகின்றது என்று தெரியாமல் இராணுவத்தினர் குழப்பமடைந்துள்ளதைக் காணலாம்.

கடந்த மாத நடுப்பகுதியில் வவுனியா - மன்னார் எல்லைப்பகுதிகளில் புலிகளின் தாக்குதல் படையணிகள் குவிவதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவித்தன. வவுனியாவில் செட்டிகுளம் ஊடாகவும் மன்னாரில் தம்பனை ஊடாகவும் பெருமெடுப்பிலான தாக்குதல்களை புலிகள் நடத்தக்கூடும் என்று இராணுவத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் புலிகளாக வலிந்து அந்த பகுதிகளில் தாக்குதல்களை நடத்தாமல் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு மட்டும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இது இராணுவத்திற்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும்.

இந்த பகுதியுடாக புலிகள் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று இராணுவத்தினர் எதிர்பார்த்திருந்தமைக்கு இன்னொரு காரணமும் உள்ளது. மடுத்திருவிழாவுக்கு முன்னர் அப்பகுதியை இராணுவத்தினர் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர் என்று புலிகளே குற்றஞ்சாட்டியிருந்ததால் மடுவை நோக்கி முன்னேறக் காத்திருந்த இராணுவத்தினரைக் குறிவைத்து புலிகளே முந்திக்கொண்டு தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று இராணுவத்தினர் கருதினர். இதன்காரணமாகவே அப்பகுதியில் 57 ஆவதும் 53 ஆவதும் படையணிகள் தயாராக நிலைநிறுத்தப்பட்டிருந்தன.

ஆனால் ஒரு மாதகாலமாகியும் இராணுவத்தினர் எதிர்பார்த்தது போல் புலிகள் அங்கே வலிந்த பெரும் தாக்குதல்கள் எதையும் நடத்தவில்லை என்பதுடன் மடுத்திருவிழாவும் முடிந்துவிட்டது.

இந்நிலையில்தான் மணலாற்றுப் பகுதி மீது கடந்த சில வாரங்களாக இராணுவத்தின் கவனம் திசைதிரும்பியுள்ளது. இதற்கான காரணமும் புலிகள்; என்பதுதான் விசேட அம்சம்.

அண்மைக்காலமாக புலிகளின் மோட்டார் குண்டுகள் மணலாற்றை அண்மித்திருக்கும் சிங்களக் குடியேற்றக்கிராமங்களில் வீழ்ந்து வெடிப்பதே இராணுவத்தினரின் கவனம் திசை திரும்பக் காரணமாகும்.

ஒரு பகுதியில் தமது கவனம் குவிந்திருப்பதாகக் காட்டிக்கொண்டு இன்னொரு பகுதிமீது தாக்குதல் நடத்துவது புலிகளின் சிறப்பு. இது இராணுவத்தினருக்கு தெரியாத விடயமல்ல. அதனால்;தான் புலிகளின் கவனம் யாழ். குடாநாட்டின் மீது குவிந்திருப்பதாக இராணுவத்தரப்பு நினைத்துக்கொண்டிருக்க வடபோர்முனையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மணலாற்றின் மீது புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று இராணுவத்தினர் எதிர்பார்க்கின்றனர். அதன்விளைவாகவே மோட்டார் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என்பதும் இராணுவத்தினரின் கணிப்பாகும்.

இந்த கணிப்பின் அடிப்படையிலேயே இராணுவத்தின் திட்டமிடல்களும் காய்நகர்த்தல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரைகாலமும் வன்னி மாவட்டத்தின் இராணுவக் கட்டளைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் டபிள்யு.பி. எதிரிசிங்க அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு அவருக்கு இராணுவத்தலைமையகத்தில் பொது அதிகாரிகளுக்கான பணிப்பாளர் நாயகம் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே 53 ஆவது 51 ஆவது படையணிகளுக்கான கட்டளைத் தளபதியாகவும் கடமையாற்றியிருந்தார்.

மேஜர் ஜெனரல் டபிள்யு.பி. எதிரிசிங்கவை வன்னி மாவட்டத்தின் இராணுவக்கட்டளைத்தளபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு அண்மைக்காலமாக அப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இராணுவத்தினர் சந்தித்த தோல்விகளே காரணமாக அமைந்துவிட்டன.

குறிப்பாக மன்னாரில் பெரியதம்பனையிலும் வவுனியாவில் இரணைஇலுப்பைக்குளம் விளாத்திக்குளம் முள்ளிக்குளம் பகுதிகளிலும் இராணுவத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்புகள் குறித்து மேஜர் ஜெனரல் டபிள்யு.பி. எதிரிசிங்க மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இராணுவத்தின் படையணிகளில் மிகப்பலம்வாய்ந்ததாகக் கூறப்படும் 53 ஆவது படையணியின் சில பிரிவும் அதற்கு நிகரானதாக அண்மையிலேயே உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியுமே இந்த பகுதிகளில் அடி வாங்கியிருந்தன. மடுவைக் கைப்பற்றும் நோக்கில் இப்பகுதிக்கு கொண்டுவரப்பட்ட பலம்வாய்ந்ததாகக் கருதப்பட்ட இந்த படையணிகள் அடிவாங்கியதன் விளைவாகவும் மேஜர் ஜெனரல் டபிள்யு.பி. எதிரிசிங்கவின் இடமாற்றம் குறித்து இராணுவ உயர்மட்டம் சிந்திக்கத்தொடங்கியிருந்தத

Edited by (kathiravan)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.