Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ஆர்ப்பாட்டக்காரர்களை ஒரு விதமாகவும் பௌத்தமதகுருவை வேறு விதமாகவும் நடத்திய பொலிஸார் - அரசகட்டமைப்பிற்குள் சிங்கள பௌத்த ஆதிக்கத்திற்கான உதாரணம் - பேர்ள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

10 OCT, 2023 | 10:46 AM
image
 

தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் நடத்திய விதத்திற்கும் பௌத்தமதகுருவை நடத்திய விதத்திற்கும் இடையிலான வித்தியாசம் அரசகட்டமைப்பிற்குள் ஆழமாக வேருன்றியுள்ள சிங்கள பௌத்த ஆதிக்கவாதத்திற்கான தெளிவான உதாரணம் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு பேர்ள் தெரிவித்துள்ளது

வார இறுதியில் வெளியான வீடியோக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை துன்புறுத்துவது ஈவிரக்கமற்ற விதத்தில் தாக்குவதை காண்பித்தன என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நில ஆக்கிரமிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்கள் குறித்து மட்டக்களப்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றன.

இதேவேளை மட்டக்களப்பில் பௌத்தமதகுரு அம்பிட்டிய சுமணரத்தின ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோவும்; வெளியாகியிருந்தது.

மதகுரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் வீடியோவில் பொலிஸார் அமைதியாக குழப்பமடையாமல் காணப்படுகின்றனர்.

தமிழர்களிற்கு எதிரான பொலிஸாரின் ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் குறிப்பாக வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு  எதிரான தாக்குதல்கள் பல வருடங்களாக தொடர்கின்றன எனவும் பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் நடத்திய விதத்திற்கும் பௌத்தமதகுருவை நடத்திய விதத்திற்கும் இடையிலான வித்தியாசம் அரசகட்டமைப்பிற்குள் ஆழமாக வேருன்றியுள்ள சிங்கள பௌத்த ஆதிக்கவாதத்திற்கான தெளிவான உதாரணம் எனவும் பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள்  ஆர்ப்பாட்டத்திற்கான தங்கள் உரிமையை பயன்படுத்துவதில் பல தடைகளை எதிர்கொண்டுள்ளனர் - பிரதானமாக பொலிஸாரிடமிருந்து என தெரிவித்துள்ள பேர்ள் அமைப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோத பௌத்த கட்டுமானத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் தடுக்க முயன்றமை சமீபத்தைய உதாரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்மக்களின் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியாக ஓன்றுகூடல் ஆகியவற்றினை இலங்கை தொடர்ந்தும் ஒடுக்குவதற்கு எதிராக சர்வதேச சமூகம் குரல்கொடுக்கவெண்டும் எனவும் பேர்ள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/166523

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மீதான அரசின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் - இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு

Published By: DIGITAL DESK 3

12 OCT, 2023 | 05:13 PM
image
BBM__656x60__Virakesari.png

(நா.தனுஜா)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயத்தையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எதிராக இலங்கை அரசினால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு (பேர்ள்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியதுடன், அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதையும் தடுத்தனர். இருப்பினும் அதற்கு முன்னைய நாள் பௌத்த பிக்கு ஒருவர் எவ்வித இடையூறுகளுமின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு பொலிஸார் இடமளித்தனர்.

அரச அனுசரணையுடனான காணி அபகரிப்புக்கள், தமிழர்களின் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படல், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு உள்ளடங்கலாக வட-கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் பௌத்த விகாரைகளின் நிர்மாணம் போன்றவற்றுக்கு தமிழ் சமூகம் தொடர்ச்சியாக முகங்கொடுத்துவருகின்றது.

இதற்கு முன்னதாக கடந்தகாலங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் நீதி, நினைவுகூரலுக்கான உரிமை மற்றும் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை போன்றவற்றை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் பொலிஸ் கண்காணிப்பு, அடக்குமுறைகள் மற்றும் மீறல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன.

பல தசாப்தகாலமாகத் தொடரும் இலங்கை அரசின் குற்றங்கள் தொடர்பான தண்டனையின்மை போக்கானது கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் நினைவுகூரலுக்கான சுதந்திரம் போன்ற தமிழர்களின் உரிமைகளை முன்னிறுத்திப் போராடுவோருக்குத் தீங்கு ஏற்படுத்துவதற்கான வலுவை இலங்கை பொலிஸாருக்கு வழங்கியிருக்கின்றது. 

அதுமாத்திரமன்றி தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவதற்கோ அல்லது யுத்தத்துக்கு வழிகோலிய அடிப்படைக்காரணிகளைக் களைவதற்கோ இலங்கை அரசு முற்படாமையானது தவறான விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதில் அரசு கொண்டிருக்கும் கடப்பாட்டைக் காண்பிக்கின்றது.

மேலும், குறிப்பாக இலங்கை அரசின் ஒடுக்குமுறைகள், மீறல்கள் மற்றும் வன்முறைகளின் இலக்காக தமிழ்ப்பெண்களே உள்ளனர். தமது பாதுகாப்பைப் பணயம் வைத்து உண்மையைக்கோரிப் போராடிவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இன்னமும் அவர்களது அன்புக்குரியவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தொடர்பான பதில் வழங்கப்படவில்லை என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/166718

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2023 at 11:55, ஏராளன் said:

Published By: RAJEEBAN

10 OCT, 2023 | 10:46 AM
image
 

தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் நடத்திய விதத்திற்கும் பௌத்தமதகுருவை நடத்திய விதத்திற்கும் இடையிலான வித்தியாசம் அரசகட்டமைப்பிற்குள் ஆழமாக வேருன்றியுள்ள சிங்கள பௌத்த ஆதிக்கவாதத்திற்கான தெளிவான உதாரணம் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு பேர்ள் தெரிவித்துள்ளது

வார இறுதியில் வெளியான வீடியோக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை துன்புறுத்துவது ஈவிரக்கமற்ற விதத்தில் தாக்குவதை காண்பித்தன என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நில ஆக்கிரமிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்கள் குறித்து மட்டக்களப்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றன.

இதேவேளை மட்டக்களப்பில் பௌத்தமதகுரு அம்பிட்டிய சுமணரத்தின ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோவும்; வெளியாகியிருந்தது.

மதகுரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் வீடியோவில் பொலிஸார் அமைதியாக குழப்பமடையாமல் காணப்படுகின்றனர்.

தமிழர்களிற்கு எதிரான பொலிஸாரின் ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் குறிப்பாக வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு  எதிரான தாக்குதல்கள் பல வருடங்களாக தொடர்கின்றன எனவும் பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் நடத்திய விதத்திற்கும் பௌத்தமதகுருவை நடத்திய விதத்திற்கும் இடையிலான வித்தியாசம் அரசகட்டமைப்பிற்குள் ஆழமாக வேருன்றியுள்ள சிங்கள பௌத்த ஆதிக்கவாதத்திற்கான தெளிவான உதாரணம் எனவும் பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள்  ஆர்ப்பாட்டத்திற்கான தங்கள் உரிமையை பயன்படுத்துவதில் பல தடைகளை எதிர்கொண்டுள்ளனர் - பிரதானமாக பொலிஸாரிடமிருந்து என தெரிவித்துள்ள பேர்ள் அமைப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோத பௌத்த கட்டுமானத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் தடுக்க முயன்றமை சமீபத்தைய உதாரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்மக்களின் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியாக ஓன்றுகூடல் ஆகியவற்றினை இலங்கை தொடர்ந்தும் ஒடுக்குவதற்கு எதிராக சர்வதேச சமூகம் குரல்கொடுக்கவெண்டும் எனவும் பேர்ள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/166523

இலங்கை எப்போது சுதந்திரம் பெற்றதோ அன்றிலிருந்து இதுதான் நிலைமை. பிச்சை எடுத்தாலும் பவுத்த இனவாதத்தின் கோரத்தில் இருந்து மாறுவதட்கு அவர்கள் தயாராக இல்லை. காசாவை இஸ்ரவேல் முற்றுகை இடடதுபோல முற்றுகை இடடாலும் இவர்கள் பவுத்த இனவாதத்தில் இருந்து திருந்துவார்களா என்பது சந்தேகமே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.