Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரலாறு தெரியாத கிழக்கு மாகாண ஆளுநர் கவனத்திற்கு | தமிழன் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

கிழக்கு மாகாண  ஆளுநர் கவனத்திற்கு...

பொலிஸாரின் அனுமதியை பெறாது சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் திலீபனின் நினைவேந்தல் ஊர்வலத்தை நடத்தியது முற்றிலும் தவறு என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளமை எமது கவனத்தை ஈர்த்திருக்கிறது.


சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் இவ்வாறு நினைவேந்தல் ஊர்வலத்தை முன்னெடுத்து தேவையில்லாத இனக்கலவரத்தை தூண்டுவதற்கு முயற்சிப்பதாகவும் ஆளுநர் குற்றஞ்சுமத்தியுள்ளார். 


''இதுபோன்ற ஊர்வலங்கள் சிங்கள மக்கள் வாழும் ஊர்களில் தவிர்க்கப்பட வேண்டும். ஏனைய இனத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் பொறுப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .''எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.


கஜேந்திரன் எம்.பி தலைமையில் திருகோணமலையில் வந்த திலீபன் நினைவுதின ஊர்வலம் குறித்து இப்படியாக ஊடகர்களிடம் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண ஆளுநர்.கிழக்கு ஆளுநர் வேண்டாம் என்று ஒரு இலட்சம் கையெழுத்து வேட்டையை பௌத்த பிக்குகள் திருகோணமலையில் மேற்கொண்டுள்ள சூழ்நிலையில்  ஆளுநரின் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. பொறுப்புள்ள ஊடகம் என்ற வகையில் சில விடயங்களை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். 


திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுறுகல்கள் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து நிர்மாணிக்க இருக்கும் விகாரையின் பணிகள் ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டன.


 நிலாவெளி பெரியகுளம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களும் 02 சிங்கள குடும்பங்களும் வசித்து வருகின்றன.அங்கு வாழும் தமிழ் மக்கள் இவ்விகாரை நிர்மாண பணிகள் ஆரம்பிக்க இருப்பதை நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் விகாரை நிர்மாணப்பணி தொடருமாக இருந்தால் இப்பிரதேசத்தில் பாரியதோர் இனமுறுகல் ஏற்படும் என்று  அதனை நிறுத்த ஆளுநர் உத்தரவிட்டாரே ?அந்த உத்தரவுக்கு என்ன ஆனது? 


ஆளுநரின் தடையுத்தரவை மீறி திருகோணமலை பெரியகுளம் சந்தியில் பௌத்த கொடிகள்  நடப்பட்டு சட்டவிரோத விகாரை கட்டுமானம் பொலிஸாரின் பாதுகாப்புடன் கடந்த 9 ஆம் திகதி   மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதே ? பொலிஸார் ஆளுநரின் உத்தரவை மதித்தார்களா? அல்லது சட்டவிரோதமாக கட்டப்படும் விகாரைக்கு முன்கூட்டியே சட்டப்படி அனுமதி பெறப்பட்டதா?


அப்படியான அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக  மேற்கொள்ளப்பட்ட அந்த விகாரை நிர்மாணம் குறித்து நன்கறிந்த ஆளுநர் அப்படியான நிர்மாணம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை குலைக்கும் என்று கருதியல்லவா அதனை நிறுத்தக் கோரியுள்ளார்?திலீபன் நினைவுப்பேரணி அதனைவிடவா நல்லிணக்கத்தை சீர்குலைக்கப்போகிறது ?


கிழக்கு மாகாண ஆளுநருக்கு தமிழர் போராட்டமும் வரலாறும் தெரியாமல் இருக்கலாம்.தெரியாத ஒன்றை தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது  ஒன்றும் தவறான விடயமும் அல்ல.ஆனால் விடயங்கள் தெரியாமல் விபரங்கள் புரியாமல் அவர் ஊடகங்களிடம் கருத்துரைப்பது அவருக்குள்ள அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையினையே காட்டுகிறது.


ஈழப்போராட்டத்தில் , தமிழர் விடுதலை கோரும் வேட்கையில் திருகோணமலைக்கென ஒரு தனித்துவம் உண்டு. தமிழர் தாயகத்தின் தலைநகராக திருகோணமலை கருதப்பட்டது.தமிழர் ஆயுதப்போராட்டத்தில் திருகோணமலை மண் பெற்றதை விட இழந்தது ஏராளம்.அந்த மண்ணில் நினைவேந்தலுக்கு பொலிஸ் அனுமதி பெற்று நடத்தவேண்டும் என்று கூறுவது எந்தவகையில் நியாயமானது? அப்படியே அனுமதி கேட்டாலும் கொடுக்கப்படுமா?அப்படியே வழங்கப்பட்டாலும் நடத்த விடுவார்களா? பொலிஸாரின் தடுப்பையும் மீறி  சாதாரண மக்கள் பொல்லுகளை ,ஹெல்மெட்களை கொண்டு தாக்கியதை ஆளுநர் கவனிக்கவில்லை  போலும்.


இங்கே இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். --திருகோணமலை பெரியகுளத்தில் விகாரை அமைக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் மறுத்த நிலையில்,  மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்  ஓகஸ்ட் 28 இல் நடைபெற்றபோது  மாவட்டச் செயலகத்திற்கு வெளியே, பௌத்த மதகுருக்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்தமதகுருக்கள், மாவட்டச் செயலகத்திற்குள் நுழைந்து, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை இடைநடுவே தடுத்து, அங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முறைப்படி அனுமதி பெற்றா பிக்குகள் உள்ளே வந்தனர்?அப்படி அத்துமீறியவர்கள் மீது சட்டம் பாய்ந்ததா?  இதே தமிழர்கள் எவராவது அபப்டி உள்ளே வந்திருக்க முடியுமா?அல்லது சட்டப்படி வரத்தான் அனுமதி கிடைத்திருக்குமா ?


ஆளுநர் என்பவர் அரசாங்கத்தின் சேவகர்.அது அனைவருக்கும் தெரியும்.ஆனால் ஜனநாயகத்தின்பால் , நீதியின் பேரால்  அவர் நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறது. ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க அவருக்கு கடப்பாடு இருக்கிறது. அதைவிடுத்து சட்டம் , ஒழுங்கு என்று பேசுவதன்மூலம் அரச இயந்திரத்தை  திருப்திப்படுத்த அவர் முயல்வாரானால் தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல வரலாறும் அவரை ஒருபோதும் மன்னிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த வரைக்கும் இந்த தமிழன் பத்திரிகை தேரென, அத தேரான பத்திரிகையின் உரிமையாளரான டிலீத் ஜெயவீர என்பவரால் நடத்தப்படுகின்றது. இப்படியான ஒரு கட்டுரை இதில் வருவது ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது இவருடன் கூட்டு சேர்ந்துதான் கோத்தா அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அரசியல் நோக்கத்துடனும் இப்படி எழுதலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.