Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய அரசியல் கட்சிக்கு கோட்டாபய ஆதரவு- மக்கள்மத்தியில் தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்ப திட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியல் கட்சிக்கு கோட்டாபய ஆதரவு- மக்கள்மத்தியில் தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்ப திட்டம்!

kugenSeptember 12, 2023
 
image_750x_624a5017692e6.jpg

 

கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியை இராஜினாமா செய்தது முதல் கடும் மௌனத்தை கடைப்பிடித்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது சகாவும் ஊடக உரிமையாளருமான ஒருவர் ஆரம்பித்துள்ள புதிய கட்சி மூலம் பாதிக்கப்பட்ட தனது பெயரை மீண்டும் கட்டியெழுப்பி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திட்டமிடுகின்றார்.


அவரது சகா நேற்று அரசியலில் ஈடுபடுவது குறித்து அறிவித்துள்ளார்.

பொதுமக்களால் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டபோதிலும் முன்னாள் ஜனாதிபதிக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மவ்பிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கின்றார் என தெரியவருகின்றது.

கட்சியை அவரது நெருங்கிய சகா டிலீத் ஜெயவீர சமீபத்தில் வாங்கியிருந்தார்.

கட்சியின் புதிய தலைவராக ஜெயவீர பொறுப்பேற்ற பின்னர் கட்சியின் யாப்பில் மாற்றங்கள் சேர்க்கப்பட்டு புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

கட்சி தற்போது புதிய உறுப்பினர்களை இணைத்துவருகின்றது,ராஜபக்சவின் வியதமக போன்று கல்விகற்றவர்களை சேர்ப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.

கடந்த 2022 ஒக்டோபர் மாதம் ஊடகதுறையினர் மற்றும் வர்த்தக துறையினர் கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதியின் மதிப்பினை உயர்த்தும் விதத்தில் உரையாடியிருந்தனர் .இந்த பின்னணியிலேயே தற்போதை முயற்சிகள் இடம்பெறுகின்றன.

ராஜபக்ச தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்,அதற்கு அவரது குடும்பத்தினர் உட்பட நெருக்கமானவர்களே காரணம் என இந்த குழுவினர் கிராமத்தவர்களிற்கு தெரிவித்துள்ளனர்.

கோட்டபாய ராஜபக்ச குறித்த மக்கள் கருத்தினை அறிவதற்காக கருத்துக்கணிப்புகளையும் மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் கோட்டாபய மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைத்துள்ளனரா என்பதை அறிவதற்காக இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

நாடு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகிவரும் நிலையில் ஜெயவீர தலைமையிலான புதிய கட்சிக்கு கோட்டாபய தனது ஆதரவை வழங்குவார் என தெரியவருகின்றது.

 

http://www.battinews.com/2023/09/blog-post_185.html

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எந்த தார்மீக அடிப்படையில் மீண்டும் அரசியலுக்கு வருகிறார் என்பது கேள்விக்குறியே. நிச்சயமாக சிங்கள தீவிரவாதிகளின் ஆதரவு இவருக்கு இருக்கும். இவர் இப்போது ஆதரவு தெரிவித்திருக்கும் கட்சியின் பொறுப்பு திலீத் ஜெயவீர என்பவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவரைப்பற்றி சீனி மோசடி போன்ற பல குற்றசாட்டுகள் உள்ளது. இவரது தொலைக்காட்சி அலைவரிசைகள்தான் தேரென, அத தேரென , த புடிஸ்ட் என்பன. மிகவும் பிரபலமான ஒரு பிசினஸ் செய்பவர்தான் இவர். எனவே பொறுத்திருந்து பார்ப்பம் முடிவு எப்படி இருக்குதென்று. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.