Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேர்வையின் துளிகள் சூடிடும் இறைவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4915.jpg

“வள்ளிப்பிள்ளையின்ரை கனவிலை வந்து வைரவர் உண்மையிலேயே சொன்னவராமடி

“வைரவர் இருந்தால் ஊரைக் காவல் செய்வார்தான். கனவிலை அவர் வந்து தனக்கொரு கோயிலைக் கட்டச் சொன்னதுக்குப் பிறகும் கட்டாமல் விட்டால் கோவத்திலை அவர் ஏதாவது செய்தும் போடுவார்

எங்கள் கிராமத்தில் வைரவர் கோவில் உருவாக வள்ளிப்பிள்ளை என்பவரின் கனவில் வைரவர் வந்து சொன்னதே காரணமாக இருந்தது. வெள்ளைக்காரனிடம் இருந்து இலங்கை சுதந்திரத்தை பெறுவதற்கு முன்னர் நடந்த சம்பவம் அது.

ஊரில் பரவிய வள்ளிப்பிள்ளையின் கனவு, தனியாக வாழ்ந்து கொண்டிருந்த முதலியார் சுப்பிரமணியத்தார் காதுகளுக்கு போய்ச் சேர்ந்தது. தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் சுவாமி அறையில் ஒரு அலுமாரியில் வைத்துப் பூட்டி இருக்கும் முதலியாருக்கும் ஒரு காவல் தெய்வம் தேவைப்பட்டது. கறுத்த நாயுடன் அதுவும் அம்மணமாக வைரவர் ஊரில் வலம் வரும் போது ஒருத்தருக்கும் இரவில் நடமாடத் துணிவு இருக்காது என்று கணக்குப் போட்டு, தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சின்னத் துண்டு காணியை வைரவர் கோயிலுக்காக முதலியார் தானமாகத் தந்தார்.

சின்னதாகக் கட்டப்பட்ட  கோயிலுக்கு, வைரவர் குடியிருந்த அறையின் வாசலில் ஒரு அலங்கார வளைவாக பித்தளையால் செய்த விளக்குகளையும் அமைத்துக் கொடுத்தார் முதலியார். ஒரு வாரம்தான் ஆகியிருக்கும். வைரவர் இருட்டில் இருந்தார். விளக்குகளைக் காணவில்லை. தன் விளக்குகளைக் காப்பாற்ற முடியாத வைரவரால் தனக்கு ஒரு பயனும் வரப் போவதில்லை என்று முதலியாருக்கு விளங்கி விட்டது. துன்னாலை என்ற இடத்தில் இருந்து ஒருவரை அழைத்து வந்து தன் வீட்டில் காவலுக்கும் எடுபிடி வேலைகளுக்கும் வைத்துக் கொண்டார்

வைரவருக்கு நாள்தோறும் மாலையில் வடைமாலை போட்டு பூசை நடந்தது. வைரவர், கோயிலுக்குள்ளேயேதான் இருந்தார். போ.மு (போராட்டத்துக்கு முன்னர்), போ.பி இரண்டு காலத்திலும் வைரவர் எதற்காகவும் கவலைப்பட்டதே இல்லை. லண்டனில் இருந்து வந்த விஸ்ணு என்பவர் இப்பொழுது வைரவருக்கு மடம் கட்டித் தந்திருக்கிறார்.

எந்தக் காலத்திலும் நேரடியாக வந்து கடவுள்  “பக்தா, எனக்கு ஒரு கோயில் கட்டித் தாஎன்று மனிதனிடம் கேட்டதே இல்லை. எப்பொழுதும் கனவில்தான் வருவார். ஆனாலும் சமீப காலமாககடவுள் கனவில் வந்தார்என்று சொல்பவர்கள் இல்லை என்ற நிலை வந்திருக்கிறது. கனவிலும் மனிதனிடம் வர கடவுள் பயப்படுகிறாரோ தெரியவில்லை.

யேர்மனியில் நான் வசிக்கும் பாடன் வூர்ட்டம் பேர்க் (Baden Württemberg) மாநிலத்தில் அங்கொன்று இங்கொன்றாக பல கடவுள்கள் வாசம் செய்கிறார்கள். அதிலும் மாநிலத்தின் தலைநகரான ஸ்ருட்காட் (Stuttgart) நகரில் இரண்டு பிள்ளையார்கள் இருக்கிறார்கள். ஒருவர்புலிப் பிள்ளையார்மற்றவர்புளொட் பிள்ளையார்’. ஆக, பிள்ளையாளர்களின் உரிமையாளர்கள் யார் யார் என்று இப்பொழுது உங்களுக்கு விளங்கி இருக்கும்

‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு க் கொண்டாட்டம்என்பார்கள்இங்கே கடவுள்களுக்குத்தான் கொண்டாட்டம். யேர்மனி வாழ் தமிழ் அமைப்பொன்றின் உள்வீட்டுக் கலவரத்தால் பிரிந்தவர்களால் இப்பொழுது பிள்ளையாரின் தம்பி சிறீ பாலமுருகன்18.10.2023 அன்று 10:48 முதல் 12:00 மணிவரை உள்ள சுபமுகூர்த்த வேளையில் ஸ்ருட்காட் நகரில் குடியேற இருக்கிறார். இந்த விபரம் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. அந்த விபரத்தில் தலைவர், செயலாளர் தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டது மட்டுமல்லாமல் மறக்காமல்  கோயில் குருக்களின் தொலைபேசி எண்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எழுபது வருடங்களுக்கு முன்னர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

“கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே

கருத வேண்டியதை மறந்தாச்சு - பழங்

கதைகளைப் பேசி காலம் வீணாச்சு

photo- P.S.பிரபா (யாழ் இனையம்)

 

கவி அருணாசலம்

Edited by Kavi arunasalam
ஒரு வரி சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

எங்கள் கிராமத்தில் வைரவர் கோவில் உருவாக வள்ளிப்பிள்ளை என்பவரின் கனவில் வைரவர் வந்து சொன்னதே காரணமாக இருந்தது. வெள்ளைக்காரனிடம் இருந்து இலங்கை சுதந்திரத்தை பெறுவதற்கு முன்னர் நடந்த சம்பவம் அது.

இந்த முதலியாரின் வாசிகசாலைக்கு அருகில் ஒரு கோயிலையும் கண்டதாக நினைவு.. ஆனால் எந்தக்கடவுளின் கோயில் என பார்க்கவில்லை.. 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, P.S.பிரபா said:

இந்த முதலியாரின் வாசிகசாலைக்கு அருகில் ஒரு கோயிலையும் கண்டதாக நினைவு.. ஆனால் எந்தக்கடவுளின் கோயில் என பார்க்கவில்லை..

அதேதான். அவரேதான் வைரவர். படத்தை இணைத்திருக்கிறேன். பாருங்கள். காவல் தெய்வத்தையே வெளியே வரவிடமால் உள்ளே எப்படிப் பூட்டி வைத்திருக்கிறார்கள் என்று. e60cab42-b267-4a03-80d8-f5adfa8a21ba.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமான உங்களது நடையில் சிறப்பாக .......!  😂

பகிர்வுக்கு நன்றி கவி அருணாசலம்..........!  

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2023 at 05:02, Kavi arunasalam said:

அதேதான். அவரேதான் வைரவர். படத்தை இணைத்திருக்கிறேன். பாருங்கள். காவல் தெய்வத்தையே வெளியே வரவிடமால் உள்ளே எப்படிப் பூட்டி வைத்திருக்கிறார்கள் என்று. e60cab42-b267-4a03-80d8-f5adfa8a21ba.jpg

தகவலுக்கு நன்றி. 

கடவுள்களுக்கும் சுதந்திரம் இல்லைத்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.