Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் பாஸ் நடைமுறையைக் கண்டித்து போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

12 OCT, 2023 | 05:20 PM
image
BBM__656x60__Virakesari.png

கடற்தொழிலில்  ஈடுபடும் தமக்கு தொழில் ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாஸ் நடைமுறை மற்றும்  மன்னார் கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாட்டை கண்டித்து மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் வியாழக்கிழமை (12) காலை 11.45 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன் ஒன்று கூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

DSC_0779.JPG

பள்ளிமுனை கடற்கரையில் இருந்து அட்டை பிடிக்க கடலுக்குச் செல்லும் பள்ளிமுனை கிராம மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு, மன்னார் கடற்றொழில் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக கடற்படையினர் இடையூரை ஏற்படுத்துவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

DSC_0778.JPG

இந்த நிலையில் புதன்கிழமை (12) வியாழக்கிழமை காலை பள்ளிமுனை கடற்கரையில் இருந்து கடலட்டை பிடிக்க தொழிலுக்குச் செல்ல முயன்ற போது தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

DSC_0767.JPG

படகு ஒன்றில் 3 பேர் மாத்திரமே செல்ல முடியும் என கடற்படை அறிவித்தமையினால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

DSC_0765.JPG

தாம் பாஸ் நடை முறையினால் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்து இன்றைய தினம் பள்ளிமுனை கிராம மக்கள் தமது கிராமத்தில் இருந்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலகம் வரை வருகை தந்து மாவட்டச் செயலக பிரதான நுழை வாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DSC_0758.JPG

கடலில் பிடிபடும் ஒவ்வொரு வகையான கடல் உணவுகளுக்கும் ஒவ்வொரு அனுமதிப் பத்திரமா?, வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் மீன்பிடியில் ஈடுபடும் போது ஏன் எங்களை கடலுக்குள் செல்ல தடை விதிக்கின்றீர்கள்?, சுதந்திரமாக வடபகுதி கடலில் தொழில் செய்த எங்களுக்கு ஏன் இப்போது தடை?, உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DSC_0758.JPG

மேலும் கடல் தொழிலுக்குச் செல்லும் போது கடற்படையினர் எங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குகின்ற போதும், மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தமக்கு பாரிய இடையூரை ஏற்படுத்துவதாகவும், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமையவே கடற்படையினர் கெடுபிடிகளை மேற்கொள்ளுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

DSC_0757.JPG

எனவே கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களுக்கு தொழில் ரீதியாக வழங்கப்படும் தனித்தனி பாஸ் நடைமுறை நிறுத்தப்பட்டு பொதுவான பாஸ் வழங்கப்பட வேண்டும் எனவும், அட்டை பிடிக்க செல்லும் போது படகு ஒன்றில் மூவர் மட்டுமே செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும் எனவும், மன்னார் கடற்றொழில் திணைக்களம் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_0754.JPG

https://www.virakesari.lk/article/166716

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.