Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாய்மாருக்கும் சிறுவர்களுக்கு திரிபோஷா வழங்க இலங்கைக்கு அமெரிக்காவின் உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 SEP, 2023 | 07:07 PM
image
 

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பு (USAID), இலங்கையில் திரிபோஷா வலுவூட்டப்பட்ட உணவுத் திட்டத்தைத் முன்னெடுக்கும் முகமாக 4, 700 மெட்ரிக் தொன் சோயா பீன்ஸ் மற்றும் கணிசமான அளவு மக்காச்சோளத்தினை WFP யினூடாக இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திடம் கையளிக்கும் நிகழ்ச்சியானது ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் ஏற்பாட்டில் திரிபோஷா தொழிற்சாலையில் இடம்பெற்றது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் WFP யினால் முன்னெடுக்கும் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக, 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை USAID அமைப்பு வழங்குகின்றது.

இலங்கை மற்றும் உலகலாவிய ரீதியில் பாரிய உதவிகளை முன்னெடுத்துவரும் ஐக்கிய அமெரிக்காவானது  WFP யினூடாக இலங்கையில் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருளாதார, உணவு மற்றும் பெறுமதிசேர் வவுச்சர்களையும் வழங்கிவருகின்ற அதேவேளை தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து நிகழ்ச்சி திட்டம், பாடசாலை உணவு திட்டம் மற்றும் திரிபோஷா வலுவூட்டப்பட்ட உணவு திட்டத்திற்கும் உதவிவருகின்றது.

“இலங்கைச் சிறார்களின் போசனைக் குறைப்பாட்டைத் தடுப்பதற்கு தேவையான திரிபோஷவை தயாரிப்பதற்கு தேவையான அத்தியாவசிய மூலப்பொருட்களான வழுவூட்டப்பட்ட உணவு பதார்த்தங்களாக நாங்கள் வழங்குவதன் மூலம் இலங்கையுடன் நாம் பேணிவரும் நீண்ட கால உறவை வழுபடுத்திக்கொள்கின்றோம்” என USAID அமைப்பின், நிர்வாக மற்றும் இலகுவில் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் தொகைக்கான அலுவலகத்தின் இயக்குனர் எஸ்டா சின்போ கூறினார்.

கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சரிவிற்கு முகம்கொடுக்கும் வகையில் சோயா பீன்ஸ் மற்றும் கணிசமான அளவு மக்காச்சோளத்தினை எமது பங்காளிகலான உலக உணவு திட்டம் மற்றும் சுகாதார அமைச்சகம் என்பவற்றினூடாக திரிபோஷ தொழிற்சாலைக்கு கொண்டு வந்து சேர்ந்ததை நாம் காணக்கூடியதாகவிருந்தது. USAID ஆனது 1973 ஆண்டு தொடக்கம் திரிபோஷ தயாரிப்பதற்கு உதவி வருகின்றது.

இலங்கையிலுள்ள சிறார்கள் மற்றும் தாய்மார்களின் ஊட்டத்தை வழுப்படுத்துவதற்கு எமது கூட்டினைவானது பங்காற்றி வருவதை என்னும்போது மிகவும் மகிழ்சியளிக்கின்றது.

நாட்டின் பொருளாதார சரிவினால் தொழில்களை இழந்து, வருமானம் நலிவடைந்த மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஊட்டச்சத்து நிறைந்த உணவினை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மக்களிடையே குறைவடைந்துள்ளது. 

வறுமையில் வாழும் மக்கள் குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள், தாய்பாலுட்டும் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகள் போன்றவர்கள் ஊட்டசத்து குறைப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர்.

“நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெண்களை பற்றியோ நாம் கூடுதலாக கவலைப்படுகின்றோம்.” என WFP இன் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பணிப்பாளர் ஜெராட் ரெபெல்லோ தெரிவித்தார்.

“இலகுவில் பாதிக்கப்படக்கூடிய இம் மக்களுக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா வழங்கிவரும் உதவிக்கும் மற்றும் அவர்களின் கருனை உள்ளத்திற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். இதனால் தமக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்தை இம் மக்கள் பெற்றுக்கொள்கின்றார்கள். அபிவிருத்திச் செயற்பாட்டை வலுவூட்டுவதற்கும் மற்றும் பொருளாதார நெருக்கடியின் நீண்ட கால பாதிப்புக்களை குறைப்பதற்கும். எமது அவசரகால செயற்பாட்டின் ஓர் அங்கமாக திரிபோஷா நிகழ்ச்சி திட்டத்திற்கு WFP ஆதரவ நல்கிவருகின்றது.”

அத்தியாவசிய ஊட்டச்சத்துடன் தொடர்ச்சியான உணவினை உட்கொள்வதற்கான துணை உணவாக திரிபோஷா உள்ளது. தேசிய ஊட்டச்சத்து நிகழ்ச்சியின் ஊடாக இது இலவசமாக வழங்கப்படுகின்றது. அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ள திரிபோஷா தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கர்ப்பிணிப் தாய்மார்கள்; தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறுவர்கள் உள்ளடங்கலாக அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நான்கு சுற்று திரிபோஷா பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

அமெரிக்கா போன்ற நிதியுதவியாளர்களின் நிதியுதவியுடன் WFP யானது, 2022 ஜுன் மாதம் முதல் தமது அவசரகால நிகழச்சித் திட்டத்தின் ஊடாக 3.8 மில்லியன் மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்தினை வழங்கியுள்ளது.

புகைப்பட விளக்கம்: USAIDன் நிர்வாக மற்றும் இலகுவில் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் தொகைக்கான அலுவலகத்தின் இயக்குனர், எஸ்டா சின்போ அவர்கள் சோயா மற்றும் சோளம் கொண்ட தொகுதியை இலங்கை திரிபோஷா லிமிடட்டின் தலைவர் தீப்தி குலரத்னவிடம் கையளிக்கின்றார். 

இதில் WFP ஒத்துழைப்புக்கான பங்காளித்துவ செயலகத்தின் பணிப்பாளர் டபிள்யு.டபிள்யு.எஸ். மங்கள மற்றும் WFP இலங்கையின் பிரதி வதிவிடப் பணிப்பாளர் ஜெரார்ட் ரெபெல்லோ ஆகியாரும் பிரசன்னமாகியிருந்தனர்.

https://www.virakesari.lk/article/165139

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.