Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமந்தாபவருடன் ஜனாதிபதி சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவரை சந்தித்தார்.

இலங்கை நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த போது ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் பற்றிய சுருக்கமான விளக்கமளித்த ஜனாதிபதி, அதனை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார்.

மேலும், ஊழல் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டதன் பின்னரான செயன்முறைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு பயிற்சி பெற்ற பணியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலான சவாலுக்கு முகம்கொடுத்திருப்பதாகவும், அதனால் ஊழல் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளமையின் பலன்களை அடைந்துகொள்ள இன்னும் இரண்டு வருடங்கள் அவசியப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், ஊழலுக்கு எதிரான கொள்கையை அமுல்படுத்துவதற்கு தமது அரசாங்கத்தின் முழு அரச பொறிமுறையும் முழுமையாக உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த செயற்பாடுகளை விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

“அஸ்வெசும” வேலைத்திட்டத்தின் அறிமுகத்தினூடாக நலன்புரித் திட்டங்களின் வினைத்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியினால் விளக்கமளித்தார்.

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் தொடர்ந்து ஆதரவளிக்கும் அதே வேளையில் தேவையான நிபுணத்துவ உதவிகளையும் வழங்கும் என்று சமந்தா பவர் இதன்போது தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/273724

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அபிவிருத்தி முதலீட்டை 19.2 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கவுள்ள அமெரிக்கா

Published By: PRIYATHARSHAN

20 SEP, 2023 | 09:02 PM
image
 

இலங்கையின் அபிவிருத்தியினை மேலும் அதிகரிப்பதற்காக 19 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையினை மேலதிக நிதிகளாக வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளதாக நிதியமைச்சில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அமெரிக்கா இன்று அறிவித்தது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றிற்கிடையிலான ஒரு அபிவிருத்தி நோக்கத்திற்கான மானிய ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்கா வழங்கும் இந்த 19.23 மில்லியன் டொலர்கள் (ரூ. 6.2 பில்லியன்) கட்டுப்படுத்தப்படும். 

இந்த  அபிவிருத்தி உதவியானது பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயக ஆட்சி நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதுடன் இலங்கையுடனான தனது பங்காண்மை மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நீடித்த உறவுகளை கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களில் அமெரிக்கா கொண்டுள்ள தொடரான அர்ப்பணிப்பினையும் இது வெளிப்படுத்துகிறது.

செயற்பணிப் பணிப்பாளர் கிராவ் மற்றும் நிதி அமைச்சின் திறைசேரியின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன ஆகியோர் பங்குபற்றிய ஒரு நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

“USAID நிர்வாகி சமந்தா பவர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்  நியூயோர்க் நகரில் கலந்துரையாடியவாறு, இலங்கையுடனான எமது பங்காண்மை மற்றும் இந்த ஆச்சரியமான, வாய்ப்புகள் நிறைந்த நாட்டின் மக்களுக்கு நாங்கள் செய்யும் தொடரான உதவி ஆகியவற்றினை இந்த முதலீடு நிரூபிக்கிறது.” என இலங்கை மற்றும் மாலைதீவிற்கான USAID செயற்பணிப் பணிப்பாளர் கெப்ரியல் கிராவ் தெரிவித்தார். 

“இந்த நிதியைப் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயக ஆட்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும், பாதிப்படையக்கூடிய மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

“அமெரிக்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான நெருங்கிய ஒத்துழைப்பினையும், மிகுந்த உள்ளன்புடைய பங்காண்மையினையும் மற்றும் இலங்கைக்கு வழங்கிய உதவியினையும் இலங்கை மக்கள் பாராட்டுகின்றனர்” என செயலாளர் சிறிவர்தன கூறினார். “ஜனநாயக, செழிப்பான மற்றும் மீண்டெழும் தன்மையுடைய இலங்கையை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை இம்மானியமானது வலுப்படுத்தும்.” என அவர் மேலும் கூறினார்.

1956 ஆம் ஆண்டு முதல் உதவியாக 2 பில்லியன் டொலர்களுக்கும் (கிட்டத்தட்ட ரூ.720 பில்லியன்) அதிகமான தொகையினை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/165043

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.