Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லை - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை – அன்டனி பிளிங்கெனிற்கு கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

22 SEP, 2023 | 11:36 AM
image
 

சர்வதேச மனித உரிமை உரிமை சட்டங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமைக்கு இலங்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பொறுப்பபுக்கூறச் செய்யவேண்டும் என வலியுறுத்தும் கடிதமொன்றை அமெரிக்க காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அமெரிக்க காங்கிரஸில் அங்கம் வகிக்கும் இரு கட்சிகளின்  உறுப்பினர்களும்  இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர்.

இலங்கையில் சித்திரவதை உட்பட சர்வதேச குற்றங்கள் என கருதப்படக்கூடிய குற்றங்கள் உட்பட சர்வதேச சட்டம சர்வதேச மனித உரிமை சட்டம் ஆகியவை மீறப்பட்டமை தொடர்பில் இலங்கையில் போதிய நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாதமை குறித்து இந்த கடிதத்தை எழுவதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை அனுபவிக்கின்றனர். இது அந்த நாடு எதிர்கொள்ளும் அரசியல் சமூக நெருக்கடிக்கு காரணம் - இது மனித உரிமைகளை ஜனநாயக கொள்கைகளை பின்பற்றும் அமெரிக்காவின் கொள்கைகளிற்கு முரணாணது இதனை நிறுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் போது ஆயுதமோதல்களின் போது இலங்கை அரசாங்கமும் இராணுவத்தினரும் சர்வதேச குற்றங்களை இழைத்ததாக நம்பகதன்மை மிக்க  குற்றச்சாட்டுகள் உள்ளன என தெரிவித்துள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள்,

2009 ஜனவரி முதல் மேமாதம் வரையிலான நடவடிக்கைகள் குறிப்பாக கரிசனைக்குரியவையாக உள்ளன இக்காலப்பகுதியில் இலங்கைஇராணுவத்தினர்  வேண்டுமென்றே பொதுமக்கள் மீதும் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் இலக்குகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டனர். மேலும் அவர்கள்  தமிழ் பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்கி சித்திரவதை செய்து சிதைத்துக்கொலை  செய்தனர் எனவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

வெள்ளைகொடியுடன்  சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை சுட்டுக்கொன்றனர்-விடுதலைப்புலி உறுப்பினர்களையும் பொதுமக்களையும்  பலவந்தமாக காணாமல்போகச்செய்தனர்- அவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட ஐந்து மாதங்களில் என்ன நடந்தது என்பது தெரியாத அல்லது கொல்லப்பட்டனர் என கருதப்படும்  பொதுமக்களின் எண்ணிக்கை 40000 முதல் 169796 ஆகும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டுகளை சுயாதீனமாக விசாரணை செய்து வழக்கு தொடுப்பதற்கு பதில் இலங்கை அரசாங்கம் பல யுத்தகுற்றவாளிகளிற்கு  அரசியல் இராணுவ தலைமையக பதவிகளை வழங்கியுள்ளது. சிலர் அந்த பதவிகளில் தொடர்ந்தும் நீடிக்கின்றனர் -இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ்மக்களிற்கு எதிராக சித்திரவதை பாலியல் வன்முறை பலவந்தமாக காணாமல்போகச்செய்தல்  போன்ற சித்திரவதைகளில் ஈடுபடுகின்றது என அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் வடக்குகிழக்கில் தொடர்ச்சியான இராணுவமயமாக்கல் இடம்பெறுகின்றது இலங்கை அரசாங்கம் காணி அபகரிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது நினைவுகூருவதற்கான உரிமையை ஒடுக்கிவருகின்றது எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் நீண்டகால சித்திரவதை மற்றும் மனித உரிமைமீறல்கள் போன்ற வரலாற்றை கருத்தில் கொள்ளும்போது முழுமையாக தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலுடன் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிராக பயங்கரமான குற்றங்களை இழைப்பது துரதிஸ்டவசமாக ஆச்சரியமளிக்கவில்லை எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்

சம்மர் லீ  பில்ஜோன்சன் டனி கே டேவிஸ் ஜேம்ஸ் பிமக்கவர்ன் ஜேமி ரஸ்கின் இல்ஹான் ஓமர்  கொரி புஸ் டேபோரா கே ரொஸ்  ஆகியோரே இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/165156

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.