Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் வரிவருமானம் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தது - சர்வதேச நாணயநிதியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

02 OCT, 2023 | 02:42 PM
image
 

முன்னைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் வரிவருமானம் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஆட்சி குறித்த சர்வதேச நாணயநிதியத்தின்  அறிக்கையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

2022 இல் அப்போதைய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளிற்கு எதிரான தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஊழலே காரணம் என்ற பொதுக்கருத்தினை உருவாக்கின என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தின் கிழ் காணப்பட்ட அதிகார அமைப்பு தனித்துவமான நிர்வாக சிக்கல்களை உருவாக்கியது என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

குடும்ப உறவுகளால் இறுக்கமாக இணைக்கப்பட்ட தனிநபர்களின் குழுவின் கைகளில் அதிகப்படியான அதிகாரம் குவிந்திருப்பது ஒரு சிறிய உயரடுக்கின் அரசியல் அதிகாரத்தை வலியுறுத்துவதற்கும் பொது அதிகாரத்தை ஒருங்கிணைக்கப்பட்ட முறையற்ற பயன்பாட்டிற்கு உதவுவதற்கும் உதவியது என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ராஜபக்சவின் அரசாங்கம் மூன்று வருடங்களுக்கும் குறைவான காலமே ஆட்சியில் இருந்த போதிலும் அதன் பதவிக்காலத்தில் வரி வருமானத்தில் பேரழிவுகரமான சரிவு காணப்பட்டது, முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, ஒளிபுகா சூழ்நிலையில் அரச சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை வழங்கியது மற்றும் விரிவான நீண்ட கால சலுகைகளை வழங்கியது. அத்துடன் வெளி மற்றும் உள்நாட்டு கடனில் வியத்தகு அதிகரிப்பு என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

முன்னைய ஏற்பாடுகளையும் நிறுவனங்களையும் மீண்டும் ஏற்படுத்தும் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கடந்த ஆண்டுகளில் பரவலாக வெளிப்படுத்தப்பட்ட நிர்வாக சவால்கள் மற்றும் ஊழல்சவால்களை எதிர்கொள்வதற்கு போதுமானவை அல்ல எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/165903

  • கருத்துக்கள உறவுகள்

IMF புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சில முக்கிய நிபந்தனைகளுக்கான கால அவகாசத்துடனனான கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அது இலகுவான விடயமாக இருக்க போவதில்லை. அரசாங்கத்தை தவிர மற்ற எல்லா கட்சிகளும், தொழில் வல்லுனர்களும், சர்வதேச நிறுவனங்களும் எதிர்மறையான கருத்தையே IMF இட்கு வழங்கி இருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் எப்போது பணம் வழங்கப்படும் என்பதை அறிவிக்காமல் வெளியேறினார்கள். மேலும், மோசமான ஊழல்கள், அரச வங்கிகளில் கடனை திருப்பி செலுத்தாத செயல்கள் போன்றவற்றை அவர்கள் கவனத்தில் கொண்டுள்ளார்கள். அலி  சபரி போன்றோர் மேட்கு நாடுகளுக்கு எதிராக அறிக்கை விடடமையும் இங்கு எதிரொலிக்க போகின்றது. இப்போது அரசாங்கம் திரிசங்கு நிலைமையில் இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.